தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, September 29, 2012


 BSNL தின சலுகை :
 13வது BSNL தினத்தையொட்டி பிரிபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு கீழ்க்கண்ட சலுகைகளை மாநில நிர்வாகம் வழங்க உள்ளது.
 சலுகை காலம் : 01-10-2012 முதல் 07-10-2012 வரை
Sl.No. MRP of Top-up voucher/C-top-up/Flexi top-up in Rs. (incl. of S.Tax) Usage value offered with Top-up voucher in Rs.
1 200 240
2 500 600
3 1000 1200
4 6000 7200
 உததரவு எண் : GM S & M-CM/165/RCVs& TOPUPs/2012-13/98 Dated @ Chennai-6 the 26.09.12

Friday, September 28, 2012

IDA உயர்வு 
      IDA உயர்வு அக்டோபர் 2012 முதல் 5.8 % உயர்ந்துள்ளது.   மொத்தம் IDA 67.3 %.

Saturday, September 22, 2012

சர்க்கரை நோயாளிகளுக்கு இனி அரிசி சாத(க)ம்

சர்க்கரை நோய் உள்ள 6 கோடி இந்தியர்கள் இனி தயங்காமல் அரிசி சாதம் சாப்பிடலாம்.

ர்க்கரை நோய், உடல் பருமன், அதிகப்படியான கொழுப்பு இப்படி எந்தப் பிரச்சினை வந்தாலும் முதலில் நாம் தவிர்க்க நினைக்கும் உணவு அரிசி. ஆனால் ஒட்டுமொத்தமாக அரிசியை வில்லனாகப் பார்க்க வேண்டிய அவசியம் இனி நமக்கு இல்லை. ஏனென்றால் இந்தியாவில் விளையும் அரிசி, சர்க்கரை நோய்க்குப் பாதகமானது அல்ல என்று சர்வதேச ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ள 6 கோடி இந்தியர்கள் இனி தயங்காமல் அரிசி சாதம் சாப்பிடலாம்.

200க்கும் அதிகமான நெல் வகைகள் உலகம் முழுவதும் பயிரிடப்படுகின்றன. இதில் இந்தியாவில் விளையும் நெல் வகைகளிலிருந்து பெறப்படும் அரிசி  உடல் பிரச்சினைகளுக்கு எதிரி இல்லை என்று சமீபத்தில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (International Rice Research Institute - IRRI  ),  ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் கிளைசீமிக் குறியீடு (Glycemic index -  GI) இந்தியாவில் விளையும் அரிசியில் குறைவாகவே உள்ளது.

இந்த GI  குறியீட்டை 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். 55 அல்லது அதற்கும் குறைவான அளவில் உள்ளது முதல் வகை. 56லிருந்து 69 வரை உள்ளவை 2வது வகை. கிளைசீமிக் அதிகமாக உள்ள 3 வது வகை 70க்கும் அதிகமாக GI குறியீடு உள்ளவை.

சுவர்ணா, சம்பாவில் மேம்படுத்திய மஹ்சூரி போன்ற நாம் பயன்படுத்தும் பெரும்பாலான அரிசி வகைகளின் GI  குறியீடு 55க்கும் குறைவாகவே உள்ளது. அதேபோல பாசுமதி அரிசி 2வது பிரிவில் (gi 60) வருகிறது.  

அதுசரி, நாம் சாப்பிடும் உணவு உடல் பிரச்சினையை உண்டாக்குமா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?

உணவு சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு வேகத்தில் அதிகரிக்கிறது என்பதைப் பொறுத்து குறிப்பிட்ட உணவில் உள்ள கிளைசீமிக் அளவு (glycemic index GI கணக்கிடப்படுகிறது. உணவுப் பொருளில் உள்ள சர்க்கரைத் தன்மை கிளைசீமிக். குறிப்பிட்ட உணவை சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரித்தால் அதில் GI  அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம். ரத்த சர்க்கரையின் அளவு மிக மெதுவாக ஏறினால் அந்த உணவில் குறைந்த அளவு கிளைசீமிக் உள்ளது. கிளைசீமிக் அளவு 55 அல்லது அதற்கு குறைவாக உள்ள உணவுகளே நல்லது.

GI  55 அல்லது அதற்கு குறைவாக உள்ள உணவுகள் பெரும்பாலான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகள், அவரை வகைகள் அனைத்தும்.

ந்த ஆய்வு குறித்து கோவை கே.ஜி.மருத்துவமனை மூத்த டயட்டீஷியன் சுபத்ரா சுந்தர் கூறும்போது, “இந்திய அரிசியில் கிளைசீமிக் குறியீடு குறைவாக உள்ளது என்பது நல்ல விஷயம். குறைவாக உள்ளது என்பதற்காக 3 வேளையும் அரிசியையே சாப்பிடுவது கூடாது. அவரவர்களின் உடல் உழைப்பைப் பொறுத்து தினமும் 1800லிருந்து 2400 கலோரி தேவை. 100 கிராம் அரிசி சாதத்தில் 360 கலோரி உள்ளது. ஒரு வேளை மட்டும் குறிப்பாக  சர்க்கரை நோய் உள்ளவர்கள் 100 கிராம் சாதம் சாப்பிட்டால் போதும். நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் என்று உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசியில் (பிரவுன் ரைஸ்) வைட்டமின்கள் அதிகம் என்பதால் அதையும் அவ்வப்போது சாப்பிடலாம். திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, கேரட் போன்றவற்றில் GI  மிகக் குறைவு. எனவே இவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம். அதேபோல கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள். கிளைசீமிக் அளவு குறைவாக உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் பருமன், ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் போன்ற பொதுவான உடல் பிரச்சினைகள் வராது. உடற்பருமன் உள்ளவர்கள், கிளைசீமிக் குறைவாக உள்ள உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதிகப்படியான உடல் எடை குறையும்.”

Saturday, September 15, 2012

சில்லறை வர்த்தகத்தில் 51 % அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு

சில்லறை வர்த்தகத்தில் 51 % அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு

சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு உள்நாட்டில் பலத்த எதிர்ப்பு உள்ள நிலையில் மத்திய அரசு அதிரடியாக இந்த முடிவை அறிவித்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய புரட்சியாக இது கருதப்படுகிறது. எனினும் நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
விமானப் போக்குவரத்து துறை: இவை தவிர தகவல் ஒளிபரப்புத் துறையில் 49 சதவீதமாக உள்ள நேரடி அன்னிய முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்தவும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 49 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவை தவிர மின் துறையிலும் 49 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இதில் 26 சதவீதம் நேரடி அன்னிய முதலீடாகவும், 23 சதவீதம் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மூலமும் அனுமதிக்கப்படும்.
அடுத்த அதிர்ச்சி... மத்திய அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் வழங்குவதில் கட்டுப்பாடு ஆகிய அறிவிப்புகள் மூலம் மத்திய அரசு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இப்போது அடுத்த கட்டமாக நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது மத்திய அரசு.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் அப்போது முயற்சி கைவிடப்பட்டது.
விரும்பும் மாநிலங்கள் செயல்படுத்தலாம்: மத்திய அமைச்சரவையின் முடிவை தில்லியில் அறிவித்துப் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, "சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த விஷயத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டை மதிக்கிறோம். தனது மாநிலத்தில் அதனை செயல்படுத்துவதா அல்லது வேண்டாமா என்பதை அவர் முடிவு செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் இதில் விருப்பமுள்ள மாநிலங்களுக்கும் அவரைப் போலவே உரிமைகள் உண்டு.
பல இலச்சினை (மல்டி பிராண்ட்) சில்லறை வர்த்தகத்தில் குறைந்தபட்சமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.550 கோடி) நேரடி அன்னிய முதலீடாக அனுமதிக்கப்படும். இவற்றில் பாதியளவு கிராமப்பகுதிகளில் சேமிப்பு கிடங்குகள், குடோன்கள் அமைக்க பயன்படும்.
நிபந்தனைகள்: குறைந்தபட்சம் 10 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட நகரில்தான் பெரிய அளவிலான சில்லறை விற்பனைக் கடைகள் அனுமதிக்கப்படும். மலைப் பகுதி நகரங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
விமானத்துறையில் ஏற்கெனவே 49 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்போது உள்நாட்டு விமானப் போக்குவரத்திலும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் கிங்பிஷர், ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிதிச்சிக்கலில் சிக்கியுள்ள நிறுவனங்கள் பொருத்தமான வெளிநாட்டு நிறுவனங்களை கூட்டு சேர்த்துக் கொள்ள முடியும்.
மக்கள் நலனுக்காக... இது கடந்த நவம்பரிலேயே எடுக்கப்பட்ட முடிவுதான். அதனை நாங்கள் திரும்பப் பெறவில்லை. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை விரும்பாத மாநிலங்கள் அதனை அமல்படுத்தத் தேவையில்லை. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பாஜக மீது குற்றச்சாட்டு: தங்கள் கட்சியின் சித்தாந்தத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனை எதிர்க்கின்றனர். ஆனால் பாஜக இதனை வைத்து அரசியல் நடத்துகிறது. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர்.
தில்லி, ஜம்மு-காஷ்மீர், அசாம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹரியாணா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் இதனை வரவேற்கின்றன. பிகார், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா ஆகிய மாநிலங்களும் ஆர்வமாகவே உள்ளன என்று ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
"வேலைவாய்ப்பு, வளர்ச்சிக்கு உதவும்'
சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய நேரடி முதலீடு செய்ய அனுமதி தரும் முடிவானது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
பொருளாதார வளர்ச்சியை முன்வைத்து, அமைச்சரவை பல தீர்மானங்களை எடுத்துள்ளது. கடினமான தருணத்தில் நாட்டின் நலன் கருதி அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முதலீடு செய்ய இந்தியா ஒரு சிறந்த நாடு என்ற நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

Thursday, September 13, 2012

தோழர் A .M . கோபு அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.     



































தொழிற்சங்கவாதியும், தியாகியுமான தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாதது.   அவரின் மறைவுக்கு நமது மாவட்டச் சங்கம் கொடி தாழ்த்தி அஞ்சலி செய்கிறது 

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR