தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, December 25, 2014

சாதி தீண்டாமையை சுட்டுப் பொசுக்குவோம் !
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம் !

  • விடிந்த பின்னர் தான் ஏர் கட்ட வேண்டும் !
  • சூரிய உதயத்திற்கு பின்னர் தான் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் !
  • கரை ஏறித்தான் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும்!
  • வேலைக்கேற்ற கூலி வேண்டும் !
  • அனைவரும் விவசாய சங்கத்தில் சேரவேண்டும் !

1968-ம் வருடம், டிசம்பர் 25! தமிழக வரலாற்றில் கருப்பு நாள் !

கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட (தலித்) சாதியைச் சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர், இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண (நாயுடு) தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள்.
20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது.
இதைச் செய்த கொலைகாரர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தது , சென்னை உயர் (அ)நீதிமன்றம். ‘காரோட்டுகின்ற கைகள் கொலைசெய்யாது; பணக்காரர்கள் குற்றம் செய்யமாட்டார்கள்’ என வியாக்கியானம் சொன்னது, நீதிமன்றம்.
நோக்கியா
நோக்கியா செல்போன் கம்பெனி மூடப்பட்ட போது வேலை பறிக்கப்பட்ட 45,000 தொழிலாளர்களில் யார் எந்த சாதி என்பது தெரியாது.
பொசுக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் செய்த ‘குற்றம்’ என்ன?
  • தலித்துகளாக் பிறந்தது முதல் குற்றம்.
  • கூலி உயர்வு கேட்டும், பண்ணைக் கொடுமைகளுக்கெதிராகவும் போராடத் துணிந்தது இரண்டாவது குற்றம்.
  • சாதி பேதங்களைக் கடந்து வர்க்கக் கண்ணோட்டத்தை ஊட்டி வளர்த்த செங்கொடி இயக்கத்தில் பிணைத்துக் கொண்டது எல்லாவற்றையும் விட பெருங்குற்றம். செங்கொடி இயக்கத்தில் இணைத்துக் கொண்டதால் சுயமரியாதையும், உரிமை உணர்வும் பெற்றார்கள். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் செய்தார்கள்.
வெண்மணியிலிருந்து இந்தப் படுகொலைகள் துவங்கவில்லை. வெண்மணிக்குப் பின்னர் இவை முடிந்துவிடவும் இல்லை. விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது. சாதி வெறியர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டு வருவதை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் பெருமை பேசுகின்ற தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதிலும் சாதி-தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது.
“என்ன தோழரே! இப்பொழுதெல்லாம் சாதி – தீண்டாமையை யார் பார்க்கின்றனர்?” என்று ‘உலகறிந்த’ பலரும் நம்மை பார்த்து கேட்கின்றனர். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மனித வளம் குறித்த ஆய்வானது , கிராமப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒத்துக்கொள்வதாக தெரிவிக்கிறது. நகர்ப்புறத்திலோ ஐந்தில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிப்பதாக மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது. சாதி- தீண்டாமையானது பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.
எத்தனை இழிவுகள்! எத்தனைக் கொடுமைகள் !
அருந்ததி ராய்
அருந்ததி ராய் : தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளினப்டி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;
புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் இந்திய இழிவு என்ற கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளினப்டி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;
ஒவ்வொரு நாளும், நான்கு தீண்டப்படாத பெண்கள் தீண்டப்படுவோரால் கற்பழிக்கப்படுகிறார்கள்;
ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறாரக்ள், 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள்.
2012-இல் மட்டும் அதாவது தில்லியில் 23 அகவை நிரம்பிய பெண் கூட்டமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த ஆண்டில் மட்டும், 1574 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். (தலித்துகளுக்கு எதிரான கற்பழிப்புகளில் அல்லது ஏனைய குற்றங்களில் 10 விழுக்காடு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்பது பட்டறிவு), 651 தலித்துகள் கொல்லப்பட்டனர்.
இந்தக் கணக்கில் அடங்குபவை கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் மட்டுமே.  உடையவிழ்த்து அம்மண ஊர்வலம் நடத்துதல், மலந்தின்னச் செய்தல், நில அபகரிப்பு, சமூக ஒதுக்கல், குடிநீர் கிடைக்கவிடாது தடுத்தல் ஆகிய்வை அடங்குவதில்லை.
மசாபி தலித் சீக்கியர் ஒருவர் தன் மகளைக் கூட்டாக கற்பழித்தோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் துணிந்ததற்காக 2005ல் அவரது இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்ப்ட்ட செய்தி இந்த புள்ளிவிவரங்களில் அடங்கவில்லை என்கிறார் பஞ்சாபை சேர்ந்த பந்த் சிங்.
வெண்மணி தியாகிகள் தினம்

Saturday, December 20, 2014

ERP செயலாக்கம் 
ERP GO - LIVE 

தமிழகத்தில் 19/12/2014 நண்பகல் 12.00 முதல் ERP  திட்டம் செயலாக்கத்திற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக CGM காணொளி மூலம் ERP திட்டசெயலாக்கத்தைத் துவக்கி வைத்தார். ERP திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் DELOITTEE  குழு அறிக்கை அமலாக்கம் நடைமுறைப்படுத்தப்படலாம். 
எனவே காணொளிகள் மார்கழி மாத பஜனை போல் 
தொடர்ந்து  தமிழகத்தில்  நடைபெறும். 

ERP செயலாக்கத்தை தொடர்ந்து பல நாட்கள் தூக்கம் மறந்த 
நமது அதிகாரிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். 

ஆனால் GPF,விழாக்காலப்பணம்,டிசம்பர் மாத சம்பளம்,
ஒப்பந்த ஊழியரின் நவம்பர் மாத சம்பளம்,
ஓய்வு பெற்ற தோழர்களின் விடுப்புச்சம்பளம்
 ஆகியவற்றை நினைத்து நமது தோழர்கள் 
தூக்கம் இழக்க ஆரம்பித்துள்ளனர்.

 ERP திட்டம் GO-LIVE ஆனதற்கு நமது வாழ்த்துக்கள்.
அதே நேரம்  LIFE - GOING  ஊழியர்களின் பட்டுவாடாக்களும் விரைவில் 
GO-LIVE ஆக வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்

First Published : 20 December 2014 12:51 AM IST
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள 19 கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம், அகவிலைப்படி வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகளில் ஒரே மாதிரியான பணி செய்வோருக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும்.
ராஜீவ் ரஞ்சன் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் டிச. 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு 25 சத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனத் தமிழக அரசு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தமிழக அரசின் இந்தத அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வலியுறுத்தியும் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதில் வெள்ளிக்கிழமை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன் கஞ்சித் தொட்டியைத் திறந்து வைத்து, தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். பலத்த மழை பெய்த நிலையிலும் இப்போராட்டத்தில் ஏராளமானோர் குடை பிடித்தபடி கலந்து கொண்டனர்.

Friday, December 19, 2014

யூனியன் வங்கி 
புரிந்துணர்வு நீட்டிப்பு 
UNION BANK OF INDIA MOU RENEWAL 

BSNL ஊழியர்கள்  கடன் பெறுவதற்காக  
யூனியன் வங்கியுடன் போடப்பட்ட 
புரிந்துணர்வு ஒப்பந்தம் 
03/11/2014 தேதியுடன் முடிவடைந்திருந்தது. 
தற்போது மீண்டும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிலவரிச் செய்திகள்...

தற்போது BSNL ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடாக LIC நிறுவனம் மூலம் GSLI எனப்படும் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீட்டு முறை அமுலில் உள்ளது. தற்போது இந்த திட்டம் 31/07/2014 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அமுல்படுத்தப்படும் எனவும்,  
01/08/2014 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது எனவும் 
LIC கூறியுள்ளது.  IRDA எனப்படும்   ஆயுள் காப்பீட்டு
 ஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவிற்கிணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

01/08/2014க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 
புதிய திட்டம் அமுல்படுத்தப்படும்.
===============================================================
BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பதவிகளை நிரப்ப வேண்டும் என்பது ஊழியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை. அதன் அடிப்படையில் DIRECTOR (EB) பதவிக்கு திரு.N.K.மேத்தா அவர்களும், DIRECTOR(FINANACE ) பதவிக்கு திருமதி.யோஜனாதாஸ் அவர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 
==============================================================
சென்ற 2013-14 நிதியாண்டில் BSNLக்கு 7000 கோடி நட்டம் ஏற்பட்டாலும் மூன்று மாநிலங்கள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன. 
கேரளா 397 கோடியும், 
ஜம்முகாஷ்மீர் 9.37 கோடியும், 
ஒரிசா 5.16 கோடியும் 
லாபம் காட்டியுள்ளதாக இலாக்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
==============================================================
10/12/2014 அன்று நடைபெற்ற பதவி பெயர் மாற்றக்குழுக் கூட்டத்தில் முழுமையான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 
TTA பதவியை JUNIOR ENGINEER என அழைப்பது பற்றியும் 
SR.TOA பதவியை TELECOM ASSOCIATE/ SUERINTENDENT 
என அழைப்பது பற்றியும் 
தங்களுக்குள் பேசி பின் முடிவு சொல்வதாக
 நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

போனஸ் குழுக்கூட்டத்திலும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை. CDMA சேவை போனசிற்கு  கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது 
என்பது மட்டுமே சாதகமான அம்சம். 

JTO புதிய ஆளெடுப்பு விதிகளுக்கான ஒப்புதல் 
வழக்கம்போல கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மொத்தத்தில் ஊழியர்கள் பிரச்சினை தீர்வில்..
BSNL நிர்வாகத்தின் வழக்கமான 
கழுவுதலில் நழுவுதல் என்னும் நிலை தொடருகின்றது. 
செய்திகள் 

 மார்ச் 2015க்குள் மாநில அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு 
மாநிலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 
மார்ச் 2015க்குப்பின் வரும் விண்ணப்பங்கள் மார்ச் 2016ல்தான் பரிசீலிக்கப்படும் என கூறப்படுகின்றது.
 எனவே தோழர்கள் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிவு அடிப்படை பணிக்கு விண்ணப்பம் அனுப்புவது சம்பந்தமாக 
டெல்லி தலைமையகம் 15/12/2014 அன்று 
கீழ்வரும் விளக்கங்களை அளித்துள்ளது. 
  • ஏற்கனவே டெல்லி தலைமையகத்தால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • 30/09/2014 தேதி வரை 55ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெபரிவு  அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை
    ற்றிருந்த விண்ணப்பங்கள் மாநில மட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  • நீதிமன்றம்  மூலம் உத்திரவு பெறப்பட்ட விண்ணப்பங்களும், நிர்வாக கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட,  பரிதாபமான   குடும்ப சூழல் உள்ள விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  •  ஊழியர் இறந்தபோது உள்ள குடும்ப சூழல் கணக்கில் கொள்ளப்பட்டு மறு பரிசீலனை என்பது மேற்கொள்ளப்படும்.
மாற்றலுக்கு உள்ளான பல அதிகாரிகளும் ஊழியர்களும் டெல்லி தலைமையகத்திற்கு படையெடுத்து அரசியல் செல்வாக்கு மூலம் மாற்றலை ரத்து செய்ய முயற்சி செய்கின்றனர். 

இனிமேல் யாரும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது 
BSNL நன்னடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லித்தலைமையகம் 16/12/2014 அன்று எச்சரித்துள்ளது. 
ஆனால் அதே தேதியில் பல அதிகாரிகளுக்கு மாற்றலை 
மறு பரிசீலனை செய்தும் நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு CMD இன்னும் நியமிக்கப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் தனது பரிந்துரையை DOT அரசிற்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
இந்நிலையில் தற்போதுள்ள தற்காலிக CMDகளுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
22/12/2014 அன்று 30 அம்சக்கோரிக்கைகள் மீது நிர்வாகத்துடன் JAC ஊழியர் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்துகின்றது.

23/12/2014 அன்று  டெல்லியில்   அனைத்து சங்கத்தலைவர்களுக்கும் 
ERP பற்றி விரிவான விளக்கவுரை நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது. மாவட்ட மட்டங்களிலும்  ஊழியர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் ERP பற்றிய உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR