தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, June 30, 2013

சின்ன புள்ளத்தனம் 

      சிறப்பாக நடந்த வேலூர் செயற்குழு   இரவு 10 மணி வரை நடந்ததற்கு என்ன காரணம்.  தேவையில்லாத வெளிநடப்பு என்ற சிறுபிள்ளைதனமான செயல்தான். சில அரசியல்வாதிகள் செய்த செயலை நாம் செய்யலாமா?   அந்த சிறுபிள்ளைதனத்தை ஆதரிக்கவும் ஒரு சிலர் இருக்கிறார்களே என்பதும் நமது வேதனை.

எதனால் வெளிநடப்பு? 
    சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து.   அவர்கள் யார்?  
ஒருவர் மதுரை சேது.  இன்னொருவர் குடந்தை ஜெயபால்.

மதுரை சேது:  இவர் மதுரையில் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி தனது பணி ஓய்வு மூலம் வந்த பணத்தையும் மாநாட்டில் ஈடுபடுத்தி மாநாட்டை நிறைவுசெய்து அதன்  வரவு செலவு கணக்குகளை வேலூர் செயற்குழுவில் தாக்கல் செய்ய வருகிறார்.  மாநாட்டுக்காக கூடுதலாக அவரால் செலவு செய்யப்பட்ட ரூபாய் 2 லட்சம் தொகையினை அளிக்க நாம் முடிவு செய்ய வேண்டிய நிலையில்தான் அவரை நீக்கிட கோரி வெளிநடப்பு. 

குடந்தை ஜெயபால்:   இவரும் மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க தம்மை பல்வேறு பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர். பொறுப்பாளர் தேர்வில் பிரச்சினை ஏதும் வாராதிருக்க போடப்பட்ட கமிட்டியிலும், தேர்தல் நடத்த போடப்பட்ட கமிட்டியிலும் ஈடுபட்டு உழைத்தவர். இவரையும் நீக்கிடக் கோரித்தான் வெளிநடப்பு. 

     நன்றியோடு நினைத்துப் பார்த்து, போற்றிப் பாராட்ட வேண்டியவர்களை, சிறப்பு அழைப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை, மேடையில் வைத்துக் கொண்டே அவர்களை நீக்க வேண்டும் என்று சொல்வது  அவர்களை அவமானப்படுத்துவது போல் ஆகாதா.

     அதையும் தாண்டிஇதற்காக வெளிநடப்பு என்பதும் சரியா?   சரி! எதற்காக அவர்களை நீக்க வேண்டும். அவர்கள் இருந்தால் என்ன பாதிப்பு ஏற்படும்.  இவைகளையெல்லாம் அமைப்பு நிலை விவாதத்தில் சபை அறிய   தெளிவாக  பேசுங்கள் என்று மாநிலச் செயலர் சொன்ன  போதும் ஏன்  அதை மறுதலிக்க வேண்டும்.

        மேலும், வெளிநடப்பு செய்தவர்கள் மதியம் ஒரு மணிக்கு மேல் எழுந்து போய்விட்டால் அதற்குப் பெயர்  உண்ணாவிரதமா?  இதற்கெல்லாம் போய்  ஜெகன் அணுகுமுறைகளை நினைவு கூறலாமா?  இது ஜெகனுக்கு செய்த துரோகமாகாதா! என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. 

     எனவேதான் இதை சிறுபிள்ளைத்தனமாக செய்துவிட்டார்கள் என்று சொல்லும் போது  மனது சற்று ஆறுதல் கொள்கிறது. எனவே, இந்தத் தோழர்கள் இனியாவது ஆரோக்கியமான விவாதத்திற்கு தயாராகட்டும். 

எஸ். சிவசிதம்பரம். 
பட்டுக்கோட்டை.     

Saturday, June 29, 2013

பணி ஓய்வு பாராட்டு


தோழர் ராமதுரை 30-06-2013 ஓய்வு பெறுகிறார்கள் ,1953 ல் பிறந்தவர் , 1976 ல் டெலிபோன் ஆபரேட்டராக பணியை துவக்கி ,பிறகு       
எழுத்தராகபணி தொடர்ந்து ,தனது பணி காலத்தில் முழுமையாக                   
சங்கத்தில்பொறுப்பேற்று கிளை செயலராய்,வழிகாட்டியாய்,களபோராளியாய்,போராட்டதில் ஈடுபட்டவர் 
mazdoor போராட்த்தில் ,பதவி உயர்வு கோரி நடத்தப்பட்ட போராடத்தில் 4 increment cut பெற்றவர் ,தொழிற்சங்க போராளி ,மனிதாபிமானம் உள்ளவர் ,நம் தோழர்கள் வீட்டு பிள்ளைக்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலை பெற்று தந்தவர் ,தோழர்கள் பட்டாபி ,ரயில்வே முருகப்பன் ,தற்போதைய த.தே.பொ.கட்சியின் தலைவர் வெங்கட்ராமன் ஆகியோரோடு இணைந்து திருவாரூர் தொழிற் சங்க கூட்டமைப்பை தொடங்கியவர் ,சிதறிக்கிடந்த தொழிலாளர்களை ஒன்றிணைத்தவர் ,தோழர்கள் R .k ,ஜகன் ,தமிழ்மணி ,மாலி ,முத்தியாலு போன்றவர்கள் மாநில செயலராய் இருந்த காலத்தில் இவர்   
இயக்கத்தின் ஹீரோ ,மாநில செயலர் தோழர் பட்டாபியின் சம காலத்தவர் ,எளிமை ,கொள்கை உறுதி ,போராட்டகுணம் ,பிறருக்கு உதவுதல் இதுவே இவரின் குணநலன் ,இவரின் ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம் ,,,,,,,,,  



நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .

Wednesday, June 26, 2013

வேலூர் மாநில செயற்குழு

  • நிறைவான செயற்குழு
  • நிரம்ப விவாதங்கள் நடத்திய செயற்குழு 
  • ஊழியர் பிரச்சனையை கவலையோடு பரிசீலித்த செயற்குழு 
  • சேவையை பற்றி அக்கறையாய் விவாதித்த செயற்குழு 
  • shifting charges /installation charges /annual rent withdrawal காரணமாக landline சேவையில் ஏற்பட்ட தாக்கம் பற்றி விவாதித்த செயற்குழு 
  • T .M தேர்விற்கு கல்வி தகுதியை தளர்த்திட கோரிய செயற்குழு 
  • TTA to JTO தேர்வெழுதிய தோழர்களின் நியாயமான உணர்வுகளை/கோரிக்கைகளை பூர்த்திசெய்ய வேண்டுமென வலியுறுத்திய செயற்குழு 
  •  78.2% IDA MERGER வரவே வராது என பிரச்சாரம் செய்து, வந்துவிட கூடாது என எண்ணியவர்களின் எதிர்பார்ப்பை உடைத்தெறிந்து ஒன்றுபட்ட போராட்டம் மூலம் பெற்ற மகிழ்வில் கூடிய செயற்குழு 
  • சங்க அங்கீகார வெற்றிக்கு பின் பெருமித உணர்வோடு கூடிய செயற்குழு 
  • BONUS எமது பிறப்புரிமை என முழங்கிய செயற்குழு 
  • இழந்த ALLOWANCES யை மீட்பது பற்றி ஆய்வு செய்த செயற்குழு 
  • AUGUST 2013-DELHI கருத்தரங்கம் செல்வதற்கு தயாரிப்பு செய்த செயற்குழு
  • அமைப்பு ஒழுங்கீனங்களை ஒழுங்கு படுத்த வேண்டுமென வலியுறுத்திய செயற்குழு 
  • தேசியக்கொடி- தோழர் தமிழ்மணி ,
  •  சம்மேளனக்கொடி-தோழர் வேலூர் மதி,
  •  வரவேற்புரை - தோழர் அல்லிராஜா /சென்னகேசவன்,
  • அஞ்சலி உரை -தோழர் நெய்வேலி லோகு .
  • கூட்டத்தை தோழர்கள் நூருல்லா ,மாநில தலைவர் மற்றும் லட்சம்,மாநில துணை தலைவர் தலைமையேற்று நடத்தி தந்தார்கள்.
  • மாநில செயலர் தோழர் பட்டாபி கவலையோடு கவனமாக ,பொறுப்போடு AGENDA வை அறிமுகப்படுத்தி பேசினார்.
  • தோழர்கள் R .K ,சிறப்பு அழைப்பாளர்கள்,குடந்தை ஜெயபால் ,மதுரை சேது ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
  • மாநில,மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் மற்றும் அகில இந்திய செயலாளர் தோழர் ஜெயராமன்,அகில இந்திய அமைப்பு செயலாளர்  தோழர் S .S .G ஆகியோர்கள் விவாதத்தில் கலந்துகொண்டனர்.
ஆறு மாத காலம் விலகி நின்று, தொல்லை கொடுத்து,வேடிக்கை பார்த்து ,அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாநில சங்க நிர்வாகிகள் மாநில செயற்குழுவை அமைதியாக நடத்தவிட கூடாது என்ற எண்ணத்தோடு வந்து எண்ணம் ஈடேறாது ஏமாற்றத்தோடு சென்றனர்.
இவர்கள் உணவருந்தவில்லை என்பதற்காக மூத்த தோழர்கள் R .K ,குடந்தை ஜெயபால் ,மதுரை சேது ,தமிழ்மணி, S .S .G ஆகியோரும் மதிய உணவு எடுத்துக்கொள்ளவில்லை.வெளிநடப்பு செய்தவர்கள் வெளியில் சென்று hotelலில் சாப்பிட்டு விட்டார்கள் என்பதை உறுதி செய்த பின்னால் மாலை 5 மணிக்கு மேல் உணவெடுத்து கொண்டார்கள் .தோழர் பட்டபியோ மதியம்  சாப்பிடாமலே இருந்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் தான் சாப்பிட்டார் .
 தோழர் மாலி அவர்களே !
 " கேட்டதை எல்லாம் நம்பிவிடாதீர்கள்  ,நம்பியதை எல்லாம் website இல் எழுதிவிடாதீர்கள் "
நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .

Tuesday, June 25, 2013

இரண்டாவது மகாத்மா -நெல்சன் மண்டேலா

                நெல்சன் மண்டேலா ( பிறப்பு: ஜூலை 18, 1918), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.
                                       தொண்ணூற்று நான்கு வயதான மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
                                        கேப்டவுண்: ஆஸ்பத்திரில் அனுமதிக்கப்பட்டுள்ள நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரான 94 வயது நெல்சன் மண்டேலா நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக ஜூன் 8-ம் தேதி பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, துணை அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் அன்று மாலை மண்டேலாவை மருத்துவமனை சென்று பார்த்தனர். அதன் பின்னர் அதிபர் ஜூமோ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "மண்டேலாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினரை அதிபர் ஜேக்கப் ஜூமா சந்தித்து அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். கடந்த 24 மணி நேரமாக மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் டாக்டர்கள் மேற்கொண்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது .
நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .


Monday, June 24, 2013

இதுதான் உங்கள் ஜனநாயகமா ?

தோழர் C.K.மதிவாணனுக்கு பணிஓய்வு பாராட்டு விழாவிற்கு 

வயிற்றெரிச்சலில் சிலர் தம் வழக்கம்போல் வதந்தியை பரப்புகிறார்  60 தங்க காசுகளை தரப் போகிறார்கள் என்று !!
என்ற செய்தியை வெளியிட்டது கோவை வலைத்தளம்.

                          ஆனால் அதற்கு மாறாக நடைபெறுவது என்னவென்றால் தஞ்சை மாவட்டத்தலைவர் தோழர் பிரின்ஸ் ,தஞ்சை மாவட்டபொருளாலர் தோழர் பக்கிரிசாமி மற்றும் இதர முக்கிய நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமல் BSNL பாதுகாப்பு மாநாடு மற்றும் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் தோழர் C.K.M அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா என்ற பெயரில் வசூல் நடந்துகொண்டிருகிறது .ஒருங்கிணைப்பாளர்/மலர் குழு:தோழர்சுப்புராயன் ஒருங்கிணைப்பாளர்/விழா குழு :தோழர் ஜெயராமன் வரவேற்பு குழு :திருச்சி  என போடப்பட்ட ரசீதுகள் மூலம் வசூல் நடைபெற்றுகொண்டிருகின்றது.
                           
                         இவையாவும்  மாநில சங்கத்திற்கோ மாவட்ட சங்கத்திற்கோ தெரியாமல் நடைபெற்றுகொண்டிருகின்றது.
இது நமது மாவட்ட செயலர் பன்னீருக்கு தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இது அவருக்குதெரிந்தே நடைபெற்றால் கண்டிக்கதக்கது.முறையாக மாவட்ட செயற்குழுவைக்கூட்டி விவாதித்து முடிவெடுக்காமல் நடத்தப்படும்  எந்த வசூலானாலும்  அது தவறானது.ஒரு வேலை அவருக்கு தெரியாமலே இந்த வசூல் நடைபெறுகிறது என்றால் அது மிகக்கடுமையான கண்டனத்திற்குரியது.
                       
                       இது போன்ற வசூல் மூலம் விழா நடத்துவதை தோழர் மதியே விரும்பமாட்டார்  என்றே  நம்புகிறோம்.எது நடத்தினாலும் அமைப்பு விதிமுறைக்கு உட்பட்டு விவாதித்து முடிவெடுத்து அமுல் படுத்த வேண்டுகிறோம்.அதுதான் அமைப்பிற்கும், பொறுப்பாளர்களுக்கும் நல்லது. ஏற்கனவே நமது தஞ்சை வலைத்தளத்தில் அணி விழாவா?தனி விழாவா? எனக்கேட்டதற்கு நடராஜனே நாவை அடக்கு என்றெல்லாம் எழுதினார்கள்.முன்னாள்
மாநிலபொருளாலரும்,தற்போதைய அகில இந்திய செயலரும் ஆகிய  தோழர் ஜெயராமன் முறையற்ற வகையில் அமைப்பு கட்டுப்பாடு இல்லாமல்  மனம் போன போக்கில் செயல்படுவது சரியல்ல.
                       இது போன்ற முறையற்ற செயலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .

Tuesday, June 18, 2013

காஞ்சி வலைத்தளம் -காக்கட்டும் கண்ணியம்


காஞ்சிவலைதளத்திற்கு கனிவான வணக்கங்கள்........நான் மாவட்டசெயலராய் பொறுப்பேற்றதிலிருந்து தஞ்சை வலைதளத்தை நடத்திவருகிறோம்.தோழர் சீனாதானாவும் ,நானும் வெப்சைட் நிர்வகிக்கிறோம் ,தற்போது அதே நிலைதான் தொடர்கிறது ;ஏதோ புதிதாய் கண்டுபிடித்ததை போல எங்களின் மாவட்ட செயலருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக website நடத்துவதாக விஷமத்தனமாக  எழுதிஉள்ளீர்கள் .நான் எழுதியுள்ள விஷயத்தை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் .தோழர் மதியை குறை கூறியுள்ளேனா?அல்லது திருச்சியில்  விழா நடத்தப்படும்  விதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளேனா? தேவையில்லாமல் தோழர் பட்டாபி குறித்தும் அவர் வகிக்கும் மாநிலச்செயலர் பொறுப்பையும் மற்றும் என்னையும் சிறுமை படுத்தி எழுதியுள்ளதிலிருந்து உங்களின் சிந்தனை /மன வக்கிரம் வெளிப்பட்டுள்ளது .தொழிலாளி வர்க்க போராட்ட களத்தில் எனது 18 வயது முதல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறேன்.பயமுறுத்தல் ,அச்சுறுத்தல் ,மிரட்டல் இவைகள் யாவும் முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தும் அதே காலாவதியான நடைமுறை வாசகம் உங்கள் எழுத்தில் தெரிகிறது .இது தொழிலாளி வர்க்க நடைமுறை பாதையிலிருந்து நீங்கள் விலகியதன் அடையாளம் .
தேவையில்லை தோழரே! விமர்சனம்/சுயவிமர்சனம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கும் /கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இயல்பாய் இருக்க வேண்டிய நற்குணங்களில் ஒன்று .உங்கள் எழுத்தில் அது தெரியவில்லை குணக்கேடு தான் தெரிகிறது.

  அச்சுறுத்தலும் -அஞ்சுதலும்
  பயமுறுத்தலும்-பயந்துபோதலும்
  அடக்குதலும் -அடங்கிபோதலும்
  மிரட்டுதலும் -மிரண்டுபோதலும்
  ஒதுக்குதலும் -ஒதிங்கிபோதலும்
நமது வர்க்க குணமல்ல -நாம் எல்லோரும்
ஒரே பாசறையில் தான் வர்க்கம் பயின்றவர்கள்
தேவையின்றி என்னை மேலும் எழுதவைக்காதீர்கள் .


நன்றி ,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL ,
THANJAVUR .

Monday, June 17, 2013

திருச்சியில் விழாவாம் அழைக்கிறது கோவை

தோழர் C .K .மதிவாணன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா 
திருச்சி மலைக்கோட்டை மாநகரிலே !! 
ஜூலை 18 மதியம் !!   வாரீர் !! வாரீர் !!!
திருச்சியில் விழாவாம் அழைக்கிறது கோவை .
பணி ஓய்வு பாராட்டுவிழா சிறக்க வாழ்த்துக்கள்.ஆனால் எமது கேள்வி/சந்தேகம் என்னவென்றால் -இந்த விழாவிற்கான முடிவு எங்கே எடுக்கப்பட்டது? திருச்சியும்,கோவையும் தமிழ் மாநில சங்கத்தின் அங்கமா? இல்லை சென்னை தொலைபேசியின் அங்கமா ?
தோழர் C.K.M  அவர்களுக்கு சென்னை தொலைபேசியில் விழா -தமிழ் மாநில சங்கத்திற்கு அழைப்பில்லை -தேவையுமில்லை .இதற்கு முன்பாக எத்தனையோ தலைவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் .தோழர் ஜெகன் ,முத்தியாலு ,R.K ,மாலி ,தமிழ்மணி போன்ற தன்னிகரில்லா தலைவர்கள சங்கத்தின் மாநில செயலர் மற்றும் சம்மேளன பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்கள் .அவர்கள் அனைவருக்கும் தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் தான் விழா எடுக்கப்பட்டது .எந்த மாநிலத்தின் பொறுப்பில் உள்ளனரோ அந்த மாநில சங்கம் விழா எடுப்பதுதான் மரபு.போகட்டும் ,தோழர் C.K.M அவர்கள் அகில இந்திய துணை பொதுச்செயலர் என்பதால் இந்த விழா எனில் -அதனை தமிழ் மாநில சங்கம் தான் முடிவு செய்திட வேண்டும் .மாவட்ட சங்கங்கள் அல்ல .எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டிய விழா எனில் அதனை குழு விழாவாக ஆக்க முயற்சிக்கிறது திருச்சியும்/கோவையும் .
கோவை வலைதள வசனத்தை உங்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.
வயிற்றெரிச்சலில் சிலர் தம் 
வழக்கம்போல் வதந்தியை பரப்புகிறார்  
60 தங்க காசுகளை தரப் போகிறார்கள் என்று !!

" தமிழக ஆட்சி மாற்றத்திற்கே காரணமானவர் "
என்று வசிஷ்டை வாயாலேயே 
பேரும் புகழும் பெற்றவர் !
அதற்கு ஈடாக கொடுத்த  
  எம்.எல்.ஏ பதவியை மறுதலித்தவர்.

                                        "இது  மணிவிழாவா ? அல்ல 
                                          தனி விழாவா ? அல்ல 
                                          ஒரு அணியின்  விழாவா ?"
   என்கிற ஐயம் தோழர்கள் மத்தியில்  எழுந்துள்ளது .
தலைவர் C.K.M அவர்களுக்கும் ,அவர்தம் குடும்பத்திற்கும் எமது வாழ்த்துக்கள் 


நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL ,
THANJAVUR .

 

Saturday, June 15, 2013

JUNE 16 சர்வதேச தந்தையர் தினம்

                   


JUNE 16 சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. 
       "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே 
                      ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே " 

என்றான் பாரதி .

 ஒவ்வொருவர் வாழ்விலும் "தந்தை " என்னும் பாத்திரம் ஒவ்வொரு அனுபவத்தை கொடுத்திருக்கும்.தந்தை என்பவர் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு உணர்வை தருபவராய் ,அரவணைப்பை தருபவராய் ,வழிகாட்டியாய் ,
முன்உதாரணமாய் விளங்க வேண்டும் .

                      " தந்தை சொல் மிக்க மந்திரம்  இல்லை " என்று சொல்பவரும் உண்டு.நமது பகுதியின் பிதாமகன் தோழர் குப்தா ,ஜெகன் ஏராளமான குடும்பங்களுக்கு வெளிச்ச கீற்றை தந்தவர்கள் .
அடிமட்ட தொழிலாளியாய் வாழ்கையை தொடங்கிய நம் தோழர்களின் .ஒவ்வொருவர் வாழ்க்கை பயணத்திலும் நிழலாய் துணை நின்றவர்கள் நம் தோழர்கள் மனதில் நிலைத்து நிற்பவர்கள் .தோழர் குப்தா ,ஜெகன் 
திருஉருவப்படம் இல்லாத NFTE தோழர்களின் வீடே இல்லை எனலாம் .சர்வதேச தந்தையர் தினத்தில் தொலைதொடர்பு தொழிலாளர்களின் பிதாமகன்கள் தோழர் குப்தா ,ஜெகன் ஆகியோரை போற்றுவோம் .அவர்தம் குடும்பத்திற்கு நன்றி கூறுவோம் .







           
நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .

Tuesday, June 11, 2013

ஜூன் 12 கால வரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் 

     78.2 % IDA இணைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் விளக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  நிலுவை கிடையாது. 
     10-06-2013 முதல் அமுலுக்கு வருகிறது. 
      01-01-2007 அன்று முதல் உள்ள IDA  68.8 க்குப் பதிலாக 78.2 % IDA கணக்கிலிடப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுகிறது. 

தந்திச் சேவை நிறுத்தம்.
     வருகிற 15-07-2013 முதல் தந்திச் சேவை மூடப்படுகிறது. இதற்கான உத்தரவு இன்று (11-06-2013 ) வெளியிடப்பட்டுள்ளது. தந்திச் சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் செல், லேண்ட்லைன் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.  

Monday, June 10, 2013

IDA MERGER

DOT 78.2% IDA MERGER உத்தரவை 10.6.2013 ல் வெளியிட்டுள்ளது கையெழுத்தான நாளிலிருந்து பணப்பலன் கிடைக்கும்.BSNL இதற்கான செலவை தன் சொந்த நிதி ஆதாரத்திலிருந்து சமாளிக்கவேண்டும் .BUDGET SUPPORT கிடையாது .இது ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி .
நன்றி ,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,
NFTE -BSNL .

Saturday, June 8, 2013

மகத்தான மனிதர் பட்டாபி

                                   
 மகத்தான மனிதர் பட்டாபி 

  •           1985 தோழர் பட்டாபிக்கு JTO POSTING பெங்களூரில் கிடைக்கிறது அன்றைய மாநில தலைமை ஆரூரில் இப்போதுதான் MAZDOOR கிளை தொடங்கியிருக்கிறீர்கள்.  அதை பாதியில் விட்டு சென்றால் அமைப்பு வீணாகிவிடும்.  ஆகவே நீங்கள் ஆரூரிலேயே இருங்கள் என பணித்தது.  அதை சிரமேற்கொண்டு செயல்பட்டவர் பட்டாபி.
  •           திருவாரூர் தொழிற்சங்க கூட்டமைப்பு (TTUC ) தொடங்கி சில மாதங்களிலேயே கூட்டமைப்பில் அங்கம் வகித்த சங்க தோழியரிடம், சுயமரியாதையை கெடுக்கும் வகையில் நடந்துகொண்ட காவல்துறை அதிகாரியை எதிர்த்து போராடி மன்னிப்பு கோர செய்தவர் தோழர் பட்டாபி.
  •           தஞ்சை MAZDOOR போராட்டத்தில் சிறை சென்றவர்.
  •           காவிரி நதி நீர் போராட்டத்தில் கைதானவர்.
  •           OTBP /BCR  போராட்டத்தில் INCREMENT CUT பெற்றவர் .
  •           வேதையில் சமூக ஆதிக்க சக்திக்கு எதிராக போராடி தோழர் R K மற்றும் பல்வேறு தோழர்களோடு  வழக்கை சந்தித்தவர் .
  •            2003 ல்  ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டத்தில் களத்தில் நின்று உதவியவர்.
  •            தோழர் பட்டாபி தனிமனித ஒழுக்கத்தில் சிகரம்.
  •            தோழமை உள்ளங்களுக்கு அரண்.
  •            சமரசமில்ல போராளி. 
  •             MAZDOOR  வாழ்விற்காக, நமது இயக்கத்திற்காக அதிகாரியாகும்    வாய்ப்பை துறந்தவர் .
  •              பாட்டாளி வர்க்கத்தின் ஏர்முனை அவர் .
  •             தோழர்களின் உள்ளம் கவர்ந்த நாயகன்.
  •              எத்தனையோ சதிகளுக்கு இடையே முட்டுகட்டைகளை தகர்த்தெறிந்து, அவரை  மாநில செயலர் ஆக்கியது மதுரை. 
  •              CGM சந்திப்புக்கு அழைத்தார் புறக்கணித்தீர்கள். 
  •              சேலம் கூட்டத்தில் பங்கேற்க தவறினீர்கள்.
  •              தேர்தல் பிரச்சாரம் தனி அணியாய்  சென்றீர்கள்.
  •              குடந்தை வெற்றி விழா கூட்டம் பற்றி கொச்சை படுத்தி எழுதுகிறீர்கள்.
  •              அது மாநில செயலரை புண்படுத்துவதாய் எண்ணாதீர்கள்.
  •              ஆயிரக்கணக்கான  தமிழக தோழர்களின் உணர்வுகளை /மனதை புண்படுத்துகிறீர்கள்.
  •                போராட்டமே வாழ்க்கையான புனித போராளி தோழர் பட்டாபியை, எந்த போராட்டத்திலும் பங்கேற்காத நீங்கள் விமர்சிப்பது விந்தையிலும் விந்தை.  நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாழ்த்துங்கள் தவறில்லை, அது உங்கள் உரிமை அல்லது விருப்பம்.
  •                ஆனால்  ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட தோழர் பட்டாபியை தரக்குறைவாய் விமர்சிப்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.  அவர் தனி மனிதர் அல்ல!  அவர் இயக்கத்தின் மாநிலச்செயலர்.அவரை அவதூறாக எழுதுவது இயக்கத்தை அவதூறு செய்வதற்கு சமம். இயக்கம் உங்களால், என்னால் கட்டப்பட்டதல்ல. கட்டப்பட்ட இயக்கத்தின் அங்கம்தான்  நாம் என்பதை மறந்துவிடாதீர்கள் .
K. NATARAJAN, TTA /PSM ,
ACS, NFTE -BSNL. 

Friday, June 7, 2013

Congratulations Comrades !
CMD., BSNL has conveyed to Com Islam, President, NFTE, that DOT has approved merger of 78.2% IDA and orders will be issued by DOT either today or on Monday.
78.2  சத  கிராக்கிப்படி  இணைப்பா,   " வரூரூம்  ஆனால்  வராது "  ஞாபகம்  இருக்கா  ? 
வந்தேவிட்டது  !
"Actual payment will be made prospectively and arrears thereof will be deferred for the time being and will be paid only when the financial position of the company improves. This will be applicable to Pensioners also "

நன்றி: vellore வலைத்தளம் 
ஜூன் - 7
தோழர் ஜெகன் நினைவு நாள் 

தோழர் ஜெகனின் நினைவுகள் நமக்கு மாறாத உற்சாகத்தையும் தெம்பையும் அளித்த காலம் நிழலாடுகிறது.   
பொறுமையும், சகிப்புத் தன்மையும், போர்க்குணமும், சக தோழரிடம், தொழிற்சங்கத்திடம்   பழகும் பாங்கும், நேர்மையான அரசியலும் நாம் இன்னும் கற்றுத் தேற வேண்டியிருக்கிறது  என்பதை உணர்வோம், ஒப்புக் கொள்வோம்.   

78.2 % IDA இணைப்பு கோரி 
மாபெரும் தார்ணா போராட்டம் 


              தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகத்தில் 05-06-2013 காலை 10 மணிக்கு தார்ணா போராட்டம் துவங்கியது.

       300 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்ற தார்ணா போராட்டம் தோழர் R. ராஜேந்திரன் DE தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நமது மாநில துணைச் செயலர் தோழர் K. நடராஜன் கன்வீனராக இருந்து தார்ணாவை ஒருங்கிணைத்தார். அணைத்து தொழிற்சங்க பொறுப்பாளர்களும் கோரிக்கையின் நியாயத்தை அவரவர்களுக்கே உரிய பாணியில் எடுத்துரைத்தனர்.   AIBSNLEA அகில இந்திய தலைவர் தோழர். C.துரையரசன் அவர்கள் நிறைவுப் பேருரையாற்றினார். ஜூன் 12 முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஒருவர் விடாது அனைத்து தோழர்களும் உணர்வோடு பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கையை தலைவர்களின் உரை ஏற்படுத்தியுள்ளது. 

தார்ணா போராட்ட நிழற்பட காட்சிகள்:    
























































































செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR