தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, October 26, 2014

ஏன் இந்த தனியார் மோகம்?

நிலக்கரித் துறையில் சமீப காலமாக நிலவிவந்த அசாதாரணச் சூழலில், பல்வேறு விமர்சனங்களுக்கிடையில், மத்திய அரசு துரித நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.
நிலக்கரி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக 214 நிலக்கரி உரிமங்களை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிலக்கரித் துறையே ஸ்தம்பித்துப்போயிருந்த நிலையில் மத்திய அரசு சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், யாருக்காக இந்தச் சுறுசுறுப்பு என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ரத்துசெய்யப்பட்ட ஒதுக்கீடுகளெல்லாம் இணையத்தின் மூலம் ஏலம் விடப்படவிருக்கின்றன. ஏலத்துக்குப் பின், பழைய உரிமையாளர்களிட மிருந்து புதிய உரிமையாளர்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களைக் கைமாற்றிவிடுவதற்கேற்ப அவசரச் சட்டமொன்றும் அமல்படுத்தப் படவிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப் பதற்காகத்தான் எல்லா ஏற்பாடுகளும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், “இந்தியாவின் நிலக்கரித்துறையின் நலன்கள் பாதுகாக்கப்படும்” என்று அருண் ஜேட்லி சொல்லியிருப்பதுதான் இதில் வேடிக்கை. தனியாரின் கைகளில் தேசம் பாதுகாப்பாக இருக்கும் என்று நிதியமைச்சர் நம்புகிறார் போலும். எனினும், தேவையானபோது தனது அதிகாரத்தை அரசு பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு அவசரச் சட்டத்தில் இடம் இருப்பது சற்று ஆறுதலான விஷயம்.
உலகில் அதிக அளவு நிலக்கரி வளத்தை பெற்றிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று: சுமார் 30,100 கோடி டன்கள். அப்படி இருந்தும், சென்ற ஆண்டும் மட்டும் 17.4 கோடி டன்கள் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாய். இந்தியாவில் இவ்வளவு நிலக்கரி வளத்தை வைத்துக்கொண்டு இறக்குமதி செய்வதற்குக் காரணம் நிலக்கரித் துறையின்மீது அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு இருக்கும் மேலாதிக்கம்தான் என்று குற்றம்சாட்டப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்குப் போதுமான சுதந்திரத்தையும், அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிப்பதன் மூலம் இந்திய நிலக்கரித் துறைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட கதிதான் நிலக்கரித் துறைக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது. இதன் உள்ளார்ந்த நோக்கமே அரசுத் துறையால் எதையும் செய்ய முடியாது, தனியார் துறையே திறம்படச் செயலாற்றும் என்று நம்பவைப்பதுதான். தகவல்தொடர்புத் துறையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உலகத்திலேயே இல்லாத வகையில் பிரம்மாண்டமான தகவல்தொடர்புக் கட்டமைப்பைக் கொண்டது இந்தியா. ஆனால், களத்தில் தனியார் துறைக்கு வழிவிட்டு வேண்டுமென்றே பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது அரசுத் துறை. நிலக்கரித் துறையும் இன்று இந்த இடத்தை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.
ஒருபுறம், அரசுத் துறை சரியாகச் செயல்படவில்லை என்றால், மறுபுறம் தனியார் நிறுவனங்கள் அதீதமாகச் செயல்பட்டு லாப வேட்டையை நிகழ்த்துகின்றன. அதற்கு வழி விடவே அரசுத் துறை நிறுவனங்கள் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யப்படுகின்றன. அரசு மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொள்ள முடியும். ஆனால், அரசு மந்தமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தனியாருடைய ஒரே நோக்கம் லாபம் என்பதால் தனியார்மயமாக்குவதில் முதல் பலி மக்கள் நலன்தான். இந்த உண்மை திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டும் அரசு சளைக்காமல் தனியாரை நோக்கியே நகர்வது எதற்காக?

Friday, October 17, 2014



facebook
twitter
Policy & Regulation
Spectrum trading and sharing guidelines to come
 by year end Ravi Shankar Prasad
TT Correspondent |  |  15 Sep 2014

  Marking the first 100 days of the NDA government, Communication
  and IT Minister,Ravi Shankar Prasad in a press conference said that the 
 department of telecommunications (DoT) would come out 
 with new guidelines for telecom spectrum trading and 
 sharing by December.
 
"I have told my staff to ensure that guidelines on spectrum sharing and 
 trading are in place by year-end. The guidelines must be fair
 and objective and the consumer interests must also be kept
 in mind whileframing the new guidelines",
  said Ravi Shankar Prasad, Communication and IT Minister.
 
The Telecom Regulatory Authority of India (Trai) had in July
 released the much awaited guidelines on sharing of radio frequencies 
 in all bands among telcos, to optimally use limited air waves. Currently,
 mobile operators are allowed to share network infrastructure like mobile 
towers, which has helped them reduce costs, but not air waves. 
Trai has said that spectrum in different bands of spectrum
 will besharable provided both the licensees are
 having spectrum in the same band.
 
Ravi Shankar Prasad also elaborated that the entire mechanism
concerning the next round of spectrum auction scheduled to 
start from February 3, 2015 has to be worked out by  
the year-end to ensure  that auction before
 is completed during the current financial year.
 
The minister also hinted that more spectrum would be made
 available for which his ministry is in talks with the defence ministry.
 The Ministry of Defence (MoD) is yet to agree to release 5 MHz of 
3G spectrum to DoT. Telecom companies have repeatedly proposed
 that DoT swap 15 MHz of spectrum in the 1900-MHz band with an
 equal quantum of radio wave in the 3G band of 2100 MHz,
 unused with MoD.
 
A cyber security measures under Digital India programme a 
'National Cyber Coordination Centre' is
 also being set up for which `800 crore has been earmarked.
 
The government will also set up an e-governance security centre
 at a cost of `270 crore for ensuring security of all e-governance initiatives
 which has witnessed huge transactions. The government plans to complete
 the National Optical Fibre Network by 2017. This would provide broadband services 
in all 2.5 lakh panchayats at an estimated cost of `20,000 crore.

Monday, October 6, 2014

அகில இந்திய மாநாடு 
சங்கமிப்போம் ஜபல்பூரில் ......
10-10-2014முதல் 12-10-2014வரை .......

1.NEPP பிரச்சனைகள் 
2.தேக்கநிலை ஊதியம் 
3.50%IDA MERGER 
4.எளிமையான இலாகா தேர்வு முறை 
5.போனஸ் ,LTC ,MRS  மீட்டிட 
6.VRS /CRS மிரட்டலை முறியடிக்க 
7.கருணை அடிப்படையில் வேலை 
8.BSNL ,MTNL இணைப்பை எதிர்த்திட 
9. ஆட்குறைப்பு திட்டத்தை முறியடிக்க 
10.BSNL நிலைப்புக்கும் ,ஊழியர்கள் வளமான 
எதிர்காலத்திற்கும் திட்டமிடவும் ,போராடவும் 
சங்கமிப்போம் ...................

 

Wednesday, October 1, 2014






காலத்துக்கேற்ற சிந்தனைகள்

இராம. சீனுவாசன்

இந்தியாவில் 19, 20-ம் நூற்றாண்டுகளில் இருந்த அதிக வறுமைக்கு இரண்டு முக்கியக் காரணங்களை ரானடே (1842-1901) கூறுகிறார். ஒன்று, விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட பொருளாதாரம். இரண்டு, பிரிட்டிஷ் நவீனத் தொழில் பொருட்கள் இறக்குமதியினால், நலிவடைந்த சிறு கைவினைத் தொழில்கள். “ஒரு பொருளாதாரத்தில் எல்லாத் துறைகளும் சமமாக வளர வேண்டும். எனவே, அந்தக் காலத்தில் பின்தங்கிய தொழில் துறையை நவீனப்படுத்தினாலே இந்தியப் பொருளாதாரம் வளரும்” என்று ரானடே கூறிய காலத்தில், அதிலிருந்து காந்தி வேறுபட்டார்.
காந்தியின் சூத்திரம்
‘‘விவசாயம்+தொழில்+வியாபாரம் என்று பொருளாதாரத்தை வடிவமைக்க வேண்டும்’’ என்று ரானடேவும் மற்றவர்களும் கூறியபோது, ‘‘விவசாயம்+கைவினைத் தொழில் மட்டுமே போதுமானது. இதனால் மட்டுமே இந்தியா போன்ற பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் வறுமையை ஒழித்து, கிராம சுயாட்சி என்ற நிலையை ஏற்படுத்த முடியும்’’ என்று காந்தி வாதிட்டார்.
அன்றைய இந்தியாவில் மூலதனம், தொழிநுட்ப அறிவு குறைவாகவும்… மக்கள் தொகை, நிலம் அதிகமாக இருப்பதையும் கருத்தில்கொண்டு, உழைப்பை மையமாகக் கொண்ட கைவினைத் தொழில்கள் வளர வேண்டும் என்று காந்தி கூறினார். ‘இந்தியாவில், வருகின்ற பல தலைமுறைகளுக்கும் மக்களின் அதிகரிக்கும் வறுமைக்கும் இயந்திர சக்தியைப் பயன்படுத்தித் தீர்வுகாண முடியாது. நம் மக்கள் எண்ணிக்கை அதிகம், நம்மிடம் பயன்பாடற்ற உழைப்பு நேரமும் அதிகம். இதில் இயந்திரங்களைப் பயன்படுத்தி மனித சக்தியை விரையமாக்குவது தற்கொலைக்குச் சமமானது’ என்று 1934-ல் தொழிநுட்ப வல்லுநர் விஸ்வேஸ்வரய்யாவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி குறிப்பிடுகிறார்.
அதிக மக்கள்தொகை உள்ள நாட்டில் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு இயந்திரமயமாக்கலை எதிர்க்கும் காந்தி, ‘நவீன தொழில் துறை குறைந்த கூலி, மோசமான தொழில் சூழலை உருவாக்குவதோடு, வளங்களை ஒரு சிலரிடம் குவிக்கவும் வழிவகுக்கிறது’ என்ற நம்பிக்கையைக்கொண்டிருந்தார். எனவே, மூலதனத்தைக் குறைவாகவும், உழைப்பை அதிகமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய காந்தி, இயற்கை வளங்களையும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மூலதனத்தை யும் நிலத்தையும்விட உழைப்பை மையமாகக் கொண்ட உற்பத்தி முறை மட்டுமே சமத்துவத்தை ஏற்படுத்தும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி. மேலும், நவீன தொழில் துறையின் அதிக உற்பத்தியை விற்க, இங்கிலாந்துபோல நாமும் மற்ற நாடுகளை நம்ப வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறார்.
காந்தி ஆதரித்த இயந்திரமயமாக்கல்
இயந்திரமயமாக்கலை எதிர்த்த காந்தி, சில துறைகளில் வேலையின்மையை ஏற்படுத்தாத இயந்திரப் பயன்பாட்டை ஆதரிக்கவும் செய்தார். உருக்கு ஆலை, மின்சாரத் தயாரிப்பு என்ற பல இடங்களில் இயந்திரப் பயன்பாட்டை காந்தி ஆதரித்தார். மலம் அகற்றுவதில் நவீனக் கழிப்பிடங்களுக்கு இடம் உண்டு என்று காந்தி கூறுகிறார். ‘கப்பல் கட்டுதல், இரும்பு வேலை, இயந்திரம் செய்தல், மற்றும் பல கிராமக் கைவினைத் தொழில்களுடன் சேர்ந்தே இருக்கும் என நான் பார்க்கிறேன். இதுவரை தொழில் துறை கிராமங்களையும் கைவினைகளையும் அழிப்பதற்காகவே திட்டமிடப்பட்டன. எதிர்காலச் செயல்முறையில் அவை கிராம மக்களுக்கும், அவர்களின் கைவினைத் தொழிலுக்கும் பணி செய்வதாக இருக்கும்’ என 23.1.1940-ல் ராம் மனோகர் லோஹியாவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி கூறுகிறார்.
ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் தொழில் துறையில் மூலதனத்தைப் பொதுவுடைமையாக்கினால், காந்தி கூறுகின்ற பல குறைகளைத் தீர்க்கலாம் என்று நம்பினர். இதையும் காந்தி ஏற்கவில்லை.தொழில்மயமாக்கலில் உள்ளார்ந்து முதலாளித் துவம் இருப்பதாக காந்தி நம்பினார்.
மேற்கத்திய நாடுகளில் விவசாயப் பொருளாதாரத்தின் நிலப்பிரபுத்துவத்தின் தொடர்ச்சிதான் தொழில்துறை முதலாளித் துவம் என்பதுபோல இந்தியாவில் சாதிக் கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்டு தான் விவசாயப் பொருளாதாரமும் கிராமப் பொருளாதாரமும் அமைக்கப்பட்டன. விவசாயமும் கைவினைத் தொழிலும் உள்ளார்ந்த சாதி அமைப்பைக் கொண்டிருப்பதை ஏனோ காந்தி பார்க்கவில்லை. மேலும், ஏற்கெனவே இயந்திரமயமாகிவிட்ட தொழில்களைத் தவிர்ப்பதும் அதற்குப் பதில் கைவினைத் தொழில்களை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதுபற்றித் தெளிவான பொருளாதாரச் செயல் திட்டங்கள் இல்லாமல் இருப்பது காந்தியச் சிந்தனைகளில் உள்ள ஒரு குறைபாடு.
சில குறைகள்; சில நிறைகள்
இயந்திரமயமாக்கலினாலும் தொழில்மயமாக்கலி னாலும் ஏற்படும் இன்னல்களை காந்தி பட்டியலிட்டதில் பல இன்றுவரை தொடரத்தான் செய்கிறன. ஆனால், மேலும் பலவற்றுக்குப் புதிய விடைகள் கண்டு பிடித்திருப்பதையும் காண முடிகிறது. தொழில்மயமான காலத்திலிருந்து வேலையின்மை நம் நாட்டில் குறைந்திருப்பதை மறுக்க முடியாது. கிராம மக்கள் நகரம் நோக்கிச் செல்ல தொழில் துறையும் இயந்திர மயமாக்கலும் முக்கியக் காரணங்கள் என்பதையும் மறுக்க முடியாது. தொழில் துறையும் விவசாயம் இயந்திரமயமாக்கலும் நம் பெரிய மக்கள்தொகைக்கு வேண்டிய பொருட்களையும் உணவையும் அளித்தன. கல்வி வளர்ச்சி, தொழிநுட்பக் கல்வி, குறிப்பாக, தொழிலாளர்களுக்குத் தொழில்நுட்ப மறுபயிற்சி எனப் பலவகைகளிலும் வேலையின்மையைப் போக்க முடியும் என நாம் அறிந்துள்ளோம். ஆனால், நவீன பொருளாதாரம் நாம் மறுகட்டமைப்பு செய்ய முடியாதபடி சுற்றுச்சூழலையும் கலாச்சாரச் சின்னங்க ளான கைவினைப் பொருட்கள் உற்பத்தியையும் அழித்துவிட்டன. வறுமையைக் குறைப்பதில் நாம் முன்னேற்றம் அடைந்தாலும், செல்வங்கள் ஓர் இடத்தில் குவிவதை நம்மால் தடுக்க முடியவில்லை. நவீனப் பொருளாதாரத்தில், சமுதாயம் சார்ந்த, அறம் சார்ந்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, சுய நலமும் போட்டியும் பொறாமையும் கொண்ட வாழ்க்கையைப் போற்றி வளர்க்கிறோம்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் காலத்தைக் கடந்த சிந்தனைகளும், இலக்கியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஒருவரின் வரலாற்று அறிவும் சமகாலப் பிரச்சினைகளும் அவரின் சிந்தனைகளை வடிவமைக்கும். இந்திய சுதந்திர வரலாறு, அன்றைய பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய அறிவு காந்திய சிந்தனையைத் தெரிந்துகொள்ள மிக முக்கியமானவை. இவை மட்டுமல்லாமல், நம்முடைய சமகாலப் பிரச்சினைகளும் நாம் பெற்ற வேறு பலரின் சிந்தனைகளும் காந்தி பற்றிய நம்முடைய புரிதலை வடிவமைக்கின்றன. நம் சமகாலப் பிரச்சினைகள் கடந்த காலப் பிரச்சினைகளிலிருந்து வேறுபடும்போதெல்லாம், நம் எல்லாக் கேள்விகளுக்கும் நம் முன்னோர்களின் சிந்தனையில் விடைகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அதேநேரத்தில், நம் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு இந்த வரலாற்று அறிவு முக்கியமாகிவிடுகிறது. ‘ஹிந்த் ஸ்வராஜ்’இதழின் முன்னுரையில் காந்தி அவரின் சிந்தனைகள்பற்றி ‘என்னுடையது, ஆனால் என்னுடையது அல்ல’என்று கூறுகிறார். சிந்தனைகள் காலத்துக்கேற்ப மாறக் கூடியவை.

- இராம.சீனுவாசன், இணைப் பேராசிரியர், பொருளாதார அளவியல் துறை - 




செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR