தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, September 13, 2014

காஷ்மீரில் இலவச போன் பேசும் வசதி அளிக்கிறது பிஎஸ்என்எல் - அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்



 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. வெள்ளம் வேகமாக வடிந்து வருவதால் குடிநீர், மின்சாரம் ஆகிய இரண்டும் மறு சீரமைக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு பக்கத்தில் தகவல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் தன் தீவிர முயற்சியால் 80 சதவீத மொபைல் தொடர்பு சேவையை தொடங்கியுள்ளது. ஸ்ரீநகரில் 55 தொலை தொடர்பு கோபுரங்கள் மீண்டும் கட்டப்பட்டு விட்டன. இதன் காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பு தொடங்கியுள்ளனர்.
காஷ்மீரில் இலவச போன் பேசும் வசதி அளிக்கிறது பிஎஸ்என்எல் -  ரவி சங்கர் பிரசாத்
இந்த நிலையில், தொலைத்தொடர்பு சேவையை மீண்டும் துவக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் தொலைத் தொடர்பு சேவையை மீண்டும் முழு அளவில் துவக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை மொத்தமுள்ள 6811 கோபுரங்களில் 1208 கோபுரங்கள் மீண்டும் செயல்படத்துவங்கியுள்ளன.
வெள்ள பாதிப்புக்குள்ளான காஷ்மீரில் இலவச மொபைல்போன் சேவையை பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருவாரத்திற்கு மக்கள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். இதே போல், 
மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இலவசமாக பேசிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளன. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்க செய்திகள்...

05-09-2014 அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. நிரந்தர வைப்புத்தொகை ஓய்வுபெற்ற ஊழியர்கள் முதலீடு செய்திருந்தால் அது முதிர்வடைந்திருந்தால் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ரிசர்வ் வங்கி வழி காட்டுதலின் படி பணியில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

2. விழாக்கால முன்பணம் ரூ.10000/- அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படும். தவணை 10 மாதம் வட்டி 14.5%.

3. 2013-2014 ஆம் ஆண்டுக்கான டிவிடென்ட்  RGB கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு நவம்பர் (அ ) டிசம்பர் மாதம் வழங்கப்படும்.

4. புதியதாக சங்கத்தில் R D திட்டம் தொடங்கப்படும். மாதம் 1 க்கு குறைந்த பட்சம் ரூ. 1000/- அதற்கு மேலும் சேர்க்கலாம். வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை விட கூடுதலாக கிடைக்கும்.இந்த திட்டம் வரும் RGB கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அமுல்படுத்தப்படும்.(மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்).

5. வாராக்கடன் சம்மந்தமாகவும், ஒழுங்கு நடவடிக்கை சம்மந்தமாகவும் இரண்டு கமிட்டிகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.கமிட்டியில் இயக்குனர்கள் 7 அல்லது பேர் உறுப்பினர்களாகவும் இருப்பதால் தலைவர், துணை தலைவர் இருவரும் இரு கமிட்டியிலும் இடம் பெறுவார்கள்.

6. பெங்களூர் சங்க உறுப்பினர்களுக்கு இதுவரை ரூ. 400000/- மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது.இனிமேல் அது ரூ. 500000/-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதுபோல் விழாக்கால கடன் ரூ.10000/- மற்றும் கல்விக்கடன் ரூ.10000/-  இரண்டும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும்.


Wednesday, September 10, 2014

                   சுப்ரமணிய பாரதியார்

Subramanya Bharathi
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
1.பிறப்பு: டிசம்பர் 11, 1882
2.பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
3.பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
4.இறப்பு: செப்டம்பர் 11, 1921
5.நாட்டுரிமை: இந்தியா

சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமிஅவர்களுக்கும் , இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.   பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.
Bharathiar Kavithaigal









கட்டண பாக்கி வைத்துள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் லேண்ட் லைன் இணைப்புகளை பிஎஸ்என்எல் துண்டித்து வருகிறது. புதுச்சேரியில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் லேண்ட் லைன் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. காவல் நிலையங்களுக்கு ஆகும் கட்டண பில் மாதந்தோறும் போலீஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். போலீஸ் தலைமையகம், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கட்டணத்தை செலுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக புதுச்சேரியின் பல காவல் நிலையங்களில் தொலைபேசி உபயோகத்திற்கான கட்டணத்தை செலுத்தாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. கட்டண பாக்கி சுமார் 8 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பல மாதங்களாக பிஎஸ்என்எல் நினைவூட்டியும் இந்த கட்டண பாக்கி செலுத்தப்படவில்லை. அதையடுத்து, பல போலீஸ் ஸ்டேஷன்களின் லேண்ட் லைன் தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் பணியில் பி.எஸ்.என்.எல். இறங்கியுள்ளது. உதாரணத்துக்கு, ஒரு மாதத்திற்கு முன்பே காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனின் தொலைபேசி எண் கடந்த ஒரு மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசாருக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் அது பயன்படாமல் உள்ளது. இதனால் அவசர உதவிகேட்டு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்று அரசுதுறை 
பலவும் பில் பாக்கி வைத்துள்ளது.தனி நபர்களும் பாக்கி வைத்துள்ளனர்.

அனைத்து வாரக்கடன்களையும்   வசூல் செய்திட கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்  


Tuesday, September 9, 2014

JAC 
அனைத்து ஊழியர்கள் சங்க 
கூட்டு நடவடிக்கைக்குழு 
போராட்டம் 

போனஸ்,ஊதிய முரண்பாடு,ஊதிய நிலை தேக்கம் உள்ளிட்ட 
முக்கிய 30 அம்சக்கோரிக்கைகளில் மெத்தனம் காட்டும் நிர்வாகத்தைக் கண்டித்து அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு 
நாடு தழுவிய போராட்டம்.

23/09/2014 - செவ்வாய்க்கிழமை 
டெல்லித்தலைநகர் 
மாநிலத்தலைநகரங்கள் மற்றும் 
மாவட்டத்தலைநகரங்களில் 
 தர்ணா 

30/09/2014 - செவ்வாய்க்கிழமை 
காலை 11 மணி முதல் மதியம் 01 மணி வரை 
இரண்டுமணி நேர 
வெளிநடப்பு.

அப்படியும் நிர்வாகம் 
அசையவில்லை என்றால் 
நவம்பர் 2014ல் 
ஒரு நாள் வேலை நிறுத்தம்.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR