தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, April 30, 2016

மே தின விழா க்கான பட முடிவு 

Tuesday, April 26, 2016


BSNLEU     அங்கீகாரத்தில் இருந்த காலத்தில்

ஊழியர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 26000 கோடி.

இழப்பின் விபரம்:

போனஸ் இழப்பு :  1860 கோடி ரூபாய்

மெடிக்கல் அலவன்ஸ் இழப்பு: 8200 கோடி 

78.2 சத பஞ்சப்படி இணைப்பு மூலம் 
கிடைக்க வேண்டிய அரியர்ஸ் இழப்பு=  6100 கோடி 

பயணப்படி போன்ற அலவன்ஸ்கள்மாற்றம் 
செய்யாததால் இழப்பு7500 கோடி ரூபாய்

விடுப்புக் கால 10 நாள் சம்பளம்
பெற இயலாததால் 350 கோடி ரூபாய்

தேக்க நிலை ஆண்டுயர்வுத் தொகை மற்றும்
01.01.2007க்குப் பின் பணி நியமனம் பெற்றவர்கள் 
சம்பள இழப்பு மூலம் 1100 கோடி ரூபாய்

78.2 அகவிலைப்படி இணைப்பில்  வீட்டு வாடகைப்படி
 கிடைக்காததால் இழப்பு 1250 கோடி ரூபாய்

இத்தனையும் இழந்தோம்! இனியும் இழக்கலாமா?

இனி வரும் காலமாவது

இழப்புகள் இல்லாத காலமாகட்டும்.

வரிசை எண் 16ல் நாம் அளிக்கும் வாக்கால்
இணைந்த கைகள் உயரட்டும்! 
இழப்புகள் நம்மை விட்டு அகலட்டும் !

கோணிப்புளுகர் - கோயபல்ஸ் 

உலக வரலாற்றில் மக்களின் 
கவனத்தைக் கவர்ந்தவர்களை 
POPULAR  மற்றும் NOTORIOUS என 
இரண்டு விதமாகக் குறிப்பிடுவார்கள்.

வள்ளுவனின் வார்த்தையில் சொன்னால் 
இசைபட வாழ்ந்தவர்கள்.. 
வசைபட வாழ்ந்தவர்கள்.. 
இந்த இரண்டு பிரிவினருமே.. 
மக்களின் கவனத்தைக் கவர்ந்தவர்களாவர்..

அவ்வாறு வசைபட வாழ்ந்தவர்களில் 
இன்றும் மக்களால் உச்சரிக்கப்படுபவர்..
ஹிட்லரின் கொள்கை பரப்புச்செயலரான 
ஜோசப் கோயபல்ஸ்..

கோயபல்சின் கால்கள் 
கழுதையின் கால்கள் போன்று இருந்ததாக 
வரலாற்று ஆசிரியர்கள்  குறிப்பிடுகின்றார்கள்.

 எனவே அவரது தோற்றம் மக்களுக்கு 
கேலிக்குரியதாக இருந்துள்ளது. 
ஆனாலும் அவரது பேச்சைக்கேட்டவர்கள் 
தங்களை மறந்து அவரது பேச்சைக்
குறிப்பெடுத்ததாக வரலாறு கூறுகிறது.

அவரது பேச்சு நாடகத்தன்மை வாய்ந்தது. 
தனது உடல் அசைவின் மூலமும் 
உணர்ச்சிகரமான வார்த்தைகள் மூலமும் 
மக்களைத் தன்வசப்படுத்தினார்.
யூதர்கள் மனித குல எதிரிகள்...
ஆரியர்கள் நாம்... ஆளப்பிறந்தவர்கள் நாம்..
என்ற முழக்கம் ஜெர்மனி மக்களை ஈர்த்தது..
அவரது பிரச்சார வன்மை அவரை 
ஹிட்லரின்  அமைச்சரவையில் 
கொள்கை பரப்புச்செயலராக ஆக்கியது.

அவர் சொல்லும்  கருத்துக்கள் அனைத்தும் 
உண்மைக்குப் புறம்பானவையாக இருந்தன.
ஆனால் அவரது பிரச்சார முறைகள் 
மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. 
எனவே மக்கள் அவர் சொல்வதையெல்லாம் நம்பினர்.

அவரது பிரச்சார முறை இன்றும் கூட 
பலராலும் பின்பற்றப்படுகிறது.
அவர் மூன்று வகையான 
பிரச்சார முறைகளைப் பின்பற்றினார்.

ஒன்று... 
முணுமுணுப்பு பிரச்சாரம்..

அவரது ஆட்கள் இரண்டு மூன்று பேராக..
டீக்கடை.. பேருந்து நிலையம்...சந்தைகள் போன்ற.. 
மக்கள் கூடும் பொது இடங்களுக்குச்செல்வார்கள்.
ஒருவர் ஹிட்லரைப் புகழ்ந்து பேசுவார்.
மற்றவர் ஹிட்லரை எதிர்த்துப் பேசுவார்.
புகழ்ந்து பேசுபவரின் வாதம் வலிமையாக இருக்கும்.
எதிர்த்துப் பேசுவபரின் வாதம் பலவீனமாக இருக்கும்.
இறுதியில் ஹிட்லரை எதிர்த்தவர்..
ஹிட்லரின் செயல்களில் நியாயம் இருப்பதாகவும்.. 
அவரை ஏற்றுக்கொண்டதாகவும்  மற்றவரிடம் கூறுவார்.
இதனைக் கவனித்துக்கொண்டிருக்கும் பொதுமக்களும் 
ஹிட்லரை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இரண்டாவதாக...
ஆருடப்பிரச்சாரம்...

இரண்டாவது உலக யுத்தத்திலே 
ஜெர்மனி மாபெரும் வெற்றியடையப் போவதாகவும் 
கிரக நிலைகள் ஜெர்மனிக்குச்சாதகமாக இருப்பதால்..
ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தோல்வியைத்தழுவும் எனவும்  
ஆருடங்கள் கூறுவதாக பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டார்...
இதனை பத்திரிக்கைகள் மூலம் கணிப்புக்களாகவும் 
வெளியிட்டு  மக்களை கோயபல்ஸ் நம்ப வைத்தார்...

மூன்றாவதாக...  
தொய்வில்லாத தொடர் பிரச்சாரம்..

எந்த ஒரு செய்தியையும்.. 
அது பொய்யாகக் கூட இருக்கலாம்..
ஆனால் திரும்பத்திரும்ப 
சொல்லிக்கொண்டேயிருங்கள்..
மக்கள் அதை உண்மை என்று நம்ப ஆரம்பிப்பார்கள்
என்பதுதான் கோயபல்சின் அசைக்க முடியாத 
நம்பிக்கைப்பிரச்சாரம்.

இப்படியாகத்தான் கோயபல்ஸ் 
உண்மைகளைத்திரித்தும் 
பொய்களைப் புனைந்தும் 
ஜெர்மனிய மக்களை.. உலக மக்களை.. 
தனது பிரச்சாரத்தின் மூலம் தன்வயப்படுத்தினார்.

  ஹிட்லரின் தற்கொலைக்குப்பின்  கோயபல்ஸ்
ஒரேயொரு நாள் 1945 மே முதல் தேதியன்று 
ஜெர்மனியின் அதிபராக முடி சூட்டிக்கொண்டார்.
ஆனால் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த 
அந்த அண்ட மகா கோணிப்புளுகர் 
அதிபராக முடி சூட்டிக்கொண்ட 
அன்றே தன் உயிரையும் துறந்தார்.

 அத்தகைய கோயபல்சின் வழிமுறைகளை 
இன்றும் நாட்டில்  பலர் பின்பற்றி வருவதை நாம் காணலாம்.

குறிப்பாக நமது BSNL நிறுவனத்தில் 
BSNLEU சங்கம் மிகவும் லாவகமாக 
கோயபல்சின் பிரச்சாரக்கொள்கை வழியில்..
தனது சலிப்பில்லாத இடைவிடாத பொய் பிரச்சாரத்தை 
ஊழியர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

எவ்வாறு கோயபல்ஸ் 
அப்பாவி யூதர்களை  மனித குலத்தின் எதிரிகளாகவும்  
ஜெர்மானியர்களை ஆளப்பிறந்தவர்களாகவும் சித்தரித்தாரோ..
அதே வழியில்..

 NFTE   ஊழியர் நல எதிரி
BSNLEU ஊழியர் நல விரும்பி 
என்ற தொடர் கோயபல்ஸ் பிரச்சாரத்தை 
மிகவும் லாவகமாக BSNLEU சங்கம் கையாண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதிப்பிரச்சாரம்தான் 
இரண்டு இலக்கப்போனஸ்... 
டவர் கம்பெனிக்கு ஆதரவு... 
குறைவான சம்பளம் கேட்டது..
என்ற கோணிப்பையில் வடிகட்டிய பொய்களை 
திரும்பத்திரும்ப சொல்வதும்...

நாங்கள்.. தாய்ப்பால் மறந்தவர்கள்...
சாணிப்பால் குடித்தவர்கள்... 
சவுக்கடி பட்டவர்கள்...
சட்டத்தை  வளைத்தவர்கள்..
சமதர்மத்தை வளர்த்தவர்கள்...
என்று தங்களை பெருமிதப்படுத்திக்கொள்வதும்...
கோணிப்புளுகர் கோயபல்சின் பாணி
என்பது எல்லோருக்கும் சொல்லாமல் புரியும்...

தோழர்களே...
என்னதான் பொய்களை உரக்கக்கூறினாலும்...
மற்றவரை பொய் விமர்சனங்களால் இழிவு படுத்தினாலும்...

கவ்விய  சூது  கவிழ்ந்து விடும்.. 
கட்டாயம் வாய்மை  வென்று விடும்...
என்பது ஆன்றோர் வாக்காகும்..
இது ஆன்றோர் வாக்கு மட்டுமல்ல 
கோணிப்புளுகர்களின் குலதெய்வம் கோயபல்ஸே..
"THERE WILL COME A DAY...
WHEN ALL THE LIES WILL COLLAPSE 
UNDER THEIR OWN WEIGHT...
AND THE TRUTH WILL TRIUMPH AGAIN"

பொய்கள் ஒரு நாள் வீழும்... உண்மை நிச்சயம்  எழும்..
என்று கூறியுள்ளதை நாம் நினைவு படுத்த விரும்புகிறோம்.


கருணை அடிப்படை 
பணி நியமன விதிகள் தளர்வு 

கருணை அடிப்படையிலான பணி நியமன விதிகளைத் தளர்த்தி 
BSNL நிர்வாகம் 21/04/2016 அன்று உத்திரவிட்டுள்ளது. 
விதிகளைத் தளர்த்தியதாக நிர்வாகம்  கூறினாலும்
 ஓரிரண்டைத் தவிர பழைய முறையே தொடர்கிறது.

  • புதிய விதிமுறைகள் 01/04/2016 முதல் அமுலுக்கு வரும்.
  • ஊழியர் இறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • 55 மதிப்பெண்கள் பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விதவைகள் விண்ணப்பித்தால் 15 மதிப்பெண் வழங்கும் முறை தொடர்கிறது.
  • மாத வருமானம் ரூ.1000/=க்கு மேல் உள்ளவர்களுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்கப்படும். அதிகபட்ச எதிர்மறை மதிப்பெண் 5 ஆகும்.
  • வாடகை வீட்டில் இருந்தால் 5 மதிப்பெண். சொந்த வீட்டில் இருந்தால் மதிப்பெண் கிடையாது. 
  • வெளி ஆளெடுப்பில் 5 சத காலியிடங்களே  நிரப்பப்படும்.
கருணை அடிப்படை பணி நியமனத்தில் 
குறிப்பிடத்தக்க தளர்வுகள் ஏதுமில்லை என்பதே இன்றைய நிலை.
எனவே சாதனைப் பட்டியலில் இவை இடம் பெற வாய்ப்பில்லை.

சொன்னதைச் செய்தோம்

சொல்வதைச் செய்வோம்...




அடையாள மை 

தமிழகத்தில் மே 16 அன்று சட்டசபைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் 
BSNL உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் வாக்களிக்கும் ஊழியர்களுக்கு அடையாள மை அவர்களது இடது கை நடு விரலில் வைக்கப்படும். நடுவிரல் இல்லாதவர்களுக்கு பெருவிரலில்
 அடையாள மை வைக்கப்படும்.
===============================================
மாதிரி வாக்குச்சீட்டு 

உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலுக்கான மாதிரி வாக்குச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. திருத்தங்கள் ஏதுமிருந்தால் 
சங்கங்கள் 21/04/2016க்குள் தெரிவிக்க வேண்டும்.
==============================================
TTA  - மாவட்ட அளவிலான பதவி 

 25/08/2014 முதல் TTA  பதவி  மாநிலம் தழுவிய பதவியாக அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. 2012ம் ஆண்டிற்கான காலியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு காரணங்களால் 25/08/2014க்குப்பின் பணியமர்த்தப்பட்ட 
TTA  தோழர்களின் பதவி  மாவட்ட அளவிலான  பதவியாகவே கருதப்படும் என BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது. 
==============================================
நாலுகட்டம் - தொடரும் விளக்கங்கள்

BSNLEU  சங்கத்தின் அரிய கண்டுபிடிப்பான நாலுகட்டப்பதவி உயர்வில் BSNL நிர்வாகம் மேலும் சில விளக்கங்களை அளித்துள்ளது. 

குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு நாலுகட்டப்பதவி உயர்வுக்கு 
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.  உயர் படிப்பிற்காக எடுக்கப்பட்ட சம்பளமற்ற விடுப்பு EOL கணக்கில் கொள்ளப்படும். 

மற்ற EOL விடுப்புகள் பதவி உயர்வுக்கு கணக்கில் வராது 
என  நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

மேற்கண்ட விளக்கம் 147வது விளக்கம் என்று அறியப்படுகிறது.  
மேலும் இது அனுமார் வால் போல் நீளும் என்றும் நம்பப்படுகிறது.
==============================================
JTO  இலாக்காத்தேர்வு 

சென்ற JTO  இலாக்காத்தேர்வில் தவறுதலான கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் தவறுதலானவை என்று நிர்வாகத்தால் ஒத்துக்கொள்ளப்பட்டாலும் கூட அதற்கான 
தீர்வு நிர்வாகத்தால் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் எதிர் வரும் JTO தேர்வுகளில்...

  1. பாடத்திட்டங்களின் அடிப்படையிலே கேள்விகள் கேட்கப்படவேண்டும்.
  2. கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்க வேண்டும்.
  3. SC/ST  தோழர்களுக்கு தேர்வெழுத உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

என்றும்.. பதினாறு...

வருஷம் பதினாறு 
BSNL வயது பதினாறு 
வளங்கள் பதினாறு..

வளமாய் வாழ்ந்திட..
வரிசை எண் பதினாறு..

வாக்களிப்பீர்... 
வரிசை எண் 16ல்... 
இணைந்த கரங்களில்...

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR