தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, May 27, 2013

இரங்கல் செய்தி 

முன்னாள் கடலூர் மாவட்டச் செயலர் 
தோழர். B. ராஜேந்திரன் அவர்கள் 
இன்று காலை ( 27-05-2013 ) இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம்.   மிகவும் துடிப்பான அத்  தோழரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கடலூர் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

இவண், 
மாவட்டச் சங்கம், தஞ்சாவூர்.  

Tuesday, May 21, 2013


நமது மாநில செயலர்  தோழர்  பட்டாபிராமன் அவர்களின்  புதல்வர்                   திரு . நிர்மல் ராம் திருமண வரவேற்ப்பு விழா  சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் !!! 




இவண் 

தஞ்சை மாவட்ட தோழர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 


Sunday, May 19, 2013


 தமிழகத்திJAO OFFICIATING உத்திரவு 


தமிழகத்தில் JAO தேர்வில் வெற்றி பெற்ற  
49 தோழர்களுக்கு 
OFFICIATING  உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை,காரைக்குடி போன்ற  JAO  காலியிடங்கள் இல்லாத ஊர்களில் இருந்து மட்டுமே வெளியிடங்களுக்கு மாற்றல் இடப்பட்டுள்ளது.


JAO  பட்டியல் 

1. GURUMOORTHY B. KMB KMB
2 .BALAMURUGAN P. KMB KMB 
3 .DHANALAKSHMI L CBT CBT 
4 .MANIKANDAN S. VGR VGR 
5. KOLANCHI AYYAPPAN N.  KMB KMB 
6 .PUSHPALATHA S, VGR VGR 
7. RAMANI A. MA NGC 
8. MOORTHY. P.S TNJTNJ 
9. KADIRAVAN S. TNJ TNJ 
10. SAVITHRI. S CBT CBT
11 .RAIESWARI A. SLM SLM 
12. IAYARAMAN R. KMB  KMB 
13. MAYAKRISHNAN S TNJ TNJ 
14. LATHA T.N.TNI TNJ 
15 .VIJAYA R. TNJ TNI 
16.  RAJENDRAN S. VGR VGR 
17. ARUNACHALAM N. TVL  TVI- 
18 .SANTHI G. TNJ TNJ 
19 .MUTHUPANDI K. MA CBT 
20 .RADHAKRISHNAN, S TR  TR 
21. RAJESWARI KUPPAN VLR VLR 
22 .A. SADIK BASHA CDL CDL 
23. AFSARI K. ZAMAN VLR VLR 
24 PAUL ROBERT CONCON 
25 MUNIYASAMY P, SLM SLM 
26 NAGALAKSHMIV. TR TR 
27. THANGAVELU G. MA VGR
28 NEDUMARAN P. CDL  CDL 
29 KALPANA KMB KMB 
30 RAGHU R.MA CBT 
31. NALINI K. TNJ TNJ 
32 SEKAR R, KMBKMB 
33 MANGALA R, TNJ KMB 
34 SARAVANAN S. KMB KMB 
35 SOMASUNDARAM VLR VLR 
35 ANURADHA S. CBT CBT 
37 SARAVANAN P. VLR VLR 
38 KANAKARAJ S. CIVIL ERD 
39 ARULJOTHI S. ERD ERD 
40 KANAGARAJ .S. TT TT 
41. L SHANTHI ANANDAN TR TR 
42 SUNDARAMURTHY R TNJ KMB 
43 ARANGARAJAN S TNJ KMB 
44 RAJAN M.A. VGR ERD 
45 DURAIRAJ R. TNJ KMB
46 USHARANI G TR TVL 
47 KANAGARAJ. K KKD TVL 
48 LAKSHMI R. CBT CBT
49 KRISHNASAMY V. II TNJ  KMB 
 JAO தேர்வில் 

Thursday, May 16, 2013


தோழர். ஜெகன் பிறந்த நாள்  

17-05-2013 

இளைஞர் தினம்.  
     நமது மாநிலச் சங்கத்தின் வழிகாட்டல் அடிப்படையில் தோழர் ஜெகனின் பிறந்த நாளை இளைஞர் தினமாக நாம்   கொண்டாடுகிறோம்.  ஜெகன் என்று சொல்லும்போது அந்த சொல் ஒரு மந்திரச் சொல்லாக கடந்த 2000 ஆம்  ஆண்டு   வரை   பெரும்பான்மைத் தோழர்களின்  உணர்வில் கலந்திருந்தது.  இன்றைக்கு அதை மீட்டு நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதை  தலையாய கடமையாக உணர்கிறோம். 
      03-01-1992 அன்று கோவை பிரசிடென்சி ஹாலில் E 3 சங்கத்தின் 22 வது மாநில மாநாடு நடைபெற்றது.  அது தோழர் குப்தா, மோனிபோஸ், ஞானையா பங்கேற்ற மாநாடு.   அதில் தோழர் ஜெகன் பங்கேற்று துவக்க    உரையாற்றியதை தொகுத்து உங்களுக்கு தருகிறோம்.  
கேளுங்கள் தோழர் ஜெகனின் உரையை:       
     1971 ல் இதே இடத்தில் மாநில மாநாடு நடந்தது. 130 சார்பாளர்கள், 7 கோட்டம் பங்கேற்றது. தகராறு, பட்ட நிலை எல்லாம் இருந்தது. போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.   இன்று அவைகளில் எல்லாம் பெரும் மாற்றம்.   1960 போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில்   2 பேர் தோழியர்கள். பொள்ளாச்சியில் ஒரு தோழர். தொலைபேசி நிலையத்திலிருந்து ஒரு மைல் தூரத்திற்கு போலிஸ் கெடுபிடி. அந்தச் சூழ்நிலையில் நின்றவர்கள் இவர்கள்.  1957 -ல் வந்த எஸ்மா சட்டத்தை 1960 -ல் பயன்படுத்தினார்கள்.  அன்று அவர்கள் செய்த தியாகம்,  இன்று இந்த இயக்கம் இவ்வளவு வளர்வதற்கு ஒரு காரணம்.  இன்றைக்கு பல தலைவர்களின் ஏக்கம் இளைஞர்களை நம்மால் ஈர்க்க முடியவில்லையே என்பது.   ஆனால் நம்மால் ஈர்க்க முடிந்தது. கல்லூரி ஆசிரியர் போராட்டத்துக்கு ஆதரவான போராட்டம், சென்னையில் சரிவராது என்றபோது அதை வெற்றிகரமாக நாம் நடத்தினோம்.   கைதான 57 பேரில் 48 பேர் தொலை தொடர்பினர்.  அதில் 7 பேர் பெண்கள்.   ஒரு பகுதி போராடுகின்றபோது அதற்கு ஆதரவாக மற்ற பகுதியினர் போராடாது இருக்கக் கூடாது,  இருக்க முடியாது என்று காட்டினோம்.   சோவியத்தில் ஏற்பட்ட மாற்றங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டால் நாம் நிச்சயம் மேலும் வளர முடியும்.    பகத்சிங் எப்படி வாழ்ந்தான்?   அவனுக்கு ஆதர்ஷம் தந்தது எது?   நெல்சன் மண்டேலாவுக்கு எப்படி 26  வருஷம் சிறையில் இருக்க முடிந்தது.   அவனுக்கு எது ஆதர்ஷமாக இருந்தது?   இப்படிப்பட்ட லட்சியங்கள்தான் நம்மை வழி நடத்தும்.      
     என்னிடம்தான் நியாயம் இருக்கும் என்று இறுமாப்போடு கூறாமல், மற்றவரிடம் இருக்கும் நியாயத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.     பஞ்ச பூதங்களையும் ஆளுகின்ற மேதாவித்தனம் நம்மிடம் உள்ளது.     Co-axial வந்து பரவுவதற்குள்      Microwave  வந்துவிட்டது.   மாற்றங்கள் வரும்போது நமக்கு வேலை போய் விடுமா? இது முதல் பயம்.   இந்த இலாக்காவில் மட்டும்தான் ஒரு    Non-Technical Cadre, Technical Cadre க்கு   Promotion -ல் போகலாம்.   
     காவிரி நீர் பந்த் 2 -1 -92 நேற்று நடந்தது.  அதில் எத்தனை TMC என்பது பிரச்னை அல்ல.   இந்த நாடு ஒன்றா இல்லையா!  ஒரு மனிதன், தோழன், இந்தியன் என்று பார்க்க வேண்டும்.   1800 கோடி இருந்தால், கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, பம்பை, மணிமுத்தாறு போன்ற தென்னக நதிகளை இணைத்தாலே பெருமளவில் நன்மை கிடைக்கும்.   அர்த்தமற்ற கொலைகளுக்கு என்ன காரணம்?   ஜாதிக் கலவரங்கள், இதில் இளைஞர்கள் முன்னால் நிற்கிறார்களே ஏன்?  இதைப் பற்றிய  கேள்வியெல்லாம் நம் முன்னே நிற்கிறது.      இந்த நாடே அமுங்கிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.  இதைப் பற்றிய சிந்தனை நமக்கு அதிகம் வந்தாக வேண்டும்.  அப்பேர்ப்பட்ட ஊழியரை உருவாக்க நாம் சபதம் மேற்கொள்வோம்.   

தொகுப்பு: எஸ். சிவசிதம்பரம். 

Thursday, May 9, 2013

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR