தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, January 9, 2011

BSNLEU அங்கீகார காலத்தில் நடந்தது என்ன? தோழர் பட்டாபியின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

   BSNLEU வின் ஆறாண்டுகால அங்கீகாரத்தில் நமது துறையில் ஏற்பட்ட  எதிர்மறை மாற்றங்களில் ஒரு சிலவற்றை மட்டும் கூறுகிறேன்.

அந்நிய நேரடி முதலீடு:
     ரொம்ப BSNLEU எதிர்ப்பதாக சொல்லக் கூடிய அந்நிய நேரடி முதலீடு இவங்க காலத்தில்தான் 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமா மாறிச்சு.  இதுக்கு என்ன பொருள்னா தனியார் கம்பனிகளுக்கு வெளிநாட்டு மூலதனம்  வந்து குவியும்.    அவுங்களுக்கு வந்து RESOURCE CRUNCH என்பதே இருக்காது.      அதாவது  அவர்களுக்குப் பணப்புழக்கம் என்பதோ, முதலீடுப் புழக்கம் என்பதோ குறையவே குறையாது.      கடன வாங்கி வச்சிட்டு அவுங்க பண்ணிக்கிட்டே இருப்பாங்க.       அது ஒரு விதத்துல SECURITY க்கும் ஆபத்தாகும்.     அதுனால தனியார் கம்பெனிங்க தொடர்ந்து பணத் தட்டுப்பாடு இல்லாம விரிவாக்கப் பணிகள் செஞ்சிக்கிட்டே இருப்பாங்க.  இந்த வாயப்புகள  FDI கொடுக்கும்.   ஆனா BSNL க்கு அந்த வாய்ப்பு கிடையாது.          போட்டிய வலுப்படுத்தக் கூடிய ஆயுதமாக  தனியார் கம்பெனிகள் FDI  -யினுடைய  வரவை      வலியுறுத்திப் பெற்றுக் கொண்டார்கள்.

SHARING & UNBUNDLING:
     அதேபோல நம்ம தயாநிதி மாறன், ராசா காலத்திலேயே டெல்லி,  மும்பை ஆகிய இடங்கள்ள நம்மோட கோபுரங்கள SHARE பண்ணிக்கலாம் என்ற  முறை வந்திச்சு.   அதன் காரணமாக ஒரு டவர்ல ரெண்டு கம்பனி, மூணு கம்பனி SHARE பண்ணிக்க்கலாம்கறது வந்திச்சு.      இதுனால நம்ம டவர தனியார்களும் SHARE பண்ணிக்கிற வாய்ப்பு வந்துச்சு.  இதத் தொடர்ந்து இப்ப நம்ம சாம் பிட்ரோட என்னா சொல்லிட்டார்னா  ஒங்களோட கேபிளையும் UN BUNDLING கொடுங்க அப்படீன்னுட்டார்..   அதையும் கொடுத்துட்டோம்ன நம்மளோட லேண்ட் லைன், BROAD BAND இதோட விரிவாக்கம்  எல்லாம் பாதிக்கும்கிறதுனால நாம எதித்துக்கிட்டு வர்றோம்.      இதுவும் BSNLEU  காலத்தில்தான் வந்துது.  தடுக்க முடியல.  

ADC வருவாய்  ரத்து: 
அதே மாதிரி BSNL ளோட வருவாய் வளர்ச்சிக்கு ரொம்ப உதவிகரமா இருந்த, தனியார் நிறுவனங்களால் தரப்பட்டு வந்த ADC கட்டணம் என்று சொல்லப்படுகிற   கட்டண முறை முற்றிலுமாக நின்று போனது.   ஏறத்தாழ  நாலைந்து ஆண்டுகளில்   40,000 கோடி என்று கணக்கிடப்பட்டு ஒரு 15000, 16000 கோடி BSNL பெற்று விட்டது.      அது நின்று போகின்ற வருஷத்துல 8000 கோடி என்று BSNL கணக்கிட்டுக் கொடுத்தது.   இப்போ ஒரு பைசா கூட  கிடையாது என்று ADC கட்டணம் நிறுத்தப்பட்டு விட்டது.  டாட்டா போன்ற மிகப் பெரிய தனியார் கம்பனிகள் எல்லாம்    BSNL ஐ எதிர்த்து நீதிமன்றம் சென்று, D.D. ஷா என்று சொல்லக் கூடிய  TELECOM DISPUTE SETTLEMENT ATHORITY மூலமாக  அந்தப் பிரச்சனையையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டதும் இந்த  BSNLEU   காலத்தில்தான்.         அதுனால நம்மளோட வருவாய் மிகப் பெரிய அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது ADC போன்ற  கட்டண இழப்பினால்தான்.    TRAI இதுல செய்த சதியை  வெளிக்கொணராமல் அதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்தாமல் வெறும் ஆர்ப்பாட்டம் என்ற கண்துடைப்போடு  BSNLEU நிறுத்திக் கொண்டது.;   இப்படி 10000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டதும் BSNLEU காலத்தில்தான்.    
                                                                                                                          தொடரும்..............
தொகுப்பு: S. சிவசிதம்பரம்.                          

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR