தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, July 3, 2013

வெல்லட்டும் போராட்டம்


            

              57 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பொதுத்துறை நிறுவனம்.2400 மெகா வாட்  மின் உற்பத்தி செய்யக்கூடியது.ஆந்திரா , கேரளா,பாண்டிச்சேரி போன்ற பிற மாநில தேவைகளில் 1200 மெகா வாட்  தேவையை பூர்த்தி செய்கிறது.
          17000 தொழிலாளர்கள் ,ஒப்பந்த தொழிலாளர்கள் என பல இந்திய குடிமக்களுக்கு வாழ்வளிக்கும் பொதுத்துறை நிறுவனம் .
10% பங்கு விற்பனை என 2002,2006ல் மத்திய அரசு கூறிய போது அதனை எதிர்த்து போராட்டம் நடத்தி முறியடிக்கப்பட்டது .
          தற்போது மீண்டும் 5% பங்கு விற்பனை மூலம் 466 கோடி திரட்ட முடிவு செய்கிறது மத்திய அரசு.
தமிழ்நாடு அரசு பங்கை பெறுவது என்பதோ ,ஊழியர்கள் பங்கை பெறுவது என்பதோ ஏற்புடையதல்ல என்பதே அனைத்து தொழிற்சங்க முடிவு .

           SEBI நிர்பந்தம் என்று சொல்லியோ ,பங்கு விற்பனை செய்தால் தான் நவரத்தினா அந்தஸ்து தொடரும் என்று சொல்வதோ ,அரசாங்க கஜானாவிற்கு பணம் தேவை என்று சொல்வதோ ,அமைச்சரவை முடிவு என்று சொல்வதோ சரியல்ல.அந்நிய தேச வங்கிகளில் இந்திய தேச பெரும் முதலாளிகள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை இந்திய தேசத்திற்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சரவை முடிவெடுக்கட்டம். 
        கர்ம வீரர் காமராசர்  முதலமைச்சராய் இருந்த காலத்தில் தன்னலம் பாராது குடும்ப அரசியலுக்கு இடம் கொடுக்காது ,ஊழல் அரசியலுக்கு இடம் கொடுக்காது இந்திய சனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது NLC. 57 ஆண்டுகள் கழித்து காங்கிரசார்/இதர தோழமை கட்சி முதலாளிகள் காமராசர் பாதையை சீரழிப்பதை அனுமதியோம்.நீதி துறை ,காவல் துறை மூலம் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கிவிடமுடியாது.
 
                       போராட்டம்  வெல்க !
நன்றி,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL .
THANJAVUR .

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR