தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, July 6, 2014



ஜூலை 4
சுவாமி விவேகானந்தர் 
நினைவு தினம் 

விவேகானந்தரின் பொன்மொழிகள்

        * கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா  இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால்  நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட  நாத்திகனாக இருப்பதே மேல்.

        * உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி  வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு  உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே.  குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின்  குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை  அல்லவா.

        * செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது  மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.  அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து;  அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

        * வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும்  அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது  பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக  அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை  இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

        * உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம்.  நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை  கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே  ஒழுங்காகிவிடும்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR