தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, August 9, 2017

அஞ்சலி கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்

ஆயிரம் நபிமார்கள் இருந்தும்
ஏன் வாப்பா ஒரு பெண் நபி இல்லை?
என்ற ஒற்றைக்கேள்வியில்…
அடையாளம் காணப்பpட்டவர்…
அருமைத்தோழர். ஹெச்.ஜி.ரசூல் அவர்கள்…

அந்த ஒற்றைக்கேள்வி எழுப்பியதாலே…
ஒற்றை ஆளாய் வாழ நேரிட்டவர்…
ஆனாலும் அவர் ஒற்றை அல்ல….
பொதுவுடமைப் பூங்காவின் சிவப்பு மலர் என…
சிந்தனை வட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்…
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின்…
மாநிலத்தலைவர் பொறுப்பை வகித்தவர்….
சமூகக் கசப்பு நோயை எதிர்த்துக் குரல் கொடுத்தார்..
சாதாரண இனிப்பு நோயில் உயிர் நீத்தார்…
தோழர். ஹெச்.ஜி.ரசூல் அவர்களின் மறைவிற்கு
நமது செங்கொடி தாழ்த்திய அஞ்சலி உரித்தாகுக…

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR