தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, April 25, 2014

 
தேசியக்குழு கூட்ட  முடிவுகள் 

23/04/2014ல் டெல்லியில்  நடந்த NJCM தேசியக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு 
முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • JTO/JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாதவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் பாடத்திட்டத்தில் இடம் பெறாத கேள்விகள், தவறான கேள்விகள் கேட்கப்பட்டது  பற்றி பரிசீலிக்கப்படும்.
  • புதிய JTO ஆளெடுப்பு விதி ஒப்புதல் பெறப்பட்டபின் JTOவாக OFFICIATING செய்யும் 1500 TTAக்களும் நிரந்தரம் செய்யப்படுவர். 
  • JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
  • SC/ST தோழர்களுக்கு நிரப்பப்படாத காலியிடங்கள் BACKLOG VACANCY ஏதும் இல்லை.இது பற்றி DOTக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வழக்கு நிலுவையில் உள்ளதால் கருணை அடிப்படையில் TSM ஆகப்பணிபுரியும் தோழர்களின் பணி நிரந்தரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட சில தோழர்களது நிரந்தரம் பரிசீலிக்கப்படும்.
  • பயிற்சிக் காலத்திற்கான உதவித்தொகை STIPEND புதிய சம்பள விகிதத்தில் 01/01/2007ல் இருந்து வழங்கப்படும்.
  • புதிய ஆளெடுப்பு பற்றி ஆய்வு செய்யப்படும். தொழிற்சங்கங்கள் மற்றும் ஆலோசனைக்காரர்களின் CONSULTANT உதவி ஏற்கப்படும்.
  • 01/10/2000க்குப்பின் வரக்கூடிய பதவி உயர்வு தேதியில் இருந்து சம்பளப்பொருத்தம் 2000 WAGE REVISION அளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
  • அனைவருக்கும் இலவச SIM வழங்குவது சாதகமாக முடிவெடுக்கப்படும். பிற நிறுவனங்களை அழைப்பதற்கு OFF NET CALLS  மாதம் 50 வரை சலுகை அளிக்கப்படலாம்.
  • ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க மாநில நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்படும்.
  • TSM தோழர்களுக்கான BSNL ஏற்பு உத்திரவு DOTக்கு அனுப்பபட்டுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR