தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, April 2, 2014


NFTE-BSNL
TMTCLU
தமிழ் மாநில தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்  சங்கம் 
மாநில சிறப்பு மாநாடு காரைக்குடி 

           "எல்லோரும் எல்லாம் பெற வேண்டும்" என்று பாடிய கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில்(காரைக்குடி) 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் 100க்கும் மேற்பட்ட நிரந்திர ஊழியர்களும் கலந்து கொண்டு ஒப்பந்த தொழிலாளர் மாநாட்டை சிறப்பித்தனர். தோழர் ஆர் கே தலைமையேற்க, காரைக்குடி TMTCLU  மாவட்ட செயலர் தோழர் P ராமசாமி வரவேற்றிட, தோழர் நாகேஸ்வரன் அஞ்சலியுரையாற்றிட , தோழர் R பட்டாபிராமன் பொருள் பொதிந்த துவக்கவுரை நிகழ்த்தினார்.மாநில பொதுச்செயலாளர் S தமிழ்மணி அறிக்கையை சமர்ப்பித்து அறிமுகவுரையாற்றினார்.
            AITUC-ன் மாநில பொதுச்செயலாளர் தோழர் T.M. மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.  AITUC -ன் மத்திய செயற்குழு உறுப்பினர் தோழியர் மீனாள் சேதுராமன், AITUC -ன் காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் ரத்தினம், AITUC -ன் போக்குவரத்து துறை தோழர் மணவழகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
           தோழர்கள் சேது,லட்சம், முருகேசன்,முரளி (சென்னை), ராபர்ட் (கோவை), நடராஜன்(தஞ்சை), காமராஜ்(புதுவை), இரா ஸ்ரீதர், லோகநாதன்(கடலூர்), மனோகரன்(திருச்சி) மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  பல ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தது மாநாட்டின் சிறப்பம்சம்.
             தோழர் நல்லுசாமி TM மாவட்ட செயலர் TMTCLU ஈரோடு,தோழர் M S குமார் கடலூர், தோழர் P முருகேசு மன்னார்குடி, தோழர் M இசையரசன் சேலம் ,தோழர் M S  தாளமுருகன் அறந்தாங்கி, தோழர் C வெங்கடேசன் வேலூர், தோழர் S மாடசாமி காரைக்குடி,தோழர் K மணி மதுரை , தோழர் B முத்து வைத்திலிங்கம் கும்பகோணம், தோழர் S ரமேஷ் ஈரோடு, தோழர் கோபால் தஞ்சாவூர் , தோழர் முருகன் தூத்துக்குடி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
         தோழர் ஆர் கே  தனது நிறைவுரையில் மே 17-ல் தீர்மானம் நிறைவேற்றம் வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் அதனை தொடர்ந்து தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன் பெருந்திரள் தர்ணா போராட்ட அறைகூவல் விடுத்து எழுச்சியுரையாற்றினார்.
            ஒப்பந்த தொழிலாளர் சங்க இணைய தளம் துவங்கவும் முடிவு செய்யப்பட்டது.
            இறுதியில் விழுப்புரம் தோழர் A சுப்பிரமணி நன்றியுரையாற்ற மாநாடு நிறைவு பெற்றது.

நிர்வாகிகள் பட்டியல் :

தலைவர்                        : தோழர்.ஆர்.கே. சென்னை

துணை தலைவர்கள்   : 1. தோழர் M .மாதவன், TM , அறந்தாங்கி.
                                              2. தோழர் S .பிரின்ஸ், தஞ்சாவூர்
                                              3. தோழர் கிருஷ்ணமூர்த்தி, கோவை
                                              4. தோழர் E .கோபாலகிருஷ்ணன்,CL மதுரை
                                              5. தோழியர் R .சக்தி, CL , STR - திருச்சி.

பொதுச் செயலாளர்      : தோழர்.R . செல்வம், Sr TOA     கடலூர்

இணைச் செயலாளர்கள் : 1. தோழர்.S தமிழ்மணி, கடலூர்.
                                                   2. தோழர் S சிவசங்கரன், தஞ்சாவூர்
                                                   3. தோழர் ஜோசப் TM நாகர்கோயில்

துணைச் செயலாளர்கள் :  1. தோழர்.A மோகன், CL ,   தூத்துக்குடி,
                                                    2.தோழர் M.சரவணன், CL,புதுச்சேரி
 

                                                    3. தோழியர்.A.சகாயராணி,  CL ,திருச்சி
                                                    4. தோழர் B முத்துவைத்திலிங்கம்,CL குடந்தை 
                                                    5. தோழர் A சண்முகசுந்தரம், TM ,சேலம்
                                                                                                    6. தோழர் A.சுப்பிரமணியம்,CL விழுப்புரம் 
                                          

பொருளாளர்                          : தோழர்.M விஜய்ஆரோக்யராஜ்,SrTOA 
                                                        குடந்தை

துணை பொருளாளர்         : தோழர் M சையது முகமது CL , STR திருச்சி
                                         

அமைப்புச் செயலாளர்கள் : 1. தோழர் நல்லுசாமி, TM ,  ஈரோடு
                                                       2.  தோழர் C வெங்கடேசன், CL வேலூர்
                                                       3.  தோழர் இளங்கோ,  CL தர்மபுரி
                                                       4.  தோழர் R மாரிமுத்து, CL காரைக்குடி
                                                                                                     5.  தோழர் S தாமஸ் எடிசன், CL தஞ்சாவூர்
                                  
தணிக்கையாளர்                   : தோழர் முனியன், தர்மபுரி.

தீர்மானங்கள் 
1) மத்திய சங்க கோரிக்கை சாசனப்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ 10000/-, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 3000/- பெற்றிட அகில இந்திய இயக்கங்களில் பங்கு பெற்று போராட வேண்டும்.
2)ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வாரவிடுமுறை வழங்கப்பட வேண்டும்.
3) ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும் 5-ம்தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என மாநாடு நிர்வாகத்தை கோருகிறது.
4) ஒப்பந்த பணி தன்மை UNSKILLED /SEMISKILLED /HIGH  SKILLED   என அடையாளப்படுத்தி  சமஊதியம் வழங்கப்பட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
5) ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய விபரம் / EPF, ESI பிடித்தம் எண் ஆகிய தகவல் அடங்கிய ஊதியப் பட்டியல் வழங்கப் படவேண்டும்..
6) EPF / ESI  பிடித்தம்  குறித்த தகவல்கள் தொழிலாளர்களுக்கு முறையாக வழங்கப்படவேண்டும்.
7) ஒப்பந்த ஊழியர்களின் பணிச்சான்று (SERVICE CERTIFICATE ) வழங்கப்பட வேண்டும்.
8) ஆண்டுதோறும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் உத்திரவாதமான (ASSURED) போனஸ் வழங்கப்படவேண்டும்.
9) ஒப்பந்த ஊழியர்களுக்கு நிர்வாகம் / ஒப்பந்தக்காரர் அடையாள அட்டை வழங்க வேண்டும்..
10) மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரர்களின் பட்டியல்,முகவரி, ID விபரம் வெளியிடப்படவேண்டும்.அவர்களின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின்பெயர்ப் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும்.
11) ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் குரூப்இன்சூரன்ஸ் திட்டம் உருவாக்கிட வேண்டும்.
12) ஒப்பந்த ஊழியர்களுக்கான உத்தரவுகள்,வழிகாட்டல்கள், விளக்க உத்தரவுகள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மாநில சங்கம் திட்டமிடவேண்டும்.
13) "E-SEWA'  முறையில் EPF கட்டப்படவேண்டும்.பணியாற்றும் மாவட்டத்திலேயே EPF தொகையைஒப்பந்த ஊழியர்களுக்கு கட்டிட நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும்.
14)ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளைகண்காணித்து முறைப்படுத்திட ஒரு தனி பொறுப்புஅதிகாரி நியமித்திட வேண்டும். 
15) பரிவு அடிப்படைப் பணி விண்ணப்பித்து பணிமறுக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த ஊழியர் பணி வழங்கிட மாநில நிர்வாகத்தை இந்தசிறப்பு மாநாடு கோருகிறது..
16) துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 4 மணிநேரம் பணி வழங்கப்பட வேண்டும்.
        சிறப்பு மாநாட்டை சிறப்பாக நடத்திட்ட மாவட்ட செயலர் தோழர் மாரி , மாவட்ட தலைவர் முருகன் உள்ளிட்ட காரைக்குடி மாவட்ட தோழர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த நன்றி 
ஒன்றுபட்டு போர் புரிந்தே 
உயர்த்துவோம் செங்கொடியை
 இன்றுடன் தீருமடா 
இம்சை முறைகளெல்லாம் 
                                              -தோழர் ஜீவா 

                                                                  தோழமையுள்ள,
தோழர் ஆர் கே             M விஜய்ஆரோக்கியராஜ்                   R செல்வம் 
மாநிலத்தலைவர்             மாநில பொருளாளர்   மாநில பொதுச்செயலாளர் 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR