தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, May 11, 2018

அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்
 சங்கக் கூட்டமைப்பு.
 தஞ்சை மாவட்டம்.
===================================
கண்டன ஆர்ப்பாட்டம் 
==============================
தனி டவர் நிறுவனம் 
( BSNL TOWER CORPORATION LIMITED )
அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும், மத்திய அரசின் BSNL விரோதக் கொள்கைகளை எதிர்த்தும் 07-05-18 முதல் 10-05-18 வரை 5 நாட்கள் தெருமுனைப் பரப்புரை இயக்கம் தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெற்றது. 

அனைத்துச் சங்கத்தின் பொறுப்பாளர்களும் மிகச் சிறப்பாக பொதுமக்களிடம் நமது கோரிக்கையின் நியாயத்தை எடுத்துரைத்தனர்.

இறுதி நாளான இன்று  11-05-18 காலை 10 மணியளவில் தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 க்கும் மேற்பட்ட தோழர்கள் எழுச்சியோடு பங்கேற்று முழக்கமிட்டனர்.

ஐந்து நாள் போராட்டத்திலும் 
பேரெழுச்சியோடு 
பங்கேற்ற தோழர்களுக்கு 
மாவட்டச் சங்கம் 
வாழ்த்தையும், பாராட்டுகளையும் 
அன்போடு தெரிவித்துக் கொள்கிறது.

தோழமையுடன்,
A. லைலாபானு,
பொறுப்பு மாவட்டச் செயலர், தஞ்சை. 















No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR