தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, August 18, 2018

தஞ்சை மாவட்ட
கூட்டு ஆலோசனைக்குழுவின் தலைவர்
தோழர் S. பிரின்ஸ் அவர்கள்
31-08-18 ல் பணி ஓய்வு பெறுகிறார்!
======================================
வாழ்த்துவோம்! பாராட்டுவோம்!!
====================================
கூட்டு ஆலோசனைக் குழுவில்
பல ஆண்டுகள் பணியாற்றியவர். 
இன்று அதன் தஞ்சை மாவட்டத் தலைவர்.
மாவட்டச் செயலராய் மகுடம் சூட்டியவர்.

வெப்சைட், வாட்ஸப் 
அப்பொழுது இல்லாத காலம்! 
ஒரே ஒரு போன் கால் தான்,
ஒரு நூறு பேர் உடன் திரள்வர்.

தீர்த்த பிரச்சினைகள் ஏராளம்!
தீராத பிரச்சினைகள் 
தேடத்தான் வேண்டும்.

முதன் முதலில் துவங்கப்பட்ட 
TMTCLU விற்கு 
அவர்தான் மாவட்டத் தலைவர்.
செயலர் கிள்ளியோடு 
சேர்ந்து செய்த சாதனைதான்,
பல மாவட்டங்களில் 
கிளை துவங்க ஆதாரம். 

இன்றும் தஞ்சையில் 
ஒப்பந்தத் தொழிலாளிக்கு 
ஓர் குறையும் கிடையாது.
சம்பளம் தாமதம் என்பதும் 
நாள் கணக்கில்தான்.
மாதக் கணக்கில் என்பது 
மரபேயில்லை தஞ்சையில்!

NFTE இயக்கத்தின் 
பிரின்சாக வாழ்ந்த அவர்,
இம்மாதம் இலாக்காவிலிருந்து 
பணி ஓய்வு பெறுகிறார்.
இயக்கத்தின் மூச்சாக 
இறுதி வரை தொடரும் அவரை 
வாழ்த்தி வணங்குகிறோம்!

இம்மாதம் 29 ல் 
இயக்கம் அவருக்கு 
இனிய விழா எடுக்கிறது.
தன்னேரில்லாத் தலைவர்கள் 
வருகிறார்கள்! வாழ்த்துகிறார்கள்!!
வாருங்கள் தோழர்களே!
நாமும் வாழ்த்துவோம்!!

தோழமை வாழ்த்துக்களுடன்,
NFTE, தஞ்சை மாவட்டச் சங்கம்.


1 comment:

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR