தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, September 3, 2018

வரலாறு காணாத கேரள வெள்ளம்.
தேசியப் பேரிடராக உருவான வெள்ளம்.
கேரள மக்களுக்கு உதவுவோம்!
------------------------------------------------ 

BSNL அனைத்து சங்கங்களின் சார்பாக BSNL ஊழியர்களின் ஒரு நாள்அடிப்படைச்சம்பளத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதுஅதன்படிநிர்வாகம் அனைத்து ஊழியர்களும் தாமாக முன் வந்து உதவ வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளதுஆகஸ்ட் 2018 மாதச் சம்பளத்தின் அடிப்படையில் ஒருநாள்அடிப்படைச்சம்பளம் மட்டும் வெள்ள நிவாரண நிதியாக பிடித்தம் செய்துவழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

தன்னிச்சையான ஆதரவாக இருந்தாலும் ஊழியர்கள் தங்களுக்கு நிதி வழங்கவிருப்பம் இல்லாவிடில் தங்களது விருப்பமின்மையை சம்பந்தப்பட்ட கணக்கதிக்காரிவசம் கடிதமாக கொடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் நிதி கார்ப்பரேட் அலுவலகத்தின்மூலமாக சம்பந்தப்பட்ட கணக்கில் மையமாக செலுத்தப்படும்பிடித்தம் செய்யப்பட்டதொகையின் மதிப்பை 15.09.2018க்குள் கார்ப்பரேட் அலுவலத்திற்கு தெரியப்படுத்திடவேண்டுமென மாநில நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

கேரள மாநில BSNL ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரண நிதி வழங்கும் ஊழியர்கள் வருமான வரி சரத்து 80Gன் படிவரிவிலக்கு பெறலாம்.

கேரள மக்களுக்கு நாம் இருக்கிறோம் என உரத்துச் சொல்லும் நேரமிது.முன்னின்று நிதி வழங்குவோம்

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR