தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, January 5, 2019

1968 போராட்ட நாயகன் 
தோழர். D. ஞானையா அவர்களின் 
99 வது பிறந்த தினம்.
07-01-2019

தபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு துறைகள் 
இணைந்து  வேலை நிறுத்தம் 
 நடத்தியநாள் 1968 செப்.19.

2,80,000 பேர் பங்கேற்ற போராட்டம். 
1,40,000 பேர் நமது டெலிகாம் பகுதி. 
கைதானவர்களில் 40 சதவீதம் நாம்தான்.

பிகானிர், பதான்கோட், மரியாணி, பொங்கைகான் 
ஆகியவிடங்களில் காவல் துறையினரின் 
துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான
 ரயில்வே தொழிலாளிகள்   9 பேர்.

 தோழர். ஞானையா 1968 செப்.18 அன்று 
முன்கூட்டியே கைது செய்யப்பட்டு 
சிறையில் அடைக்கப்பட்டார்.

திகார் சிறையிலிருந்து கொண்டே 
விதிப்படி வேலை போராட்டத்தை  
திட்டமிட்டு நடத்தினார்.

தொழிலாளர் சக்தியை 
அரசுக்கு உணர்த்திய போராட்டம்.
தொழிற்சங்கங்களை 
ஒன்றிணைத்து நடத்திய போராட்டம்.

அப்பேர்ப்பட்ட 1968 போராட்ட நாயகன் 
தோழர். ஞானையாவை நினைவு கொண்டு 
அவரது 99 வைத்து பிறந்த நாளை 
கிளைகள் தோறும் கொண்டாடுங்கள்!
இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவிய
இணையற்ற தலைவன் ஞானையாவின் 
வரலாற்றை எடுத்துச் சொல்லுங்கள்!

வாழ்த்துக்களுடன்,
கே. கிள்ளிவளவன்,
தஞ்சை மாவட்டச் செயலர், NFTE

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR