தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, November 7, 2017


 07-11-2017


கிரி என்பவர் தன்னை பன்னி என்று அழைத்ததாக சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரிக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்புக்குப் பின் நீதிபதியிடம் கிரி கேட்டார்:

"அப்போ நான் சாந்தியை பன்னி என்று அழைக்கக்கூடாது, சரியா நீதிபதி அவர்களே?"

"ஆமாம்"

"ஒரு பன்னியை சாந்தி என்று அழைக்கலாமா?"

"அழைக்கலாம், சட்டப்படி அது குற்றமில்லை!"

மகிழ்ச்சியுடன் திரும்பிய கிரி, "குட்மார்னிங் சாந்தி" என்றான்.

===============================================================

நோயாளி: என்ன டாக்டர், இந்த நேரத்துல உங்களுக்கு யாரு போன் பண்றது?டாக்டர்: நம்ம ஊர் சுடுகாட்டு வெட்டியான்தான்!... இன்னும் ஆபரேஷனே ஆரம்பிக்கலே... முடிச்சாச்சா... முடிச்சாச்சான்னு அவசரப்படறான் பாருங்க!

=====================================================================

டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !


மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர்.

டாக்டர் :.???? 

====================================================================
அவன்: ஏண்டா ஃபிரிட்ஜுக்குள்ள போய் உங்க அப்பா பேரை எழுதி வச்சிருக்கே?
இவன்: என் அப்பாதான் என்னோட பேரு கெட்டுப் போயிராம பாத்துக்கோடான்னு சொன்னாரு.. அதான்!
===================================================================

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR