தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, December 26, 2017


தோழர். நல்லகண்ணு. 
அவர்களுக்கு இன்று 93 வயது.
நமது தேசியத் தலைவரை 
நாமும் வணங்கி வாழ்த்துவோம்!

அவரது பிறந்த நாளான இன்று, 
சாதி பற்றிய பிரச்சினைகளில் 
அவர் அணுகிய முறைகளை 
மறு வாசிப்புக்காக.

இன்றைக்குத் தமிழர்களையெல்லாம் கூட்டிவைத்துக் கொண்டு, தமிழன் மானங்கெட்டவன், சொரணையற்றவன், அறிவுகெட்ட அற்பன்... என்று எவ்வளவு கடுமையான சொற்களால் தாக்கிப் பேசினாலும் சிரித்து ரசித்துக் கொண்டிருப்பான். ஆனால் - ஒரு சாதியைக் குறிப்பிட்டுப் பேசிவிட்டால்போதும் "சுயமயாதை' முறுக்கிக் கொண்டு எழுகிறது. ஆவேசம் ஆட்டிப் படைக்கிறது. ஊரே பற்றி எகிறது. இன்றையத் தமிழன் மானுடம் மறந்த சாதிக்காரனாய் வந்து நிற்கிறான். யார் என்ன சாதி என்று அறிந்துகொள்வதில் ஆர்வங்கொண்டவனாய் இருக்கிறான். இந்த அவலம் மாறவேண்டும். தமிழன் என்பதேகூட மொழி வகைப்பட்ட ஒரு தேசிய அடையாளமே தவிர மானுட எல்லையைத் தொடும் வலிமை அவனுக்கு வரவேண்டும்...'' என்று தோழர் நல்லகண்ணு பேசினார்.

சாதிப் பிவினை கூடாது. சாதியால் ஒரு மனிதனை உயர்ந்தவனாகவும், மற்றொரு மனிதனைச் சாதியின் பெயரால் தீண்டத் தகாதவனாகவும் கருதும் கேவலம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் கிடையாது. சாதிக்கொரு நீதி வகுத்தோர் சமூகத்தின் முன்னே குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டும் - என்கிற உயர்ந்த குறிக்கோளுடன் உருவானதுதான் சமூக நீதிக் கோட்பாடு. இதிலே ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்புக்காகப் போராடும் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் மாறுபாடு கொண்டவை அல்ல. தோழர் நல்லகண்ணு அந்தக் குறிக்கோளுடன்தான் நாத்திகம் விழாவில் - சாதிய உணர்வில் அமிழ்ந்து கிடக்கும் தமிழன் குறித்துத் தமது வேதனையை வெளிப்படுத்தினார்.

ஆனால் சாதிப் பிவினைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தோழர் நல்லகண்ணு போன்ற முற்போக்காளர்கள், கல்வியில், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை ஏன் ஆதக்கிறார்கள்.

உண்மையில் இதுவும், பிறப்பால் தாழ்த்தப்பட்டோர், ஒதுக்கப் பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என்று சாதியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்ட மக்களை மேலே ஏறு, முன்னேறு என்று கைதூக்கி விடும் முயற்சிகளில் ஒன்றுதான். சரியாகச் சொல்வதானால், மனுதர்ம ஏற்பாட்டை, மனுதர்ம வாளைக்கொண்டே வீழ்த்தும் முயற்சிதான் - இடஒதுக்கீட்டுக் கொள்கை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR