தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, October 7, 2018

பட்டுக்கோட்டையார் 
நினைவு தினம் 08-10-19
(13-04-1930 to  08-10-1959)

அவரது பாடல்கள் சில நமது சிந்தைக்கு 

    ஒன்றிருந்தால் ஒன்றில்லை
    எல்லோரும் நம்பும்படி
    சொல்லும் திறனிருந்தால்
    சொல்லிலே உண்மை இல்லை
    உள்ளதை உள்ளபடி
    சொல்லும் மனிதனிடம்
    உணர்ந்திடும் திறமையில்லை
    உண்மையும் நம்பவைக்கும்
    திறனும் அமைந்திருந்தால்
    உலகம் அதை ஏற்பதில்லை
    அது இருந்தால் இது இல்லை
    இது இருந்தால் அது இல்லை
    அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
    அவனுக்கிங்கே இடமில்லை (அது-இரு)

    அங்கமதில் மங்கையர்க்கு
    அழகிருந்தால் அறிவில்லை
    ஆராய்ந்து முடிவு செய்யும்
    அறிவிருந்தால் அழகில்லை
    அழகும் அறிவும் அமைந்த பெண்கள்
    அதிசயமாய்ப் பிறந்தாலும்
    குறுகு மனம் கொண்டவர்கள்
    குலைக்காமல் விடுவதில்லை (அது-இரு)

    பள்ளி செல்லும் மாணவர்க்குப்
    படிப்பு வந்தால் பணமில்லை
    பணமிருந்தால் இளைஞருக்குப்
    படிப்பதிலே மனமில்லை;
    மனமிருந்து படிப்பு வந்து
    பரீட்சையிலும் தேறி விட்டால்
    பலபடிகள் ஏறி இறங்கிப்
    பார்த்தாலும் வேலையில்லை (அது-இரு)

    பொதுப்பணியில் செலவழிக்க
    நினைக்கும்போது பொருளில்லை
    பொருளும் புகழும் சேர்ந்தபின்னே
    பொதுப்பணியில் நினைவில்லை
    போதுமான பொருளும் வந்து
    பொதுப்பணியில் நினைவும் வந்தால்
    போட்ட திட்டம் நிறைவேறக்
    கூட்டாளிகள் சரியில்லை (அது-இரு)
    [ நல்ல தீர்ப்பு,1959 ] 
    ======================================================

    கெட்டதை விடுங்கள்
      சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
      செய்யுறதைச் செஞ்சுடுங்க
      நல்லதுன்னா கேட்டுக்குங்க
      கெட்டதுன்னா விட்டுடுங்க

      முன்னாலே வந்தவங்க
      என்னென்னமோ சொன்னாங்க
      மூளையிலே ஏறுமுன்னு
      முயற்சியும் செஞ்சாங்க

      ஒண்ணுமே நடக்காம
      உள்ளம் நொந்து செத்தாங்க
      என்னாலும் ஆகாதுன்னு
      எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )

      முடியிருந்தும் மொட்டைகளாய்
      மூச்சிருந்தும் கட்டைகளாய்
      விழியிருந்தும் பொட்டைகளாய்
      விழுந்துகிடக்கப் போறீங்களா?

      முறையைத் தெரிஞ்சு நடந்து
      பழைய நினைப்பை மறந்து
      உலகம் போற பாதையிலே
      உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )

      சித்தர்களும் யோகிகளும்
      சிந்தனையில் ஞானிகளும்
      புத்தரோடு ஏசுவும்
      உத்தமர் காந்தியும்

      எத்தனையோ உண்மைகளை
      எழுதிஎழுதி வச்சாங்க
      எல்லாந்தான் படிச்சீங்க?
      என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )

      [பாண்டித் தேவன்,1959]

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR