தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, February 16, 2018



நமது BSNL ன் நஷ்டம் மற்றும் நிதிப் பற்றாக்குறை 
இவைகளை காரணம் காட்டி, ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளப்  பட்டுவாடாவிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய நிர்வாகம் மறுத்து வருகிறது.
இதனால் இரண்டு மாதமாக சம்பளம் வராமல் தோழர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.
இப்போது அந்தப் பிரச்சினை  சரி செய்யப்பட்டுவிட்டது. 

நமது மாவட்டத்தில் NFTE மற்றும் BSNLEU இணைந்து 
இன்று மாவட்ட நிர்வாகத்தைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அதனடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள்
 இன்று 16-02-2018 ஒருமனதாக எட்டப்பட்டது. 
=====================================
முடிவுகள்:
 01-01-2017 முதல் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் 
நிறுத்தி வைக்கப்படுகிறார்கள்.

முன்னாள் ராணுவத்தினர்கள்  அனைவரும் 
பணியிலிருந்து நிறுத்தப்படுகிறார்கள்.

இந்த ஆட்குறைப்பு நிகழ்வு 28-02-2018
அன்று நடைபெறும்.

வேறு வழியில்லாத சூழ்நிலைமையில் 
இந்த முடிவினை எடுக்க வேண்டிய 
கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டோம்! 
பொறுத்தருள வேண்டுகிறோம்!

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்  -  டி. கலைச்செல்வன்,
மாவட்டச் செயலர்கள்.


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR