தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, February 27, 2014

திருவாரூர் SDOT கிளை கூட்டம் 25-2-2014 அன்று மாலை 4.30 மணிக்கு தோழர் R .குணசேகரன் கிளை தலைவர் தலைமையில்   நடைபெற்றது 
முன்னிலை தோழர் முர்த்தி ,அஞ்சலி தோழர் பஞ்சாபி TTA 
ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் என 40 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மாவட்ட துணை செயலர் தோழர் சீதாராமன் ,NFTE மாவடசெயாளர் தோழர் பன்னீர்செல்வம் TMTCLU மாவட்டசெயலர் தோழர் கிள்ளிவளவன் NFTE மாவட்டபொருளர் தோழர் பக்கிரிசாமி .SDOP /TNJ  கிளை செயலர் தோழர் ஜான்பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
TMTCLU SDOT /TVN கிளை தலைவராக பார்த்தசாரதி TM CSC TVN ,செயலராக தில்லைபழனி ஒப்பந்த தொழிலாளர் செல்வபுரம் ,பொருளராக பன்னீர்செல்வம் KDC அவர்களும் ஒருமனதாக தேர்வுபட்டனர்.தோழியர்கள் வாசுகி,சுமதி ஜெயந்தி ஆகியோர்கள் கலந்து கொண்டனர் .நன்றிஉரை தோழர்  காட்டூர் சேகர் ,,,,,,,,,,,,,,,தகவல் கூடூர் குணா கிளைச்செயலர் ....

Wednesday, February 12, 2014

சென்னை சொசைட்டி செய்திகள்:
  • சாதாரண கடன் ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.   வருகிற மார்ச் 3 முதல் கடன் வழங்கப்படும்.   கடன் வேண்டுபவர்கள் முன்னதாகவே விண்ணப்பப் படிவம் கொடுத்து காத்திருப்பது நல்லது.  
  • வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் நாள்:19-02-14
  • வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள்: 21-02-14
  • தகுதியான வேட்பு மனு அறிவிக்கும் நாள்:        24.02.14
  • வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்:    25 to 27.02.14
  • இறுதிப் பட்டியல் அறிவிக்கும் நாள்:                 28.02.14
               03.02.2014 அன்று வரை உறுப்பினர்களாக உள்ளவர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள். 
               குறைந்த பட்சம் ஓராண்டு உறுப்பினர்களாக உள்ளவர்கள் போட்டியிட  தகுதியானவர்கள். 

               வாக்காளர் பட்டியல் 07.02.2014 முதல் ரூபாய் 100 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

               வேட்புமனு படிவம் ( nomination form ) 07.02.14 முதல் திருச்சி சொசைட்டி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

  தஞ்சைப் பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மொத்த RGB  க்கள்: 6

S.Sivachidambaram,
RGB, Pattukkottai.   

Sunday, February 2, 2014

10-01-2014&11-01-2014 அன்று டெல்லியில் நடை பெற்ற மகளிர் கருத்தரங்கம். 
இந்த கருத்தரங்கம் குறிப்பாக அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மற்றும் 
அமைப்பு சார்ந்த பெண் தொழிலாளர்கள் -இவர்களின் வேலைத்தன்மை,
பணி இடச்சூழல் ,பாதுகாப்பு ,வருமானம் குறித்த ஓர் விழிப்புணர்வு 
ஏற்படுத்துதலாகும் .அங்கன்வாடி பணியாளர்கள் ,வீட்டு வேலை 
செய்பவர் ,தோட்ட வேலை ,சிறுதொழில் புரிபவர் ,பீடி சுற்றுதல் ,
பொட்டலம் போடுபவர் ,ஆட்டோ ஓட்டுனர்கள் ,சுரங்க தொழிலாளர்கள் ,
பாக்டரி தொழிலாளர்கள் போன்ற குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்கள் பங்கேற்றனர் .
10-01-2014தோழர் .குருதாஸ்குப்தா -MP &GS AITUC அவர்களின் உரை 
பாராளுமன்றத்தில் பெண்களுக்கான ஓர் கருத்தரங்கம் நடத்துவது என்பதே 
மரியாதைக்குரிய விஷயம் .இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடை பெறுவது வேதனைக்குரியது .நிறைய இடங்களில் பெண்களின் " பேறு கால  விடுப்பு "என்பது கூட மறுக்க படுகிறது .
சம்பள போராட்டம் ,போனஸ் போராட்டம் ,பெண்கள் மீதானா பாலியியல் 
வன்முறைக்கு எதிரான போராட்டம் என்று நாங்கள் நிறைய போராட்டங்கள் 
நடத்துகிறோம் .பெண்களின் முன்னேற்றம் என்பது பெண் சமூகம் கல்வி 
அறிவு பெறுதல் மூலமே சாத்தியம்.பெண்கள் "LEADERSHIP"quality ஐ வளர்த்துக்கொள்ள வேண்டும் .எல்லாதரப்பு பெண்களுக்கும் இந்த 
கருத்தரங்கம் பயனுள்ளதாக அமையவேண்டும் .
தேசிய அளவில் பெண்களுக்கான புகார் கமிட்டி *(COMPLAINT COMMITTEE  )*
என்பது வெகு குறைவு .முதலில் பாலியியல் வன்முறை என்றால் என்ன என்று புரிதல் வேண்டும் .இன்றும் ராஜஸ்தானில் குழந்தை திருமணம் 
உள்ளது .எங்கெல்லாம் பெண்களின் வேலை உள்ளதோ -வீடு தொடக்கி 
அலுவலகம் ,கம்பனி ,தொழிற்சாலை ,HOSPITAL என எல்லா இடங்களிலும் 
பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம் .விபரம் தெரியாத பெண்களுக்கு -என்னென்ன சட்டங்கள் உள்ளது போன்ற விஷயங்களை படித்த பெண்கள் தெரிவிக்க வேண்டும் .இன்றும் டெல்லியில் இளம் பெண் 
பயிற்சி வக்கீல்களின்  பாதுகாப்பு என்பதே பெரிய விஷயமாக உள்ளது.
எனவே விரைவில் 
1.SEXUAL HARASSMENT IN WORK PLACE குறித்த ஓர் பயிற்சி அளிக்க உள்ளோம் .
2.GENDER RIGHTS -க்கான தொடர் WORKSHOP  நடத்த உள்ளோம் என பேசி முடித்தார் ..தோழர் .குருதாஸ்குப்தா.

 :NFTE -BSNL தமிழ்நாடு சார்பில் தோழியர் A.லைலாபானு மகளிர் ஒருங்கிணைப்பு குழு ,தஞ்சையிலிருந்து டெல்லி சென்று கலந்து கொண்டு 
கொடுத்த தகவல் .இந்த வாய்ப்பை அளித்த மாநில சங்கத்திற்கும் 
மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கருத்தரங்கத்தில் 
கலந்து கொண்ட தோழியருக்கும் நமது நெஞ்சு நிறை நன்றி/
பாராட்டுகள் ...




செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR