தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, October 31, 2018

இன்று பணி நிறைவு பெறும் 
தோழர். C. நாடிமுத்து JE/ பேராவூரணி. 
TMTCLU சங்கத்தின் மாவட்டத் தலைவர்.

அவர்களை NFTE - மற்றும் TMTCLU 
தஞ்சை மாவட்டச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது. 
=========================================================
கடந்த 20-10-2018 அன்று பேராவூரணி தனம் மஹாலில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. மாநில, மாவட்ட, கிளைச் சங்கத் தோழர்கள் நேரில் வந்து வாழ்த்திச் சென்றார்கள். 
அவரது ஓய்வு காலம் சிறப்பாக, வளமாக அமைந்திட 
நாமும் வாழ்த்துகிறோம்.
===============================================================


























இம் மாதம் 31-10-2018 அன்று பணி நிறைவு பெறும் தோழர்களை வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!
===================================================
 தோழர். K. வீரமுத்து, JAO 
சீனியர் அக்கவுண்டண்ட் ஆக தஞ்சையில் பணியாற்றுகிறார்.

தோழர். S. ஆறுமுகம், TT, தஞ்சை.
NFTE ல் மாவட்ட துணைச் செயலராக இருக்கிறார். 

தோழர்களின் ஓய்வு காலம் சிறந்து, 
நிறைவான வாழ்வு அமைந்திட 
மாவட்டச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது.

Tuesday, October 30, 2018

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்
==========================================================================
இந்தியாவில், தமிழகத்தில், 
தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடியில், மேலவாசல் கிராமத்தில்தான்
முதல் நடமாடும் நூலகம் துவங்கப்பட்டது.
இக் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் நமது NFTE, மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் என்பதும் மகிழ்ச்சியான செய்தி!
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்
மாநிலச் செயலர் இரா. காமராசு அவர்களும், திருவாரூர் மாவட்டச் செயலர் அண்ணாதுரை அவர்களும் இதே மேலவாசல் கிராமத்தில் பிறந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.  
அது பற்றிய செய்தியை இனி காண்போம்!
மன்னார்குடியில், "இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்" துவங்கப்பட்டு இன்றுடன் 84 ஆண்டுகள் நிறைவடைகின்றது (அக்டோபர் 21, 1931).
இந்தியாவின் "முதல் நடமாடும் நூலகம்", 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்று, மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில் துவக்கப்பட்டது. எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்நூலகம், எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.
முதியோர் கல்வியை இலக்காகக் கொண்டு, எளிய தமிழில், தோட்டக்கலை, தேனீ வளர்ப்பு, குடிசைத்தொழில் மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் முறைகளைப் பற்றிய குறிப்புகளுடன் புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டு நடமாடும் நூலகத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டன.
மன்னார்குடி மற்றும் 12 மைல் சுற்றுவட்டார கிராமவாசிகளின் கல்வி நலனிற்காக கௌமார குருகுலம் நிறுவப்பட்டது. நடமாடும் நூலகத்தின் மூலம் 95 கிராமக் கிளைகளுக்கு இலவசமாக புத்தகங்கள் கொடுத்து வாங்கப்பட்டன. சித்திரை, ஐப்பசி மாதங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சிறப்பு பள்ளிக்கூடம் மூலம் கல்வி போதிக்கப்பட்டது.
மன்னார்குடியின் பெருமைகளில் ஒன்றான இந்நடமாடும் நூலகத் திட்டம், பின்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் துவக்கப்பட்டு, கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் வித்திட்டது.


AUAB 
அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு.
தஞ்சை மாவட்டம்.
==============================================
தர்ணா போராட்டம் 

30-10-2018, காலை 10 மணி CTMX வளாகம், தஞ்சை.
==============================================
தலைமை 
தோழர். R. ராஜேந்திரன், SNEA

முன்னிலை 
தோழர். T.K. உதயன் கன்வீனர், AUAB 
===================================================================
தர்ணா காட்சிகள்:











































செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR