தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, July 31, 2015


அஞ்சலி 
காந்தியவாதி சசிபெருமாள் 


தமிழகத்தில் தொடர்ந்து மது எதிர்ப்பு பிரச்சாரம் செய்து 
மக்கள் மத்தியில் மது விலக்கு கொள்கையை பரப்பி வந்த 
காந்தியவாதி சசிபெருமாள் 
இன்று 31/07/2015 மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடைப்பகுதியில் உள்ள 
மதுக்கடையை மூடக்கோரி 
நடத்திய போராட்டத்தில் தன் இன்னுயிர் நீத்தார். 

நேற்று 30/07/2015  அப்துல் கலாம் மறைவிற்கு 
இறுதி அஞ்சலி செலுத்த அவர் இராமேஸ்வரம் வந்திருந்தார்.  
இன்று அவருக்கே அஞ்சலி செலுத்தும் நிலை உருவாகி விட்டது. 
அவரது மரணம் பல பலத்த  சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

மது குடிப்பவரையும் கொல்லும் 
எதிர்ப்பவரையும் கொல்லும்...
என்ற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீ அற்று.
என்பது குறளாகும்.

தண்ணீருக்குள் இருப்பவனை விளக்கு கொண்டு தேடுவதும் 
தண்ணியில் மிதப்பவனை  விளக்கங்கள் சொல்லி திருத்த முயலுவதும் 
ஒன்றுதான் என்பது  அதன் பொருளாகும்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது 
என்று  பாடிய பட்டுக்கோட்டை இன்றிருந்தால் 

குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் 
குடியை ஒழிக்க முடியாது
என்று பாடியிருப்பார்.

மது என்னும் அரக்கனுக்கு எதிரான போராட்டத்தில் 
தன் இன்னுயிர் நீத்த காந்தியவாதி 
சசிபெருமாள் மறைவிற்கு நமது அஞ்சலி உரித்தாகுக...

நன்றி: காரைக்குடி 

கேடர் பெயர் மாற்றம்  குறித்த 
மாநிலச் செயலரின் சுற்றறிக்கை:









Tuesday, July 28, 2015

TTA, SR,TOA, TM, RM ஆகிய கேடர்களின் பெயர் மாற்றம்:






அப்துல்கலாமுடன் கேள்வி-பதில்.......விகடன் வெளியீடு

எங்கள் எல்லாரையும் கனவு காணச் சொன்ன உங்களின் நிறைவேறாத கனவு என்ன?''
''நிறைவேறக்கூடிய என் கனவு, 125 கோடி மக்களின் முகத்தில் மலர்ந்த சந்தோஷப் புன்னகையைப் பார்க்க வேண்டும் என்பது தான். அது நிறைவேறக்கூடிய ஆசைதான். என் ஆசை, என் லட்சியம், இந்தியாவை வளமான நாடாகப் பரிணமிக்கச் செய்யும்!''
சிவராமசுப்பிரமணியன், தூத்துக்குடி-2.
''ஜனாதிபதி பதவி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்கிறார்களே... உங்கள் கருத்து என்ன?''
''சட்டத்தை நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் வகுத்தால், அதை அரசியல் சாசனப்படி நிறைவேற்றும் பொறுப்பு, இந்திய அரசியல் சட்டத்தைக் காக்கும் பொறுப்பு, அதை நிறைவேற்றும் கடமை ஜனாதிபதியிடம் உள்ளது. எப்பணியை நான் செய்ய வேண்டுமோ, அப்பணியை என்னால் செய்ய முடிந்தது. அதற்கு மேல் நான் ஜனாதிபதியாக இருந்தபோது, மக்களிடமும், சட்டமன்ற, நாடாளுமன்றத்திடமும் 'இந்தியா 2020’ என்ற திட்டத்தையும், நகர்ப்புற வசதிகளைக்கிராமப் புறங்களுக்கு எடுத்துச் செல்லும் 'புரா’   திட்டத் தையும், இளைஞர்களை எழுச்சியுறச் செய்து இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு தயார்ப்படுத்த முடிந்தது. அதன் பரிணாமத்தை இப்போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் மூலம் இந்தியாவில் காண்கிறோம்!''
எஸ்.சையது முகமது, சென்னை-93.
''2020-ல் இந்தியா வல்லரசாக உருவா கும் என்று கூறியிருந்தீர்கள். உண்மையைச் சொல்லுங்கள்... அந்த நம்பிக்கை இப்போதும் இருக்கிறதா?''
''ஏற்கெனவே விளக்கி இருக்கிறேன். உலகமயமாக்கலில், வல்லரசு என்ற சித்தாந் தம் என்றோ போய்விட்டது. இந்தியா 2020 -க்குள் சமூக, பொருளாதாரத்தில், அமைதியில், பாதுகாப்பில், வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்பதுதான் நான் வலியுறுத்தும் கருத்து. 60 கோடி இளைய சமுதாயத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 'என்னால் முடியும்’ என்று அவர்கள் நினைப்பார்களேயானால், நம்மால் முடியும், இந்தியாவால் கண்டிப்பாக முடியும்! மன எழுச்சிகொண்ட இளைய சமுதாயம் இந்தியாவை வளர்ந்த நாடாக்கிக் காட்டும்!''
ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
''நம்பிக்கைத் துரோகிகளை என்ன செய்யலாம்?''
''இது ஒரு நல்ல கேள்வி. என் பதில்... மன்னிப்பு, மன்னிப்பு, மன்னிப்பு. அது இரண்டு நல்ல மனிதர்களை உருவாக்கும்!''
கே.ஆதிகேசவன், மதுரை.
''சந்திராயன் விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?''
''செப்டம்பர் 14, 2009-ம் தேதி சந்திராயன்-1 திட்டத்தின் முக்கியக் கண்டுபிடிப்புகளைப்பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் NASA, JPL, ISRO விஞ்ஞானிகளோடு, நானும் ISRO சேர்மன் மாதவன் நாயரும் கலந்துகொண்டோம். ISROவும், NASAவும் சேர்ந்து உருவாக்கிய M3 (மூன் மினராலஜி மேப்பர்) என்ற சென்சார் உபகரணம், எப்படி HO/H2O தண்ணீர்ப் படிமங்களைக் கண்டுபிடித்தது என்பதைப்பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை விவாதித்தோம். அப்போது NASA ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஒரு சிறப்பைச் சொன்னார். அதாவது, கடந்த 50 ஆண்டுகளாக, பல்வேறு நாடுகளும் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான்) தனித் தனியே செய்த முயற்சியால் கண்டுபிடிக்கப்படாதது, இந்தியாவின் சந்திராயனால் சாத்தியப்பட்டது. இந்தியா - அமெரிக்காவின் கூட்டு முயற்சியால் M3 தண்ணீரைக் கண்டு அறிந்தது என்று அறிந்தபோது, இந்தியாவை நினைத்து மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன்!''
சத்தியநாராயணன், சென்னை-38.
 ''தெரிந்தே செய்யப்படும் ஊழல் எது? தெரியாமல் செய்யப்படும் ஊழல் எது?''
''ஊழலில் வேறுபாடு கிடையாது. ஊழல் என்றால்... ஊழல்தான்!''
எஸ்.சையது முகமது, சென்னை-93.
''மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தபோது சுதந்திரமாக இருந்தீர்களா?''
''குடியரசுத் தலைவரின் சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை. அரசியல் சட்ட வரம்புக்குள், குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் யாரும் தலையிடவில்லை. கேபினெட் அங்கீகரித்த 'Office of Profit bill’ அரசியல் சட்டத்தின் தன்மையைப் பிரதிபலிக்கவில்லை என்று நாடாளுமன்றத்துக்குத் திருப்பி அனுப்ப முடிந்ததே! அதற்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து முறைப்படுத்த வேண்டும் என்று நான் கூறிய ஆலோசனைகள், மத்திய அரசால் ஏற்கப்பட்டன!''
இ.ராமஜெயம், ராணிப்பேட்டை.
''உலக அரங்கில் இந்திய ஜனாதிபதிக்கு பெரிய முக்கியத்துவம் இருப்பதாகத் தெரியவில்லையே! அந்தப் பதவி இந்தியாவுக்குத் தேவைதானா?''
''ஜனாதிபதி பதவியை வகிப்பவரின் தொலைநோக்குப் பார்வையும், தீர்க்கமான சிந்தனையும், உயர்ந்த எண்ணமும், செயல்களும்தான், அந்த நாட்டுக்கும், அந்தப் பதவிக்கும் பெருமை சேர்க்கும். ஒவ்வொரு ஜனாதி பதியும், அவர்களின் தனிச் சிறப்பால் நாட்டுக்குப் பெருமை சேர்த்து உள்ளனர்!''
பொன்னி, கோவை.
''நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த தலைமுறை என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டும் நீங்கள், இன்று நாட்டைச் சீரழித்துக் கெடுக்கும் ஊழலை எதிர்க்க அண்ணா ஹஜாரேவைப்போல ஏன் ஓர் இயக்கம் தொடங்கவில்லை? உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கும் ஏராளமானோர் இணைந்திருப்போமே!''
''இந்தியாவை வளமான நாடாக்க, எண்ணற்ற இளம் தலைவர்கள், தொலை நோக்குப் பார்வையுடன் உருவாக வேண்டும். இந்தியா அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கப்பட்டுவிட்டால், தன்னலம் இல்லா, தன்னம்பிக்கை உடைய தலைவர்கள், நம்மிடையே தோன்றுவார்கள். காலம், அவர்களது வளர்ச்சியைத் தீர்மானிக்கும். இது, காலத்தின் கட்டாயம். நீங்கள் ஒரு தலைவரை ஏர் நோக்கிப் பார்க்கிறீர்கள். நான் உங்களில் பல தலைவர்களை உருவாக்க முயற்சித் துக் கொண்டு இருக்கிறேன்!''
சத்தியநாராயணன், சென்னை-38.
''உலக அரசியல் தலைவர்களில் தங்களைப் பிரமிக்கவைத்தவர் யார்?''
''தென் ஆப்பிரிக்காவின் நிற வெறியை எதிர்த்துப் போராடி, அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தி, இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியும், 26 வருடம் தனிமைச் சிறையில் ராபின் தீவில் இருந்து, தன் பொறுமை யால், மனோதிடத்தால், பதவிக்கு வந்து, தென் ஆப்பிரிக்காவில் அடிமை நிலைக்குக் காரண மானவர்களை மன்னித்து, அவர்களையும் அந்த நாட்டுக் குடிமக்களாக அங்கீகரித்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா அவர்களும்தான் என்னைப் பிரமிக்க வைத்த உலக அரசியல் தலைவர்கள்!''
ஆர்.சுரேஷ், துறையூர்-10.
''சினிமாக்களில் தீவிரவாதிகளாக முஸ்லிம்களைக் காட்டும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?''
''நான் சினிமா பார்த்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தீவிரவாதிகளுக்கு நாடு கிடையாது, மதம் கிடையாது, நல்ல மன நிலை கிடையாது. நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க ஐந்து அம்சம்கொண்ட NCET (National Vampaign to Eradicate Terrorism ) என்ற திட்டத்தை முன்வைத்தேன். அதாவது, தீவிரவாதத்தை ஒழிக்க, ஒருங்கிணைந்த இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி உருவாக்கப்பட வேண்டும். உடனடியாக விசாரித்து நீதி வழங்கும் வகையில் சட்டம் இயற்றி, நீதிமன்றம் கடும் தண்டனை கொடுக்க வேண்டும். மக்கள், அரசுடன் கைகோத்து, தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும். அறிமுகம் இல்லாத சந்தேகம் ஏற்படுத்தும் நபர்களுக்கு, தீர விசாரிக்காமல் அடைக்கலம் கொடுக்கக் கூடாது. மற்றும் தேசிய அடையாள அட்டை ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இந்த ஆவணம் இல்லாமல், எந்த வசதியையும், சலுகையையும், பொருள்களையும் வாங்க முடியாது என்ற நிலை வர வேண்டும். இந்த யோசனையில் பெரும்பாலானவற்றை அரசு நிறைவேற்றி இருக்கிறது!''
ச.கோபிநாத், சேலம்.
''தற்போதைய நிலையில் 'இந்தியன்’ என்று சொல்லிக்கொள்வதால், பெருமைப்படும் விஷயங்கள் என்ன மிஞ்சி இருக்கின்றன நம் நாட்டில்?''
''சுதந்திரம் அடைந்து 64 வருடங்கள் ஆகிவிட்டன. உலகத்திலேயே இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பது நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை. 64 வருட ஜனநாயகப் பயணத்தில் எவ்வளவோ நல்லது நடந்திருக்கிறது. எவ்வளவோ தீமைகள் நடந்திருக்கின்றன. எவ்வளவோ சாதனைகளையும், வேதனைகளையும் தாண்டி நாம் நடை போட்டுக்கொண்டு இருக்கிறோம். இவற்றுக்கு நடுவில், ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரம்போல் ஒன்று மின்னிக்கொண்டு இருக்கிறது. அந்த நம்பிக்கை நட்சத்திரம்தான் ஜனநாயகம்... ஜனநாயகம்... ஜனநாயகம்!''

கனவு கலைந்தது... 

மனிதம் மறைந்தது... 

இந்திய இளைஞர்களின் இதய நாயகன் 

அப்துல் கலாம்

Monday, July 27, 2015


மோடி காட்டும் டிஜிட்டல் பிலிம் Make in India. 
பட்டாபி கட்டுரை.

Sunday, July 26, 2015

செப் 2 வேலை நிறுத்தம் 
மாநிலச் செயலரின் சுற்றறிக்கை.

Thursday, July 23, 2015


குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 15000 கேட்டு போராடும் 

தொழிலாளியே தெரிந்து கொள் ......

புதுடில்லி :தொழிலாளர்கள் மாநாட்டை துவக்கி 

வைத்து பேசிய பிரதமர் மோடிமுன்னாள் 

அமைச்சர்களின் பென்ஷன் ரூ.1 லட்சமாக 

உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார் 

ஆளும் மத்திய அரசு யாருக்கானது 

என்பதை தெரிந்துகொள் !

Monday, July 20, 2015


ராஜதந்திர வெற்றி!

 அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும், உலகின் மிகப் பழைமையான நாகரிகங்களில் ஒன்றான ஈரானுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் உடன்பாடு உலகுக்கு ஒரு மிகப் பெரிய உண்மையை உணர்த்துகிறது. ராணுவத் தாக்குதலையும், படையெடுப்புகளையும், தடைகளையும்விட பேச்சுவார்த்தைகள்தான், நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளுக்கும், சர்வதேசச் சர்ச்சைகளுக்கும் சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதுதான் அது.
 ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் இடையேயான உறவு, 1979-இல் அமெரிக்க ஆதரவாளரான ஈரான் அரசர் ஷாவை அகற்றி, அயதுல்லா கொமேனியின் ஆதரவாளர்களான இஸ்லாமியப் புரட்சியாளர்களின் ஆட்சி நிறுவப்பட்டது முதல் துண்டிக்கப்பட்டது. ஈரானின் தலைநகர் டெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரகம் சூறையாடப்பட்டதை, அமெரிக்கா தனது தேசத்துக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதியதிலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பகை தொடங்கியது.
 பெட்ரோலிய வளம் மிகுந்த ஈரான் தங்களது கட்டுப்பாட்டிலிருந்து அகன்றதை அமெரிக்காவும், ஏனைய மேலை நாடுகளும் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலைமை. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளையும் மீறி, மத்திய ஆசியாவில் ஈரான் ஒரு வலிமையான நாடாகத் தொடர்ந்ததற்கு அந்த நாட்டிலிருந்த எண்ணெய் வளம்தான் காரணம். ஆனால், சமீபகாலமாக ஈரான் தடுமாறத் தொடங்கி இருக்கிறது.
 ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடையும், மேலை நாடுகளின் விரோதமும் அகன்றுவிட்ட நிலையில், இனிமேல் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் ஈரானுடன் உறவு வைத்துக் கொள்ள முடியும். இயற்கை வளம் மிகுந்த, குறிப்பாக பெட்ரோலிய வளம் மிகுந்த ஈரானில் உலக நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும். பெட்ரோலிய உற்பத்தியை நவீனப்படுத்தும்போது, மீண்டும் ஈரான் உலகின் முக்கியமான பெட்ரோலிய ஏற்றுமதியாளராக மாற முடியும்.
 இப்போது ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தப்படி, ஈரானின் அனுமதியுடன் ஐ.நா. சபையின் கண்காணிப்பாளர்கள் அந்த நாட்டின் ராணுவத் தளங்களைச் சோதனையிடலாம். ஒருவகையில் இது ஈரானுக்கு ஏற்பட்ட பின்னடைவுதான் என்றாலும், உடன்படிக்கை ஏற்பட இந்த நிபந்தனைதான் காரணம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஈரான் ஆயுதங்கள் வாங்குவதற்கும், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு விண்கலச் சோதனைகள் நடத்துவதற்குமான தடை நீடிக்கும் என்பதும் உடன்படிக்கையின் முக்கியமான அம்சங்கள்.
 அமெரிக்க மக்களவையில் இருக்கும் குடியரசுக் கட்சியினரும், ஆளும் ஜனநாயகக் கட்சியிலேயே சில உறுப்பினர்களும் இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவேளை அமெரிக்க நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தை நிராகரிக்குமானால், அதிபர் பராக் ஒபாமா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கீகாரம் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல, டெஹ்ரானிலும் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் ஈரானின் அதிகாரத் தலைமையான தலைவர் அலி ஹொசைனி கமேனியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
 இந்த உடன்படிக்கை ஏற்படுவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ஈரான் அதிபர் ஹசன் ரெüஹானியும்தான் முக்கியக் காரணம். அவர்களது தீர்க்கதரிசனமும், அலி ஹொசைனி கமேனியின் ஆசியும் இருந்ததால்தான் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்த முடிந்தது. எல்லாவற்றையும்விட முக்கியமான காரணம், அதிகரித்து வரும் "இஸ்லாமிய தேசம்' என்கிற பயங்கரவாத அமைப்பின் அசுர வளர்ச்சி என்பதையும் மறந்துவிடக் கூடாது. "இஸ்லாமிய தேசம்' வலுவடைவதைத் தடுத்தாக வேண்டிய நிர்பந்தம் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும், ஈரான், இராக் போன்ற மேற்காசிய நாடுகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
 அமெரிக்கா - ஈரான் ஒத்துழைப்பு என்பது மேற்கு ஆசியாவிலுள்ள ஏனைய அமெரிக்க நட்பு நாடுகளுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தி இருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒப்பந்தத்தின் விளைவாக ஈரான் வலிமையான சக்தியாக உருவெடுத்துவிடும் என்பது ஈரானுக்கு எதிரான வளைகுடா நாடுகளின் அச்சம். அவர்கள் தங்களது ராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்வது மட்டுமல்ல, சவூதி அரேபியா போன்ற நாடுகள் பாகிஸ்தானின் உதவியுடன் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுமேயானால், அது இந்தியாவுக்கேகூடத் தலைவலியாக மாறலாம்.
 அப்படி எதுவும் நிகழாமல் அமெரிக்கா பார்த்துக் கொள்ளும் என்பது ஒருபுறம் இருக்க, இனிமேல் வெளிப்படையாக இந்தியாவும், ஈரானும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிகோலி இருக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது என்கிற காரணத்துக்காகவே ஈரான் உடன்படிக்கையை உலகம் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறது.



கேஸ் கனெக்சன் வேண்டுமானால் அலையனும்
கனெக்சன் வாங்கியதும் கேஸ்வரக் காத்திருக்கனும்
ஆதார் பதிவு செய்ய கம்பெனிக்கும், வங்கிக்கும் அலையனும்
மானியம் ரத்து செய்ய "0" அழுத்தினால் போதுமாம்.......!
தவறுதலாக செய்துவிட்டாலும் மீண்டும் பெற முடியாதாம்...!
செல்போன் இணைப்புத்தரும் கம்பெனிகளின் பாணியில்
கார்பரேட் மோசடி அரசும் செயல் பாட்டை காட்டுகிறது...!
#ஜாக்கிரதை..........!
கேஸ் புக் செய்யும் போதே ஜீரோவை அழுத்தச் சொல்வார்களாம்...!
பூஜ்ஜியத்தை அழுத்திய பிறகு, மீண்டும் ஒரு முறை மானியம் வேண்டாம் என்பதை பதிவு செய்ய வேண்டும் என்றால் 7-ம் எண்ணை அழுத்துங்கள் என்று கூறும். அப்போதும் கூட மானியம் ரத்தாகாது. இது வெறும் வேண்டுகோளாக தான் ஏற்றுக்கொள்ளப்படும்.

வாடிக்கையாளர்கள் தெரியாமல் அழுத்திவிட்டால் கூட ஒன்றும் தவறில்லை. கியாஸ் ஏஜென்சியில் இருந்து தொடர்பு கொண்டு நம்மிடம் விவரம் கேட்பார்கள். அவர்களிடம் விளக்கம் சொல்லி தொடர்ந்து மானித்தை பெறலாம். சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தும் நிவாரணம் பெறலாம். அவர்கள் அந்த வேண்டுகோளை நிராகரித்து விடுவார்கள். எனவே வாடிக்கையாளர்கள் இதுகுறித்து அச்சம் அடைய தேவையில்லை. குழப்பமும் அடைய வேண்டாம்.
இது இந்தியன் ஆயில் கார்பரேசன் அதிகாரியின் விளக்கம்
 ஏழாவது ஊதியக்குழுவின் முன் மத்திய அரசு ஊழியர் சாட்சியம்! 
மாநிலச் செயலரின் சுற்றறிக்கை.

Sunday, July 19, 2015


படித்தவன் பாவம் செய்தால்...

First Published : 17 July 2015 01:51 AM IST
பிகாரில் அண்மையில் நிகழ்ந்த சம்பவம் அந்த மாநிலத்தை மட்டுமன்றி இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. அதாவது, போலிச் சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த 1,400 பேர் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பயந்து ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்திருப்பதுதான் அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம்.
 கல்வியில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாநிலம் பிகார். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பிளஸ் 2 தேர்வின்போது, தேர்வு மையத்துக்குள் இருந்த மாணவர்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர்களும், உறவினர்களுமே "பிட்' கொடுத்து உதவிய சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 இந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நடவடிக்கைக்குப் பயந்து ராஜிநாமா செய்திருப்பதும் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
 நடந்தது இதுதான்... பிகார் மாநிலத்தில் 2006 - 2011 காலகட்டத்தில் நிதீஷ் குமார் முதல்வராக இருந்தபோது, தொகுப்பூதிய அடிப்படையில் (அதாவது ரூ.3,000 சம்பளத்தில்) 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.
 இதையடுத்து, போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் தொடர்பான விவரங்களைச் சேகரித்து அவர்களைப் பணிநீக்கம் செய்யும்படி கல்வித் துறை அதிகாரிகளுக்கு 2014 ஜூலை 7-ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உத்தரவிட்டார். 
 இதைத் தொடர்ந்து, கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
 இதை உறுதிப்படுத்தும் விதமாக 2014 ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அந்த மாநிலக் கல்வி அமைச்சர் பிரிஷன் படேல், போலிச் சான்றிதழ்கள் கொடுத்துப் பணியில் சேர்ந்ததாக 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 
 மேலும், இதேபோல ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களும் விரைவில் கண்டறியப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
 இந்த நிலையில், போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைக் கண்டறிந்து பணிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. 
 இதையடுத்து, மாநிலம் முழுவதும் பணிபுரியும் 4.50 லட்சம் ஆசிரியர்களின் பட்டப் படிப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்து ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 மேலும், போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாங்களாகவே முன்வந்து ராஜிநாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுவதுடன், இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத் தொகையும் அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
 இதன் தொடர்ச்சியாக, போலிச் சான்றிதழ்கள் கொடுத்துப் பணியில் சேர்ந்த 1,400 ஆசிரியர்கள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி ராஜிநாமா செய்தனர். எனினும், இன்னும் 20,000 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், மேலும் பலர் ராஜிநாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 லலித் மோடி, வியாபம் மர்ம மரணங்கள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிய விஷயமாக விவாதிக்கப்படவில்லை.
 இது ஒருபுறமிருக்க, இந்தியா முழுவதிலும் 21 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அண்மையில் ஒரு பட்டியலை வெளியிட்டு அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது. 
 இந்தப் பட்டியலில், தலைநகர் தில்லி தொடங்கி கேரளம், தமிழகம் வரை பல்வேறு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், பிகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே போலிச் சான்றிதழ் கொடுத்து பல்வேறு துறைகளிலும் ஏராளமானோர் பணியில் சேர்ந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 மற்றொருபுறம், போலிச் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் அண்மையில் தனது பதவியை இழந்தார். அவர் பிகாரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்ததாகத் தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தார்.
 போலி மருத்துவர்கள், போலி வழக்குரைஞர்கள் என பல்வேறு துறைகளில் போலிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கல்வித் துறையிலும் போலிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 ஏனெனில், பிற துறைகளில் உள்ள போலிகளால் குறிப்பட்ட அந்தத் துறைகளுக்கு மட்டுமே இழப்பு. ஆனால், ஆசிரியர் பணி என்பது அப்படியல்ல. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள்.
 இளைஞர்களை நல்வழிப்படுத்தி, திறமைசாலிகளாக உருவாக்கி, நாளைய சமுதாயத்தை வலுவான சமுதாயமாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. அதனால்தான், மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய், தந்தைக்கு அடுத்தபடியாக குருவை வைத்துள்ளனர்.
 அப்படிப்பட்ட ஆசிரியர் பணியில் போலியான தகுதிச் சான்றிதழ்களைக் கொடுத்து பணிபுரியும் கொடுமையை என்னவென்று சொல்வது...
நன்றி: தினமணி. 


அநாகரிகத்தின் அடையாளம் - தனிநபர் வழிபாடு

First Published : 15 July 2015 01:34 AM IST
அரசு அலுவலர்களுக்கு மத்தியில் ஒரு சொலவடை உண்டு. அலுவலகங்களில் ஒழுங்காக வேலை செய்பவருக்கு வேலையைக் கொடு, வேலை செய்யாதவருக்குச் சம்பளத்தைக் கொடு என்பதே அது. 
 தலைமைப் பண்புகள் அனைத்தும் பொருந்திய ஒருவரைக் கண்டுகொள்ளாமல் போ என்பதும், தகுதியே இல்லாத ஒருவரை முட்டுக் கொடுத்தும், சப்பைக்கட்டுகள் கட்டியும் தலைவராக்கு என்பதும் சொல்லப்படாத வழக்காறு ஆகும்.
 தனிநபர் வழிபாட்டின் (hero worship) மூலம் மனிதர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால், மகேசனை ஏமாற்ற முடியாது என்றார் அப்பரடிகள். மக்களே பொன்னார் சடைப் புண்ணியன், நெஞ்சுக்குள்ளே உருகி உருகி தூய்மையான பக்தி செய்யும் அடியார்கள் நெஞ்சுக்குள்தான் எழுந்தருளுவான். 
 நெஞ்சுக்குள்ளே வஞ்சகத்தை வைத்துக் கொண்டு, பூவும், நீரும் கொண்டு பூஜை புனஸ்காரங்கள் செய்பவர்களைக் கண்டு, அவர்களுடைய செயலுக்கு வெட்கப்பட்டு, அவர்களைப் பார்த்து ஏளனப் புன்முறுவல் புரிவான் (ஐந்தாம் திருமுறை, தனிக்கநற்தொகை - 2 ஆம் பதிகம்) எனப் பாடியிருந்தாலும், கபட வேடதாரிகள் தங்கள் தனிநபர் வழிபாடுகளை மனிதர்களிடத்தும் விடுவதில்லை, மகேசனிடத்தும் விட்டு வைப்பதில்லை.
 இந்த தனிநபர் வழிபாடு இறைவனுக்கு நிகழ்த்துவதையே அருளாளர்களில் ஒருவராகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளுக்குப் பிடிக்கவில்லை. எனவே, "ஏ, தில்லை நடராசனே! உன்னை ஆஹா - ஓஹோவென்று புகழ்ந்து திருவாசகத்தை மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். 
 அப்படிப் பாடியதை அவரே சொல்ல, நீ உன் திருக்கையால் எழுதலாமா? உன்னுடைய புகழை நீயே வெட்கமின்றி எழுதலாமா? நீ புகழ்ச்சி விருப்பன் போலும். உனக்கு இது இழிவாகத் தெரியவில்லையா?' (நால்வர் நான்மணி மாலை, பாடல் 24) என்று இறைவனுக்குச் சொல்வதுபோல், மானுடத்துக்குச் சொல்கிறார் அருளாளர்.
 தனிநபர் வழிபாட்டின் அபாயத்தை, நாடு விடுதலை அடைந்த காலத்திலேயே நன்குணர்ந்தவர்கள் டாக்டர் அம்பேத்கரும், ஜவாஹர்லால் நேருவும். 25.11.49இல் தாம் வரைந்த அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவினை வழங்கும்போது, எதிர்காலத்தில் இந்நாட்டுக்கு நேரக்கூடிய மூன்று அபாயங்களைச் சுட்டிக் காட்டுகிறார். (1) தனிநபர் வழிபாடு, (2) வேலை நிறுத்தம், (3) புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
 இந்த மூன்றிலும் தனிநபர் வழிபாட்டால் நேரக் கூடிய சீரழிவுகளை வற்புறுத்திச் சொல்கிறார் அம்பேத்கர். பிரிட்டீஷ் தத்துவவியலாளர் ஜான் ஸ்டூவர்ட் மில், ஐரிஷ் நாட்டுத் தேச பக்தராகிய டேனியல் ஓ கன்னல் ஆகிய அறிஞர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டி எச்சரிக்கிறார். 
 எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அவர் காலடியின் கீழ் உங்கள் சுதந்திரங்களை அடகு வைப்பீர்களேயானால், அவர் அடுத்த நாளே சர்வாதிகாரியாகிவிடுவார் என்கிறார் ஜான் ஸ்டூவர்ட் மில்.
 "தனிநபர் வழிபாடு மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில்தான் ஓங்கி நிற்கிறது. இந்தியர்களே, ஆண்டவனை நோக்கி நீங்கள் ஆராதனை செய்தால், அது உங்களுக்கு ஈடேற்றத்தைத் தரும். அரசியல்வாதிகளைப் போற்றி புகழ்ந்தால், அது அவர்களை எதேச்சாதிகாரி ஆக்கிவிடும்' என்பார் டேனியல் ஓ கன்னல். இவ்விரு பெருமக்களையும் எடுத்துக்காட்டித்தான் அம்பேத்கர் முன்னெச்சரிக்கை செய்தார்.
 பண்டித ஜவாஹர்லால் நேரு மற்றவர்களின் புகழுரைகளால், தமக்குத் தன்முனைப்பு வந்துவிடக் கூடாது என்று மிகவும் விழிப்புணர்வோடு இருந்திருக்கிறார். ஒருமுறை தம்மைப் பற்றித் தாமே ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அதனைக் கல்கத்தாவில் இருந்து வெளிவரும் "மாடர்ன் ரிவியூ' எனும் பத்திரிகைக்கு அனுப்பிவிடுகிறார். அந்த மொட்டைக் கடிதத்தைச் சாணக்கியன் எனும் பெயரில் எழுதினார். 
 அக்கடிதத்தில் கண்ட செய்தி, "நேருவே உனக்குச் சகிப்புத்தன்மை கிடையாது. நீ ஓர் ஆத்திரக்காரர், அவசரக்காரர். இப்படியே போனால் ஓர் எதேச்சாதிகாரி ஆகிவிடுவீர். அப்படி ஆனால், ஜூலியஸ் சீசருக்கு நேர்ந்த கதிதான் தங்களுக்கும்' என்பதாகும். அப்பத்திரிகை நேருவைப் பேட்டி காணும்போதுதான் உண்மை வெளிப்படுகிறது, நேரு பெருமானாகிய யானை, தம்மை அடக்குவதற்குரிய அங்குசத்தையும் தம் கைவசமே வைத்திருந்திருக்கிறது.
 தனிநபர் வழிபாட்டின் விபரீதத்தை நம்மாழ்வாரும் நன்குணர்ந்திருக்கிறார். "புலவர் பெருமக்களே, போலி மனிதர்களைப் பொய்யாகப் பாடி, நீங்கள் பெறும் பொருள் எத்தனை நாளைக்கு உங்களுக்கு வரப்போகிறது? என்னைப் பார்த்தீர்களா, நான் எந்த மனிதனையும் பாட மாட்டேன் எனும் பொருளில், சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன், என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள், மன்னா மனிதரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்' என்று தனிநபர் வழிபாடு செய்வதன் இழிவை எடுத்துரைக்கிறார்.
 வீணர்களை தனிநபர் வழிபாடு செய்து பாடுவதில் எந்தப் பயனும் இல்லை என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும் நொந்து வெந்து பாடுகிறார். "மிடுக்கில்லாதானை வீமனே, விறல் விசயனே வில்லுக்கு இவனென்று, கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இல்லை ..., வஞ்சநெஞ்சனை, மாசழக்கனைப் பாவியை வழக்கில்லியைப் (வழக்கிலி - நீதியில்லாதவன்) பஞ்ச துட்டனைச் (பஞ்சமா பாதகன்) சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இல்லை' என்று பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும், அதனால் பயனில்லை என்று வருத்தப்படுகிறார் சுந்தரர்.
 சரபோஜி மன்னன் தியாகப் பிரம்மத்துக்கு ஜதிபல்லக்கு அனுப்பித் தம்மைப் பாடுமாறு வேண்டுகிறான். தியாகப் பிரம்மத்தின் சகோதரரும் மன்னனைப் புகழ்ந்து பாடினால், பொன்னும் பொருளும் கிடைக்கும் என்றார். 
 ஆனால், தியாகப் பிரம்மம் ராமனைப் பாடிய வாயால், மனிதனைப் பாட மாட்டேன். ராம நாமம் தரும் ருசியையும், சுகத்தையும் மன்னர் தரும் பொருள் தருமா? தொண்டுக்கு என்று வந்த ஆஞ்சநேயர் பல்லக்கிலா சென்றார்? இலக்குவன் பல்லக்கிலா சென்றான் (நிதி சால சுகமா இராமு சந்நிதி சேவ சுகமா நிஜமுன பல்கு மனசா) என மறுதலித்தார்.
 "மகாத்மா என்றால், பெரிய ஆன்மா (great soul) என்று பொருள். அது மிகவும் புனிதமான ஒருவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். எனக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை. மேலும், நான் ஆன்மாக்கள் எல்லாம் ஒன்று என நினைப்பவன்' எனச் சொல்லி, காந்தியடிகள் மறுத்துரைத்தார். 
 ஆனால், மார்ஷல் சியாங் - கே - ஷேக்கிற்கு 1938-இல் தாகூர் எழுதிய கடிதத்தில், "புத்தருக்கும் இயேசுவுக்கும் பிறகு மானுடம் முழுமைக்குமான அன்பையும் இரக்கத்தையும் பொழிந்தவர் காந்தியடிகள். எனவே, அவரைத் தவிர, வேறு யாருக்கும் மகாத்மா எனும் பட்டம் பொருந்தாது' என எழுதிவிட்டார். சியாங் - கே - ஷேக்கிற்கு தாகூர் எழுதியதன் நோக்கம், அத்தகவல் உலகம் முழுமையும் பரவ வேண்டும் என்பதற்காகத்தான்.
 நம்முடைய காலத்தில் வாழ்ந்து மறைந்த கர்மயோகி சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியா. இறப்பிலேகூட தனிநபர் வழிபாட்டை விரும்பாதவர் என்பதற்கு அவர் எழுதி வைத்த உயிலே சான்றாகும். 
 "நான் இறந்தபின் என் உடலை தகனம் செய்ய வேண்டும். அதற்கு விறகு, சந்தனக் கட்டை போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மின்னடுப்பில் தகனம் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாகச் சாம்பலை (அஸ்தி) எடுக்கக் கூடாது. அதனை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கக் கூடாது. காற்றிலோ, மலையிலோ தூவக் கூடாது' என்பது லோகியா எழுதிய உயில். 12.3.67-இல் அவர் மரணம் அடைந்தபோது, அந்த உயிலில் கண்டவாறு இறுதி மரியாதை செய்தார்கள்.
 நம்முடைய நாட்டில் டாக்டர் பட்டங்கள் மலிவுப் பதிப்புகள் ஆகிவிட்டன. ஆனால், இங்கிலாந்தின் "இரும்புப் பெண்மணி' என வருணிக்கப்பட்ட தாட்சருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க மறுத்துவிட்டது.
 அவருக்குக் கெüரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென்ற தீர்மானத்தை டிரினிட்டி கல்லூரியின் முதல்வர் ஸர் பேட்ரிக் நீல் முன்மொழிந்தார். என்றாலும், அவர் பிரதமராக இருந்த காலத்தில் உயர் கல்விக்குரிய மானியத்தைக் கணிசமாகக் குறைத்ததால் பட்டம் மறுக்கப்பட்டது. 
 டாக்டர் பட்டத்துக்கு ஆதரவு அளித்து வாக்குப் பதிவு செய்தவர்கள் 319 பேர். அவருக்கு எதிராக வாக்களித்தவர்கள் 738 பேர். இறுதியில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமே வென்றது. அப்படியொரு நிகழ்ச்சி இங்கு எந்தப் பல்கலைக்கழகத்திலும் நடக்குமா?
 தகுதி வாய்ந்த தலைவர்கள் தனிநபர் வழிபாட்டுக்கு மயங்குவதில்லை. ஆவடி காங்கிரஸ் மாநாடு முடிந்தவுடன், காமராஜர் தலைமையில் காரைக்குடியில் ஒரு கூட்டம் நிகழ்ந்தது. தொடக்கத்தில் பேசவந்த பேச்சாளர் ஒருவர், காமராஜரை இந்திரனே சந்திரனே என வருணிக்கத் தொடங்கிவிட்டார். 
 காமராஜர் அவரைத் தடுத்து நிறுத்தி, "என்னவே, நான் வந்து அரைமணி ஆச்சுன்னேன். நாகபுரி காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட சோஷலிச தீர்மானத்தைப் பற்றிப் பேசுன்னேன், தெரிஞ்சா பேசு, என்னப் பத்தித்தான் இங்குள்ள எல்லோருக்கும் தெரியும்னேன், சப்ஜெட்டுக்கு வான்னேன்' என்று தனிநபர் வழிபாட்டில் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்தார்.
 உண்மைத் தலைவர்கள் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்க மாட்டார்கள். போலித் தலைவர்கள் காகிதப் பூக்களைப் போன்றவர்கள். காகிதங்களுக்கு இயற்கையில் வண்ணங்கள் கிடையாது. ஓவியக்காரன் தூரிகையை எடுத்துத் தீட்டினால்தான் உண்டு. 
 பசு அல்லது எருமை மாடுகளை ஏமாற்றிப் பால் கறக்க விரும்புகிற மாட்டுக்காரர்கள், கையிலே ஒரு பிண்ணாக்குக் கட்டியையும், வைக்கோலால் செய்யப்பட்ட கன்றுக் குட்டியையும் எடுத்துச் செல்வார்கள். கறக்க வேண்டிய நேரங்களில் மாட்டின் வாயிலே பிண்ணாக்குக் கட்டியைத் தடவுவார்கள். பின்னாலே பொய்க் கன்றுக் குட்டிகளைக் காம்புகளில் முட்டச் செய்வார்கள்.
 அதுபோல, போலித் தலைவர்களுக்கு வார்த்தை ஜாலங்கள் பிண்ணாக்குக் கட்டி, உடம்பினுடைய வளைவு நெளிவுகள் வைக்கோல் கன்றுக் குட்டி. கறக்க வேண்டியதைக் கறந்துவிடுவார்கள். எனவேதான், தனிநபர் வழிபாடு எல்லா மட்டத்திலும் கோலோச்சி நிற்கிறது.
 தனிநபர் வழிபாடு நல்லவர்களைப் பொல்லாதவர்கள் ஆக்கும். சனநாயகவாதியைச் சர்வாதிகாரியாக்கும். தனிநபர் வழிபாட்டைப் பெற்றுக் கெட்டுப்போன ஓர் அரசியல்வாதி புலம்புவதாகத் தீபம் நா. பார்த்தசாரதி ஒரு கவிதை எழுதினார். "பழுதின்றித் தொண்டு செய்ய வந்தவனைப் பதவியெனும் சிலுவையினில் அறைந்தே விட்டீர், தொழுகின்ற திருக்கூட்டம் உருவாக்கித் துப்புரவாய்க் காயடித்து மழுங்க வைத்தீர்' என ஓர் அரசியல்வாதியின் தன்னிலை விளக்கமாகப் பாடியது இன்றைய நாட்டு நடைமுறை ஆகிவிட்டது.
 தனிநபர் வழிபாடு ஓர் அநாகரிகத்தின் அடையாளம். சுயநலக்காரர்கள் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக ஆடுகின்ற கழைக்கூத்து. இந்த தனிநபர் வழிபாட்டைப் பெறுபவர்களுக்கு வெட்கமில்லை. கொடுக்கிறவர்களுக்கு மானமில்லை. 
 இனிமேல் இந்த நாட்டிலே பிறக்கப் போகின்ற குழந்தைகளின் நெற்றியிலே "பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே' எனும் புறநானூற்று வரிகளைப் பொறித்து அனுப்பினால் நலமாக இருக்கும்.
 தனிநபர் வழிபாடு ஓர் அநாகரிகத்தின் அடையாளம். சுயநலக்காரர்கள் தங்கள் காரியங்களைச் சாதித்து கொள்வதற்காக ஆடுகின்ற கழைக்கூத்து.

nandri- DINAMANI.

ஜூலை 18: 'ஆப்ரிக்க காந்தி’எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா பிறந்த தின சிறப்பு பகிர்வு


தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.

இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது, ‘மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. ‘எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.
தமிழ் மாநில நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்க்கு அடையாள அட்டை , மாதம் தோறும் 7 ல் சம்பளம் ,EPF ESI  கண்காணிப்பு குறித்த வழிகாட்டுதல் கடிதத்தை  மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளது 
கடிதம் காண  இங்கு சொடுக்கவும்  

 Letter to SSA Heads on the Contract Labour Issues discussed.. ID cards within 2 months, Payment before 7th of every month, EPF/ESI Remittance Monitoring, Issue of E Passbook


சகோதரத்துவம் தழைக்கட்டும்...


மனிதம் மலரட்டும்.. 
புனிதம் பெருகட்டும்.. 

அன்பு வளரட்டும்..
அமைதி பரவட்டும்..

சகோதரத்துவம் தழைக்கட்டும்..
சமாதானம் உயரட்டும்..

அனைவருக்கும் 

னிய  லான் 

நல்வாழ்த்துக்கள் 

Friday, July 17, 2015


PENASIONERS PAGE:


 DRAFT CABINET NOTE ON PENSION REVISION WITH MERGER of 78.2% IDA AS FITMENT BENEFIT CIRCULATED:
 The Establishment Branch of Department of Telecommunications is reported to have circulated the draft cabinet note on its proposal for revision of pension of BSNL pensioners to all the concerned Ministries. The draft note also includes payment of enhanced Gratuity, Commuted Value of Pension and leave encashment on the date of retirement to those who retired after 01.01.2007 but before 10.06.2013.














வரலாற்றில் இன்று - 2004, ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 4 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர். பள்ளியின் கீழ்தளத்தில் மதிய உணவு சமைப்பதற்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த கீற்று ஓலைகள் அருகில் யாருமில்லாத தருணத்தில் தீப்பிடித்து பள்ளிக் கட்டடம் முழுவதும் மளமளவென்று தீ பரவியது. ஆசிரியர்கள் அனைவரும் முதலில் வெளியே ஓடித் தப்பித்தனர். கூரை வேயப்பட்ட மாடி வகுப்பறைகளில் இருந்த நூற்றுக்கணக்கான சிறு குழந்தைகள் அனைவரும் குறுகலான படிக்கட்டில் ஒரே சமயத்தில் இறங்கி வெளியேற முடியாமையால் அவர்களில் பெரும்பாலானோர் தீயில் கருகி பரிதாமாக உயிரிழந்தனர். பள்ளியின் கேட்டினை அடைத்துவிட்டு வாயிற்காப்பாளர் தேநீர் அருந்த போய்விட்டபடியால் அனைவரும் விரைந்து வெளியேற முடியாத நிலை எற்பட்டது. கும்பகோணத்தில் ஒவ்வொரு தெருவிலும் இரண்டு கோயில்கள் உண்டு. அனைத்து கோயில்களிலும் சேர்த்து நூற்றுக் கணக்கான தெய்வங்கள் அந்த வேளையில் கும்பகோணத்தில் இருந்தபோதிலும் தீயில் கருகி நூற்றுக்கணக்கான குழந்தைகள் கூக்குரலிட்டு கதறிய ஒலி ஒரு தெய்வத்தின் காதிலும் விழவில்லை என்பது பரிதாபத்துக்குரியது.

விடை பெற்றது...
விஸ்வநாதம்...
மெல்லிசை மன்னர் M.S.விசுவநாதன்  

தமிழ்த்தாய்க்கு.. 
வாழ்த்திசைத்த மலைமகன்.. 
மெல்லிசையின் தலைமகன்..

மெட்டுக்களை..  மொட்டுக்களாக்கியவன்..
சந்தங்களை.. சந்தடிகளில் சேர்த்தவன்..

கவிஞர் வாலி சொன்னார்..
"விசுவநாதனை சந்திக்கும்வரை 
எனக்கு சோறு தின்ன வழியில்லை..
சந்தித்தபின்.. 
எனக்கு சோறு தின்ன நேரமில்லை"

கலை வித்துக்களை உருவாக்கிய விருட்சம்..
கண்ணதாசனை உயர வைத்த பொக்கிஷம்..

பாட்டுக்கள் உள்ளவரை..
பாமரர்கள் உள்ளவரை..
விசுவரூபம்.. 
மங்காது... மறையாது..

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR