தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, May 19, 2014

TMTCLU 
தஞ்சை மாவட்ட மாநாடு


அன்பான தோழர்களே! தோழியர்களே!!

         நமது தஞ்சை மாவட்ட மாநாடு 06-05-2014 அன்று உயர் தலைவன் ஜெகன் பிறந்த மண் திருத்துறைபூண்டியில் ஜெகனின் வாரிசுகளாய்த் திரண்ட 300 க்கும் மேற்பட்ட தோழர்களுடன்  வெகு சிறப்பாக நடைபெற்றது. 

         மாவட்டத் தலைவர் கலைச்செல்வன் தலைமையில்,  மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் வந்தோரை வரவேற்க, மாநில இணைச் செயலாளர் தமிழ்மணி அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார். 

              திருத்துறைப்பூண்டி தோழர். தெட்சிணாமூர்த்தி அவர்களும், வேதாரண்யம் தோழர். R.K. ராஜேந்திரன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.   தோழர். கூடூர் குணா அவர்கள் அஞ்சலியுரை ஆற்றினார்.

      NFTE மாவட்டச் சங்கப் பொறுப்பாளர்கள் தலைவர் பிரின்ஸ், T. பக்கிரிசாமி, S. சிவசிதம்பரம் ஆகியோரும், TMTCLU மாநிலச் சங்கப் பொறுப்பாளர்கள் சிவசங்கரன், தாமஸ் எடிசன் ஆகியோரும் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்கள்.  
             திருத்துறைபூண்டி DE திரு. விஞஞானி அவர்களும் மாநாட்டை வாழ்த்தினார். இவர்களோடு மதுரை மாவட்டத் தலைவர் 
       திருத்துறைபூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். G. பழனிச்சாமி அவர்களும், AITUC முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். K. ராஜா அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.   

               மாநிலச் செயலர் தோழர். R. செல்வம் அவர்களும், NFTE மாநில துணைச் செயலர்கள் தோழர் G.S. முரளிதரன் மற்றும்  தோழர். K. நடராஜன் ஆகியோரும், மாநில மகளிர் அணித் தலைவர் தோழியர் A. லைலாபானு அவர்களும்   நல்லதொரு உரையினைத் தந்தார்கள். 

       மாநாட்டில் ஏகமனதாக கீழ்க்கண்ட தோழர்கள் TMTCLU மாவட்டச் சங்கப் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   

 தோழர். C. நாடிமுத்து  தலைவர்.
தோழர். D. கலைச்செல்வன்  செயலர்.
தோழர். R.K. ராஜேந்திரன் பொருளாளர்.  

           தலைவர் பட்டாபி அவர்கள் " ஒப்பந்த ஊழியர்களின் எதிர்காலம் " என்ற தலைப்பில் நீண்டதொரு கருத்துரையினை வழங்கினார். 

        இறுதியில் நிறைவுப் பேருரையாக மாநிலத் தலைவர் தோழர். R.K  அவர்கள் தோழர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில்   எழுச்சியுரையாற்றினார். 

             வரவேற்புக்குழு செயலர் தோழர். கலைச்செல்வன் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது. 
             
             இம்மாநாட்டை வெகு சிறப்பாகவும், நேர்த்தியாகவும் நடத்தித் தந்த திருத்துறைப்பூண்டி தோழர்களும், வரவேற்புக்குழு செயலர் தோழர். கலைச்செல்வன், தலைவர் T. பக்கிரிசாமி ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். 

மாநாட்டுக் காட்சிகள்:


           
























No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR