தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, March 22, 2013


தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம்
20-03-2013  - தஞ்சை 

    தஞ்சை CTMX வளாகத்தில் தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.   250 க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றது அனைவருக்கும் உற்சாகத்தை தந்தது.   மகளிரும் அதிகளவில் பங்கேற்றனர் 
     கோரிக்கைகள்  முழங்க நமது மாநிலச் செயலரால்  சங்கக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு கூட்டம் துவங்கியது. 
     கூட்டத்திற்கு தோழர் பிரின்ஸ் தலைமையேற்றார்.    மாவட்டச் செயலர் தோழர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார்.  TMTCLU  மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் அஞ்சலி உரையாற்றினார். மாநில துணைச் செயலர் தோழர். K. நடராஜன் துவக்கவுரையாற்றினார்.   மாநில துணைத் தலைவர் தோழர் திருச்சி மனோகரன் சிறப்புரையாற்றினார்.   மாநில மகளிர் அணி அமைப்பாளர்  லைலா பானுவும் உரையாற்றினார்.
    குடந்தை ஜெயபால் அவர்கள் எழுச்சியாக உரையாற்றி அனைவரையும் முருக்கேற்றினார்.   DOT காலத்திலிருந்து இன்றைய நிலைமை வரை செய்திகளை கோர்வையாக வழங்கினார்.   நமது வெற்றி ஒன்றுதான இழந்ததைப் பெறுவது மட்டுமல்ல, துறையையும் தொழிலாளியையும் காத்திடும் என்றார்.
          மாநிலச் செயலரின் சிறப்புரையும் முன்னெப்போதையும் விட வெகு சிறப்பாக அமைந்திருந்தது.  50ஆண்டுகால NFTE செயல்பாட்டில் ஏறுமுகம் தானே தவிர ஒரு சின்ன சறுக்கல் கூட இல்லாமல் செயல்பட்டதை விளக்கிப் பேசினார்.    BSNLEU வின் திறமையின்மையும், ஒன்றுபட்ட செயல்பாட்டில் அக்கரையின்மையும்தான் இன்றைக்கு இவ்வளவு நெருக்கடியை நம்மீது திணித்திருக்கிறது.   இவைகளை சரி செய்வது மட்டுமல்ல, பென்சனைக் காத்திடவும், நமது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தில் மாற்றமும் கொண்டு வர வேண்டும் என்றார். 
      இலங்கை அரசுக்கு    ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நமது மாவட்டம் சார்பாக 7500 ரூபாய் தேர்தல் நிதி வழங்கப்பட்டது. 
         இறுதியாக நமது மாவட்டப் பொருளர் தோழர் T. பக்கிரிசாமி அவர்களின் நன்றியுரையோடு கூட்டம் நிறைவுற்றது.      
படங்கள் கீழே:



























         

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR