தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, December 19, 2014

செய்திகள் 

 மார்ச் 2015க்குள் மாநில அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு 
மாநிலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 
மார்ச் 2015க்குப்பின் வரும் விண்ணப்பங்கள் மார்ச் 2016ல்தான் பரிசீலிக்கப்படும் என கூறப்படுகின்றது.
 எனவே தோழர்கள் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிவு அடிப்படை பணிக்கு விண்ணப்பம் அனுப்புவது சம்பந்தமாக 
டெல்லி தலைமையகம் 15/12/2014 அன்று 
கீழ்வரும் விளக்கங்களை அளித்துள்ளது. 
  • ஏற்கனவே டெல்லி தலைமையகத்தால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • 30/09/2014 தேதி வரை 55ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெபரிவு  அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை
    ற்றிருந்த விண்ணப்பங்கள் மாநில மட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  • நீதிமன்றம்  மூலம் உத்திரவு பெறப்பட்ட விண்ணப்பங்களும், நிர்வாக கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட,  பரிதாபமான   குடும்ப சூழல் உள்ள விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  •  ஊழியர் இறந்தபோது உள்ள குடும்ப சூழல் கணக்கில் கொள்ளப்பட்டு மறு பரிசீலனை என்பது மேற்கொள்ளப்படும்.
மாற்றலுக்கு உள்ளான பல அதிகாரிகளும் ஊழியர்களும் டெல்லி தலைமையகத்திற்கு படையெடுத்து அரசியல் செல்வாக்கு மூலம் மாற்றலை ரத்து செய்ய முயற்சி செய்கின்றனர். 

இனிமேல் யாரும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது 
BSNL நன்னடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லித்தலைமையகம் 16/12/2014 அன்று எச்சரித்துள்ளது. 
ஆனால் அதே தேதியில் பல அதிகாரிகளுக்கு மாற்றலை 
மறு பரிசீலனை செய்தும் நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு CMD இன்னும் நியமிக்கப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் தனது பரிந்துரையை DOT அரசிற்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
இந்நிலையில் தற்போதுள்ள தற்காலிக CMDகளுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
22/12/2014 அன்று 30 அம்சக்கோரிக்கைகள் மீது நிர்வாகத்துடன் JAC ஊழியர் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்துகின்றது.

23/12/2014 அன்று  டெல்லியில்   அனைத்து சங்கத்தலைவர்களுக்கும் 
ERP பற்றி விரிவான விளக்கவுரை நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது. மாவட்ட மட்டங்களிலும்  ஊழியர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் ERP பற்றிய உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR