தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, May 15, 2015

JCM கூட்டாலோசனைக்குழு  
தேசியக்குழுக் கூட்ட முடிவுகள்
================================= 

நமது JCM தேசியக்குழுக்கூட்டம் 14/05/2015 
அன்று டெல்லியில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.

  • 22/07/1997 முதல் 08/09/2000 வரையிலான DOT காலத்தில் நடத்தப்பட்ட இலாக்காத் தேர்வு முடிவுகளை   SC/ST  தோழர்களுக்கு தளர்த்தி வெளியிடுவது சம்பந்தமாக DOPT  ஆள் மாகாண இலாக்காவிடம் வழிகாட்டுதல் கேட்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதலைப் பொறுத்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

  • BSNL  வழங்கும் 60:40 ஓய்வூதியப்பங்களிப்பை நிறுத்துவது சம்பந்தமாக BSNLலின் நிலையை வலியுறுத்தி DOTக்கு மேலும் கடிதங்கள் எழுதப்படும். DOT அதிகாரிகள் சாதகமாக உள்ள நிலையில் பிரச்சினை தீர வாய்ப்புள்ளது.

  • BSNL MRS மருத்துவத்திட்டத்தை மேம்படுத்துவது  சம்பந்தமாக தனி குழு அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும். 

  • 30/09/2000க்குப்பின் TM ஆகப்பணி நிரந்தரம் பெற்ற TSM தோழர்கள் பலருக்கு BSNLலில் பணி நியமன ஆணை PRESIDENTIAL ORDER வழங்கப்படவில்லை. இது வரை மாநிலங்களில் இருந்து வந்துள்ள விண்ணப்பங்கள் DOTயின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

  • மாநில அளவில் WORKS COMMITTEE அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.  மாவட்டங்களில் தொடர்ந்து பணிக்குழுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தப்படும்.

  • ஊதிய தேக்கநிலை STAGNATION மற்றும் நாலு கட்டப்பதவி உயர்வால் வந்த ஊதிய இழப்பு ஆகிய பிரச்சினைகள் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டு DOT  ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

  • மகளிர் வன்கொடுமை தடுப்புக்குழுவில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்ற ஊழியர் தரப்புக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தற்போது அதிகாரிகள் மட்டத்தில் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

  • MTNL பகுதிகளில் பணி புரியும் BSNL ஊழியர்களுக்கு ரூ.200/= இலவச பேசும் வசதி அளிப்பது  பற்றி சாதகமாக முடிவு செய்யப்படும்.

  • அந்தமான் பகுதிக்கு  சக்தி வாய்ந்த அலைவரிசை  வசதியை புதிய செயற்கைக்கோள்  மூலம் அளிப்பது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  • அந்தமான் பகுதிகளில் உள்ள ஊழியர் பற்றாக்குறையை சரி செய்யும் பொருட்டு TTA  கேடரில் புதிய ஆளெடுப்பு நடத்தப்படும்.

  • நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புற வீட்டு வாடகைப்படி வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது மத்திய அரசின் முடிவையொட்டியே அமுல்படுத்தப்படும்.

  • காலியாக உள்ள குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவது சம்பந்தமாக மேலும் விதிகளை தளர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும்.

  • நக்சலைட் பகுதிகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் படிகளும் வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படும்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR