தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, December 8, 2018

தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் 
புயல் நிவாரண நிதியளிப்பு 
===========================

கடந்த 02-12-18 அன்று கஜா புயலுக்கு ஆளான பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு லட்சம் ரூபாய் நிதியினை வேலூர் மாவட்டச் சங்கம் வழங்கியது. 

திருவாரூர் மாவட்டப் பகுதிக்கு நம்மால் வழங்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தோழர் கிள்ளி ஆர்.கே யிடம் வெளிப்படுத்திய போது தலைவர் ஆர்.கே வேலூரிடம் வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட தோழர்கள் அல்லிராஜா, சென்னகேசவன், மற்றும் வேலூர் தோழர்கள் புயல் வேகத்தில் இந்த 1 லட்சம் நிதியையும், தோழர் ஆர்.கே ஈரோட்டிலிருந்து 120 போர்வையையும் 
வாங்கி அனுப்பி வைத்தார்.

இம் முயற்சியில் ஈடுபட்ட தலைவர் ஆர்.கே, வேலூர் தோழர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.  
இத் தொகை ரூபாய் 1 லட்சத்தை CPI திருவாரூர் மாவட்டச் செயலர் தோழர். சிவபுண்ணியம் அவர்களிடம் புயல் பாதித்த ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அங்குள்ள  பயனாளிகளுக்கு  முறையாக கொண்டு சேர்ப்பதற்காக   நிதியாக வழங்கினோம்.

இந் நிகழ்ச்சியில்  மாநிலச் செயலர் நடராஜன், மாநில அமைப்புச் செயலர் பாலமுருகன், மூத்த தலைவர்  சேது, மற்றும் மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன், கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.




No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR