தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, May 19, 2019

தோழர். ஜெகன் பிறந்த நாள்!
 17-05-1931
=============================
நேர்மை, ஒழுக்கம், ஆழ்ந்த அறிவு, சகிப்புத்தன்மை இவற்றை தனது வாழ்வின் நெறிகளாகக் கடைபிடித்தவர் தோழர் ஜெகன். அவர் ஒருவருக்குத்தான் தோழர் இனிஷியல் ஆனது.  பொதுக்காசில் கை வைப்பது நெருப்பை தொடுவது போன்றது என்பார்.  அவர் குப்தாவுக்குக் கிடைத்த மாமனிதர்.

ஜெகனைப் போன்று ஒருவரைப் பார்க்க முடியாது.   குப்தா போல் இனி ஒருவர் பிறக்கப் போவதுமில்லை  எனவும் பேசுகிறார்கள்.  இது சரியான பேச்சா! இது ஒரு தப்பித்தல் கொள்கை ( Escapism ) என்பேன்.  தானும் சரியாக முயல்வதில்லை, சரியாகும் போக்கில் வளர்பவரையும் அங்கீகரிப்பதில்லை என்றால் எப்படி நல்ல மாற்றம் வாய்க்கும்.  
அவர்களைப் பின்பற்ற முடியாதவர்கள், அவரிடமிருந்து தலைமைப் பண்பை கற்றறியாதவர்கள்  ஜெகன், ஜெகன் என்று உருகுவதும், அவருக்கு விழா எடுப்பதும் செயற்கையானதே.

ஒரு பாரதிதான்.  ஒரு பட்டுக்கோட்டையார் தான், ஒரு காந்திதான்.  அதுபோல்தான் ஜெகனும், குப்தாவும்.  ஒருவர் போல் மற்றவர்கள் நிச்சயம் உருவாகலாம். உருவாகியும் இருக்கலாம். அதைக் கண்டறிய, ஆதரிக்க, மனமோ, நேரமோ  நமக்கு இல்லை. ஆனால் அவர்களே வர முடியுமா? முடியாது.

அன்றைக்கு எளிமை, புன்சிரிப்பு, தியாகம் என்று பன்முகத் தன்மை கொண்ட அவரை ஆதரித்து பின் தொடர்ந்தவர்கள் பலர். ஆனால் அவர்கள் அதைத் தொடர்ந்து தொடரவில்லை. 

அவரைப் போற்ற வேண்டும், பின்பற்ற வேண்டும் என்று நாம் விரும்பினால் அவர் பிறந்த நாளில், நினைவு நாளில் உறுதி எடுக்க வேண்டும்.  அவரைப் போல் வாழ்வது, அவரது அணுகுமுறையை கைக்கொள்வது என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

அதை நாளையிலிருந்து முயற்சிப்போம்!முனைவோம்!!

நன்றியுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.








No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR