தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, February 19, 2012

உடல் தானம் தந்த உத்தமர்.

உத்தமரைப் போற்றுவோம்.

     தோழர் சி. ராஜகோபால் அவர்கள் கடந்த 14-02-2012 அன்று தமது 75 ஆவது வயதில் மறைந்தார்.    இவர் அம்மாப்பேட்டை TM தோழர் காமராஜ் அவர்களின் தந்தையாரும், திருச்சி TTA தோழர் சரவணன் அவர்களில் தாத்தாவுமாவர்.   இவர் தன்னுடம்பை 15 -02 -2012 அன்று தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு தானமாகத் தந்தார்.  
     பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு தமது இறுதி மூச்சு வரை கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர். சாதி, சடங்கு மறுப்பாளரான இவர் அனைத்து மதத் தோழர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் என்பதோடு குடும்ப நண்பராகவும் திகழ்ந்தவர். 1969 முதல் 1979 வரை திருவாரூர்  புதுத் தெருவில்  கவுன்சிலராகப் பணியாற்றியவர்.   இவர் பல குடும்பங்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி வேலை  வாய்ப்புக்களையும்  பெற்றுத் தந்திருக்கிறார். 
     15-02-2012 அன்று அவருடம்பு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டபோது டாக்டர்கள் அனைவரும் வந்து வணங்கி உடலைப் பெற்றுச் சென்றது அனைவரையும் நெகிழ வைத்தது. 
     இருந்தவரை தனது செயலால் பிறருக்கு உதவியாக வாழ்ந்தவர், தான் இறந்த பின்னும் தனது உடலால் மருத்துவத் துறைக்கு உதவுகிறார்.
     அவரது தியாகத்துக்கு தலைவணங்கி,  அவர்தம் குடும்பத்தாருக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

தகவல்: 
தோழர். K . நடராஜன்,
மாநிலத் துணைச் செயலர், தஞ்சை.

மண்ணுக் குள்ளே மக்கி மறைய
தன னுடம்பை தந்திட மறுத்து
மருத்துவத் துறைக்கு தந்து உயர்ந்த 
மானுட நேயம் வாழ்த்திப் போற்றுவோம்!

                              -கவிஞர். இக்பால், தஞ்சை.  
                                                 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR