தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, July 8, 2021

 தோழர் கா. கிள்ளிவளவன், மாவட்ட செயலாளர் 

NFTE-BSNL, தஞ்சை மாவட்டம். 

இந்த தோழரின் வரலாற்றை விக்கிப்பீடியா மூலம் கூட பதிவிடலாம்.

நான் இவரோடு கூட பயணித்தவரை,

1.அன்பும், அக்கறையும், அரவணைப்பும் உள்ள தோழர். 

2.ஆடம்பரமும், ஆதிக்கத்தையும் விரும்பாத ஆற்றல் மிக்க தோழர். 

3.இயற்கை விவசாயத்தை தன் மூச்சாக கொண்ட தோழர். 

4.ஈடில்லா இழப்பை அடுத்தடுத்து சந்தித்த தோழர். 

5.உண்மையை,உயர்வை,உழைப்பை இவர் தன் கைவசம் வைத்து தவழ வைத்த தோழர். 

6.ஊனமுள்ள சம்பவத்தையும், நிகழ்வுகளையும், சொற்களையும் தகர்த்து எறிந்து தனக்கென்று ஒரு விதியை விதித்த தோழர். 

7.எண்ணத்தையும், உறுப்பினர் எண்ணிக்கையையும் தமிழக தொழிற்சங்க வரலாற்றில் பல மடங்கு அதிகரித்து தனக்கென ஒரு பாணியை வகுத்த தோழர். 

8.ஏறுபிடித்து ஏற்றம் கண்டும், தன்னை ஏறி நசுக்குவோரையும் கூட ஏணிப்படியில் ஏற வைத்து அழகு பார்த்த தோழர். 

9.ஐயத்தோடு யாரையும் பாராமல் தன்னோடு அழைத்து வந்து, வைத்து அவர்களையும் வளர விட்ட தோழர். 

10.ஒற்றுமையை உருவாக்கியும்,ஒவ்வாமை உள்ளோரையும் ஒருங்கிணைத்த தோழர். 

11.ஓடி ஓடி உழைக்கும் வர்க்கம் தன் கூட இருந்தா(ல்)லும் இல்லாவிட்டாலும் தான் ஓடி ஓடி வந்து செயலாற்றி வரலாறு படைத்த தோழர். 

12.ஔடதம் போன்று அறிவுரை வழங்கி உணர வைத்த தோழர். 

13.எஃகு போன்ற கூர்மை, மதிநுட்பம் கொண்டு சுமார் 30 வருடம் இலாகா பணி, தொழிற்சங்க பணி ஆற்றி எந்த தோழரும் குறைகூறா வண்ணம் செயல்பட்ட தோழர் 30.06.2021 அன்று இலாகா பணியை நிறைவு செய்கிறார். 

தோழருக்கு எனது வீர வணக்கத்தை சொல்லி எல்லாம் வல்ல இயற்கை வளங்களும் தோழரையும், குடும்பத்தாரையும் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்ளுகிறேன். 🙏🙏🙏🙏🙏

P. சுந்தரராஜன், 

மாவட்ட துணைத் தலைவர், 

NFTE-BSNL, 

தஞ்சாவூர். 

=====================================================================

கிள்ளிக்கு பணிஓய்வு வாழ்த்துக்கள்!!!💐💐💐

மேலவாசல் பேப்பர் ஆலையில் தொடங்கி கர்ஜித்த குரல்!

மஸ்த்தூராய் உழைத்த கூடத்திற்கு

மாஸ் ஆன குரல் !

அதிகாரிகளின் ஆணவத்திற்கு அதிர் வெடியான குரல்!

காவேரி தண்ணீருக்கு ரோட்டில் கத்திய குரல்!

விவசாய கூலிக்கு கூவிட்ட குரல்!

மஸ்த்தூரின் நிலையான வேலைக்கு போரிட்ட குரல்!

கிள்ளியின் குரல் ஓய்வு அறியாது விண்ணிலும் மண்ணிலும் உம்குரல் ஒலிதிட வேண்டும்!

வாழ்க பல்லாண்டு!!!

அன்புடன் 

சேரன்குளம் A.நாகராஜன் TT MNG

==================================================================

கா. கிள்ளிவளவன் 

மாவட்ட செயலர் NFTE 

30/06/21ல் பணி ஓய்வு 

பெறுகிறார். நல்ல 

தொழிற்சங்கவாதி

எல்லோரிடமும் நன்மதிப்பை 

பெற்றவர். அவரின் ஓய்வு 

காலம் அமைதியாகவும் 

சந்தோஷமாகவும் அமைய

இறைவனை வேண்டுகிறேன்.

                   K. சண்முகசுந்தரம் 

       மாவட்ட துணை செயலர்  

                            NFTE.

===========================================================

இன்று பணி நிறைவு பெறும் தோழர் கிள்ளிவளவன் மா.செ.  NFTE  அவர்களின் பணி நிறைவு காலம் சிறக்க தணிப்பட்ட முறையிலும் நமது கிளையின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவண்

AMF .ஜெயசீலன்

கிளைச் செயலர்

ALBSNLPWA

பட்டுக்கோட்டை

==================================================================

தஞ்சை மாவட்டச்செயலர்..

தோழர் கிள்ளிவளவன்... அவர்கள்

இன்று 

இலாக்காப் பணியில் இருந்து 

பணிநிறைவு பெறுகின்றார்...

மற்றும் புதுவை மாவட்டச்செயலர்

தோழர். தங்கமணி இன்று இலாக்காப் பணியில் இருந்து பணிநிறைவு பெறுகின்றார். ... இவர்கள் உடைய பணி நிறைவு காலம் சிறக்க வாழ்த்துக்கள். 

NFTE விருதுநகர்  மாவட்டச்சங்கம்.

================================================





No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR