தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, July 31, 2012

தமிழ்நாட்டில் TTA  நீதிமன்ற வழக்கு

     நமது தோழர்கள் 96 பேருக்கான TTA பாஸ் செய்த வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.   அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எட்டப்பட்டுள்ளது.

     1. கடந்த காலத்தில் சென்னை உயர்நீதி மன்றம்தான் இந்த தேர்வை ILLEGAL  என்று சொன்னதே தவிர, மாநில நிர்வாகம் நமது தோழர்களுக்கு எதிராக இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

     2. இந்த வழக்கை CAT க்கு மாற்றாமல் மதுரை உயர்நீதி மன்றத்திலேயே நடத்திட வேண்டுமென நமது தோழர்கள் வேண்டிக் கொண்டதை அடுத்து நிர்வாகம் மதுரை உயர்நீதி மன்றத்திலேயே நடத்த ஒத்துக் கொண்டுள்ளது.

     3. வக்காலத்து பைல் தாக்கல் செய்வதில் இருந்த காலதாமதம் தவிர்க்கப்பட்டுள்ளது.   மீண்டும் வழக்கு 01-08-2012 ல் வர இருக்கிறது.

     அப்போதைக்கப்போது  நமது மாநிலத் துணைச் செயலாளர் தோழர் நடராஜன் அவர்கள் இந்த வழக்கு சம்பந்தமான உதவியை மாநிலச் சங்கத்திடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.     சளைக்காமல் நமது மாநிலச் செயலரும் தலையிட்டு அதை சரி செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். 

     அனைத்து  தோழர்களுக்கும் TTA  POSTING கிடைத்திட தஞ்சை மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

Tuesday, July 17, 2012


கலை இலக்கிய முகாம்: 27-07-2012 வெள்ளிக்கிழமை கடலூர்
 
 

Saturday, July 14, 2012



வேண்டுகோள்!

     சமீப காலமாக நமது வெப் சைட்டுகளில் உலா வரும் செய்திகளில் சில, பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.   இது எங்கே, துவங்கியது? இதை எப்படி முடிப்பது? என்று தெரியாமல் தொடர்கிறது.   இதிலிருந்து வெளிவருவது எப்படி?   எப்போது முடித்துக் கொள்வது? யார் முடித்து வைப்பது என்பது போன்ற குழப்பமான சூழ்நிலையும்  நீடிக்கிறது.   
     நமது அகில இந்திய போராட்டம், அதை ஒட்டி எட்டப்பட்ட ஒப்பந்தம், ஒப்பந்தத்தை ஒட்டி வந்த விமர்சனம் என்று தொடங்கி, விமர்சனம் தனி நபர் விமர்சனமாக மாறி, விமர்சனம் - எதிர் விமர்சனம் என விஸ்வரூபம் எடுத்து, 
     எது குறித்து விமர்சனம் எழுந்ததோ, அது பின்னுக்குத் தள்ளப்பட்டு, விமர்சனம் திசை மாறிப் போய்விட்டது.   இந்த விமர்சனங்கள் பொது எதிரியான அரசும், அரசின் ஊழியர் விரோதக் கொள்கையும் என்ற நிலையில் இருந்து நம்மை விலக்கி  வெகு தூரத்துக்கு  கொண்டு வந்ததோடு, நமக்குள்ளேயே மன வருத்தங்கள்   மற்றும் புரிதலை பாழாக்கும் சூழ்நிலையில் நிறுத்தியுள்ளது.   
     போராட்ட குணமும், தியாகமும், தோழமையோடு விட்டுக் கொடுத்து பழகும் பாரம்பரியமும் கொண்ட நமது சங்கத்தினை / நமது தலைவர்களை விமர்சிக்க போட்டிச் சங்கங்களுக்கு உரிமை கிடையாது.   அதே நேரத்தில் நமது வெப் சைட்டுகளில் நடத்தும் விமர்சனப் போராட்டத்தைப் பார்த்து போட்டி சங்கங்களின் மத்தியில் நமது சங்கம் ஏளனப்படுத்தப்படுகிறது.   NFTE  காரர்கள் தங்களுக்குள்ளாகவே முட்டி மோதிக் கொள்கிறார்கள் என்று ரசிக்கிறார்கள்.   அவர்கள் ரசிப்பதில் நமக்கு ஆச்சரியம் எதுவுமில்லை.
     நமது முன்னாள் தலைவர்களில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்களும் - மறைந்த தலைவர்களும் செய்திட்ட தியாகம், சகிப்புத் தன்மை இவை யாவற்றையும் நாம் மறக்கவும் இல்லை.   அதற்கு நிகராக  தற்போது பொறுப்பில் உள்ள தலைவர்கள் யாவரும் தியாகத்தில், போராட்ட குணத்தில், விட்டுக் கொடுப்பதில், அன்பு காட்டுவதில், அரவணைப்பதில், பிறர் துன்பம் துடைப்பதில் நிறைவானவர்களாகவே இருக்கிறார்கள். 
     பெரும் குற்றவாளிகளாக நாங்கள் நிற்கிறோம்.   காரணம் உங்களுக்கு அடுத்த தலைமுறையினராகிய நாங்கள் உங்களின் தியாகம் போற்ற மறந்து, உங்களின் நலனைக் காட்டிலும், எங்களின்  கோரிக்கை பற்றியே உங்களிடம் கேட்டிருக்கிறோம்.
     தலைவா! உடல் நலமாய் இருக்கின்றீர்களா? எனக் கேட்டதில்லை.   எந்தச் சூழலில் உள்ளீர்கள் எனப் பார்த்ததில்லை.   எங்கள் பிரச்சினையைப் பற்றியே பேசி இருக்கிறோம்.
     முன்னாள் தலைவர்களின் தியாகத்தை / வீரத்தை போற்றிய நாம் / நாங்கள் நிகழ்கால  இயக்கக் கர்த்தாக்களை, அவர்தம், தியாகத்தை, வீரத்தை போற்ற மறந்த குற்றவாளிகள்.
     தற்போதைய சூழலில், அனைவரது வேண்டுகோள் யாதெனில், போட்டிச் சங்கங்களின் பேச்சுக்கு இடமளிக்காமல், நமக்குள்ளாகவே பேசித் தீர்ப்போம் பிரச்சினைகள் எதுவாகினும்!
     எனவே, ஆரோக்கியமான விவாதத்தை அரங்கத்துள் நடத்துவோம்!  எதிரிகளின் வாயடைப்போம்!!
     தலைவர்களே! உங்களின் தொழிற்சங்க / அரசியல்  மாணவர்கள் நாங்கள்.   உங்களின் அடி ஒட்டி நடப்போம்.  நடந்ததை மறந்து நற்செய்தி கூறுவோம்!
லிடியா மெர்சி திருமணத்திற்கு வருகை தரும் 
தலைவர்களை, தோழர்களை தஞ்சை மாவட்டச் சங்கம் அன்புடன் வரவேற்று மகிழ்கிறது.





Friday, July 13, 2012





Friday, June 29, 2012

DA உயர்வு

  • IDA 4.8% உயர்ந்துள்ளது.
                (56.7+4.8 = 61.5 )
              ஜூலை 2012 முதல் IDA  61.5

Friday, June 15, 2012


ஜூன் 12 போராட்ட உடன்பாடு குறித்த மாநிலச் செயலரின் அறிக்கை.

Tuesday, June 12, 2012

போராட்டம் வெற்றி!

                  தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் நாளை முதல் நடைபெறவிருந்த கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு தற்போது  ஒத்தி  வைக்கப்பட்டுள்ளது.  பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   78.2 சதவீத கிராக்கிப்படி இணைப்பு செய்திட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.  விபரம் விரிவாக நாளை.          

               அனைத்துச் சங்க தலைமைக்கும், போராட்டத்திற்கு எழுச்சியூட்டிய, பங்கேற்க தயாராகவிருந்த தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

Monday, June 11, 2012




      இன்று மாலை CMD உடன் நமது தலைவர்கள் நடத்திய  பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.  எனவே திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் 13-06-2012 முதல் துவங்கும்.  வேலை நிறுத்தத்தை 100 % வெற்றிகரமாக்கிட திட்டமிடுவோம்.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR