தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, January 12, 2018

12-01-1863  -  04-07-1902



இன்று ஜனவரி-12, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்.

வாழ்க்கையில் துன்பங்களைக் களைய அவர் காட்டும் வழியை
எனக்கும், உங்களுக்குமாக இங்கு நினைவுபடுத்திக் கொள்ள
விரும்புகிறேன்.


ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் – சுவாமி விவேகானந்தருக்கும்
இடையே நிகழ்ந்த ஒரு உரையாடல் –
சுவாமி விவேகானந்தர் – நாம் ஏன் எப்போதும்
மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறோம் ?

ராமகிருஷ்ண பரமஹம்சர் – துன்பத்தையே நினைத்து
கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகி விட்டது.
அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
வி – கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் எப்படிஉற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்…?
ரா – எப்போதும் – இனி எப்படி போகப்போகிறோம் என்று
அச்சப்படுவதை விட, இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய்,
எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார்.
உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக் கொள்.
இழந்தவைகளை அல்ல.
வி – இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும்
விஷயம் எது ?
ரா – துன்பப்படும்போது –
“எனக்கு ஏன் ?”,
“என்னை மட்டும் ஏன் ?”
என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை
கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.

வி – வாழ்க்கையில் மிகச்சிறந்தவைகளை
நான் அடைவது எப்படி ?
ரா – உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள்.
நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள்.
எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு.
இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை
பெற கடைபிடிக்க வேண்டிய நியதி.
வி – கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்
பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று
தோன்றுகிறது.
ரா – கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை..!
(There are no unanswered prayers …!)
அச்சத்தை விடு. நம்பிக்கை கொள்.
வாழ்க்கை என்பது தீர்வு காணப்பட வேண்டிய
ஒரு புதிர் தானே தவிர, பிரச்சினை அல்ல.
எப்படி வாழ வேண்டும் என்று மட்டும்
நாம் அறிந்துகொண்டால்,
வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறி விடும்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR