தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, June 18, 2013

காஞ்சி வலைத்தளம் -காக்கட்டும் கண்ணியம்


காஞ்சிவலைதளத்திற்கு கனிவான வணக்கங்கள்........நான் மாவட்டசெயலராய் பொறுப்பேற்றதிலிருந்து தஞ்சை வலைதளத்தை நடத்திவருகிறோம்.தோழர் சீனாதானாவும் ,நானும் வெப்சைட் நிர்வகிக்கிறோம் ,தற்போது அதே நிலைதான் தொடர்கிறது ;ஏதோ புதிதாய் கண்டுபிடித்ததை போல எங்களின் மாவட்ட செயலருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக website நடத்துவதாக விஷமத்தனமாக  எழுதிஉள்ளீர்கள் .நான் எழுதியுள்ள விஷயத்தை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் .தோழர் மதியை குறை கூறியுள்ளேனா?அல்லது திருச்சியில்  விழா நடத்தப்படும்  விதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளேனா? தேவையில்லாமல் தோழர் பட்டாபி குறித்தும் அவர் வகிக்கும் மாநிலச்செயலர் பொறுப்பையும் மற்றும் என்னையும் சிறுமை படுத்தி எழுதியுள்ளதிலிருந்து உங்களின் சிந்தனை /மன வக்கிரம் வெளிப்பட்டுள்ளது .தொழிலாளி வர்க்க போராட்ட களத்தில் எனது 18 வயது முதல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறேன்.பயமுறுத்தல் ,அச்சுறுத்தல் ,மிரட்டல் இவைகள் யாவும் முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்தும் அதே காலாவதியான நடைமுறை வாசகம் உங்கள் எழுத்தில் தெரிகிறது .இது தொழிலாளி வர்க்க நடைமுறை பாதையிலிருந்து நீங்கள் விலகியதன் அடையாளம் .
தேவையில்லை தோழரே! விமர்சனம்/சுயவிமர்சனம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கும் /கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இயல்பாய் இருக்க வேண்டிய நற்குணங்களில் ஒன்று .உங்கள் எழுத்தில் அது தெரியவில்லை குணக்கேடு தான் தெரிகிறது.

  அச்சுறுத்தலும் -அஞ்சுதலும்
  பயமுறுத்தலும்-பயந்துபோதலும்
  அடக்குதலும் -அடங்கிபோதலும்
  மிரட்டுதலும் -மிரண்டுபோதலும்
  ஒதுக்குதலும் -ஒதிங்கிபோதலும்
நமது வர்க்க குணமல்ல -நாம் எல்லோரும்
ஒரே பாசறையில் தான் வர்க்கம் பயின்றவர்கள்
தேவையின்றி என்னை மேலும் எழுதவைக்காதீர்கள் .


நன்றி ,
K .NATARAJAN ,TTA /PSM ,
ACS ,NFTE -BSNL ,
THANJAVUR .

6 comments:

  1. உளரல் அதிகமாயிட்டு இருக்கு நடராஜா
    கொஞ்ச நாள் கம்முனு கிட

    ReplyDelete
  2. உளரல் அதிகமாயிட்டு இருக்கு நடராஜா
    கொஞ்ச நாள் கம்முனு கிட

    ReplyDelete
  3. கொச்சையாய் அபத்தமாய் எழுதும் உங்களுக்கு கருத்துக்கள் உளறலாய் தான் தெரியும்,தமிழை நன்கு கற்கவும்.தெளிய எழுதவும்.நடராஜா அநீதிக்கு எதிராய் தொடர்ந்து எழுதுங்கள்.போலிகளின் முகத்திரையை கிழியுங்கள்.

    ReplyDelete
  4. உசுப்பேத்தியே நடராஜனை ரணம் பண்றேங்கேளாயா?

    ReplyDelete
  5. நடராஜா நீங்கள் சரியாய் எழுதி உள்ளீர்கள் ,ஏசுவோர் ஏசட்டும் ,கவலைபடாதீர்,தொடரட்டும் உம் பணி ,,,

    ReplyDelete
  6. நடராஜா நீங்கள் சரியாய் எழுதி உள்ளீர்கள் ,ஏசுவோர் ஏசட்டும் ,கவலைபடாதீர்,தொடரட்டும் உம் பணி ,,,

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR