தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, August 30, 2017



29-08-17    
அன்புத் தோழர்களே! 
அனைவருக்கும் வணக்கம்.     கடந்த 26-08-17 அன்று நமது இரண்டாவது மாவட்டச் செயற்குழு பட்டுக்கோட்டையில் காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 
தலைவர் T. பன்னீர்செல்வம் அவர்கள் மாவட்டச் செயற்குழுவை தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட துணைச்செயலாளர் தோழர். D. கலைச்செல்வன் அவர்கள் முன்னிலை வகித்தார்.மாவட்டச் செயலர் தோழர்  கிள்ளி அவர்கள் 8 மாத செயல்பாட்டறிக்கையை முன்வைத்து விரிவாகப் பேசினார்.  பின்னர் அமைப்பு நிலை விவாதத்தை மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் தோழியர் லைலாபானு துவக்கி வைத்து உரையாற்றினார்.  செழுமையான விவாதங்களை மாவட்டச் சங்கத் பொறுப்பாளர்களும், கிளை செயலர்களும் முன்வைத்தனர். தோழர்கள் வீரபாண்டியன், சிவசிதம்பரம்,நாடிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  
இறுதியாக மாநிலச்செயலர் தோழர் நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். 3 வது  PRC பற்றியும், போராட்டங்களில் ஒற்றுமை இல்லாத சூழலுக்கு தெளிவான விளக்கமளித்தும், எதிர்காலத்தில் ஒன்றுபட்ட போராட்டத்திற்கான திட்டமிடல் பற்றிய விபரத்தையும் எடுத்துக் கூறினார்.  110 தோழர்கள் பங்கேற்ற இச்செயற்குழு தோழர். பட்டுக்கோட்டை விஜயராகவன் நன்றி கூற இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR