தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, November 30, 2010

ஒய்வு பெரும் தலைவர்களை வாழ்த்துகிறோம்!

     நமது மாநிலத் தலைவர் தோழர் S. தமிழ்மணி அவர்களும், மாநிலத் துணைத் தலைவர்  தோழர்  குடந்தை  ஜெயபால்  அவர்களும்  இன்று  ( 30-11-2010 ) அலுவலகப் பணியிலிருந்து ஒய்வு பெறுகிறார்கள்.   

     அலுவலகத்திலும், தொழிற்சங்கத்திலும்  நிறைவான பணியாற்றி ஒய்வு பெரும் தலைவர்களே உங்களை NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் வாழ்த்திப் பெருமை கொள்கிறது. 
 
     நெருக்கடியான காலகட்டங்களில் நம்மோடு இயைந்து வாழ்ந்தவர்கள்.   உழைத்துக் களைத்தவர்கள்.   வியக்கத்தக்க முன்னேற்றங்களை நமக்குப் பெற்றுத் தந்தவர்கள்.  பணி நிறைவுக்  காலம் அவர்களுக்கு ஓய்வைத் தரட்டும்.     

     நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அளவின்றி பெற்று சிறப்புடன்  வாழ  வாழ்த்துகிறோம்.  

                           அன்புடன், S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர், தஞ்சை. 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR