தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, July 20, 2014

NFTE - BSNL
மன்னை கோட்டம்.

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் மன்னை கோட்ட நிர்வாகத்தை கண்டித்து தொடர் போராட்டம்.

கண்டன ஆர்ப்பாட்டம்.
22-07-2014 செவ்வாய் மாலை 5-00 மணி 

                            தொடர் உண்ணாவிரதம்
                          23-07-2014 முதல் 

கோரிக்கைகள்:

   1. மன்னார்குடியில் நடைபெற்ற TM கவுன்சிலிங் உத்தரவை அமுல்படுத்து!   பாரபட்சம் காட்டாதே.

   2. மாவட்ட நிர்வாகமே! நிர்வாக விதிமுறைப்படி உத்தரவு போடுவதும்; பிறகு போட்ட அந்த உத்தரவை ரத்து செய்வதை கைவிடு!

   3. மாதத்தில்  இரண்டாம் சனிக்கிழமை விடுமுறையை ரத்து  செய்து வெளியிட்ட உத்தரவை மறு பரிசீலனை செய்திடு.

   4. மன்னை  கொட்ட அலுவலகத்தில் பாதுகாவல் பணிக்கு Ex Service Man ஐ பணியமர்த்திட வேண்டும்.

   5. தொலைபேசி சந்தாதாரர்களுக்கு தொலைபேசி பில்கள் அவர்களுடைய முகவரிக்கு முறையாக அனுப்பிட வேண்டியும், அவர்களுடைய சிரமத்தை தவிர்த்திட கோரியும்.

   6. ஊழியர்கள் மீது முறையான விசாரணை இல்லாமல் நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும். 
   7. தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி பழுதுகளை நீக்குவதற்கு தேவையான கேபிள்கள் மற்றும் Drop Wire வழங்கிட வேண்டியும், மன்னார்குடி மற்றும் கூத்தநல்லூர் பகுதிக்கு கேபிள் ஜாயிண்டர் பணிக்கு காண்ட்ராக்ட் ஊழியர்களை அதிகப்படுத்த கோரியும்,  காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கு 10-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கக் கோரியும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  மேற்கண்டவாறு 
                                         கண்டன ஆர்ப்பாட்டமும், 
                             தொடர் உண்ணாவிரதப் போராட்டமும்                                                                                    நடைபெறும். 

  தோழர்களும் தோழியர்களும் திரளாய்  பங்கேற்க வேண்டுகிறோம்.

                                    தோழமையுடன், 
                                    போராட்டக்குழு,
                    மன்னை கிளை & கூத்தாநல்லூர் கிளை.

Sunday, July 6, 2014


*** முகவரி இழந்த நண்பா உனக்காக***
யாரிடம் சென்று ஞாயம் கேட்பாயோ...
பலமாடி கட்டிடத்தை
சில நொடியில் 
இடித்து விட்ட விதியிடமா...
மழைக்கு நீங்கள் ஒதுங்க,
மழையே உங்களை விழுங்க,
யாரோ செய்த பிழைக்கு
உங்கள் உயிரை
விலை கேட்ட இயற்கையிடமா...
விதிகளை மீறி அனுமதி தந்து,
விடியும் முன் உங்கள்
விதியினை மாற்றிய
அரசிடமா....
பெரும் பொருள் ஈட்ட,
வரும் இருள் மறந்து
ஏழைகள் இவர் கோழைகள்
என்று எண்ணிய முதலாளிகளிடமா....
உங்கள் மரணம்
இயற்கையின் பிழையாம்..
இல்லை என்கிறோம்...
யார் காதிலும் விழவில்லையாம்...
அய்யோ பாவம் !!!!
பணம் ஈட்ட
நீங்கள் பணயம் வைக்க பட்டீர்களா..!!
பணத்தின் குணம் காட்ட
இவ்வுலகில் இருந்தே விரட்டி விடபட்டீர்களா...!!
வாதாட வக்கீல் வரபோவதில்லை,
வந்தாலும்
உண்மை நிலைக்க போவதில்லை...
இயற்கை அறியும்,
ஒரு நாள் வாய்மை வெல்லும்..
இன்னொரு முகலிவாக்கம்
இந்த தமிழகம் பார்க்க வேண்டாம்...
இன்னொரு முறை
எங்கள் உறவுகள் சாக வேண்டாம்....!!!!
- முத்துகுமார் மாணிக்கம்



ஜூலை 4
சுவாமி விவேகானந்தர் 
நினைவு தினம் 

விவேகானந்தரின் பொன்மொழிகள்

        * கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா  இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால்  நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட  நாத்திகனாக இருப்பதே மேல்.

        * உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி  வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு  உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே.  குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின்  குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை  அல்லவா.

        * செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது  மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.  அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து;  அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

        * வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும்  அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது  பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக  அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை  இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

        * உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம்.  நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை  கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே  ஒழுங்காகிவிடும்.

அஞ்சலி!

NFTE இயக்கத்தை திருச்சி மாவட்டத்தில் வலிமை ஆக்கிய முக்கிய தலைவர்களில் ஒருவரும், மாநில, மாவட்ட சங்க பொறுப்புகள் ஏற்று திறம்பட பணியாற்றிய  தோழருமான

வெங்கடேசன் 

அவர்கள் 05-07-2014 அன்று இரவு இறந்துவிட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவிக்கின்றோம்.

அவருக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவிக்கின்றோம். 

இறுதி அஞ்சலி நிகழ்வு திருச்சி, ஸ்ரீனிவாசா நகர், அவரது இல்லத்தில் 06-07-2014 அன்று மாலை 04:00 மணி அளவில் நடைபெற உள்ளது.

Wednesday, June 25, 2014

அட்வான்ஸ் ஆகா கொடுக்கப்பட்ட போனஸ்,

கேபிள் பகுதியில் பணியாற்றும் தோழர்களுக்கு  அட்வான்ஸ் ஆகா கொடுக்கப்பட்டது போனஸ்,ஒப்பந்தகாருக்கும் ,நிர்வாகத்திற்கும் நன்றி,நன்றி. நிரந்த தொழிலாளர்களுக்கு போனஸ் மறக்கஅடிக்கபட்ட ஒன்றாகிவிட்டநிலையில்கேபிள் பகுதியில் 
பணியாற்றும்ஒப்பந்ததொழிலாளர்களுக்கு  கடந்த 20-6-2014 அன்று பழைய TENDERER SAMIYAIAH 6 மாதத்திற்கான (2013 NOV TO APRIL 2014 வரை )BONUS 
Rs 1000/ payment  செய்துள்ளார்.may  2014 முதல் 2014 sep வரையில் புதிய tenderer பாலாஜி agency payment செய்யும்.
HOUSE  KEEPING  TENDER புதிதாக விடப்படஉள்ளது.
சம்பள உயர்வு,புதிய போனஸ்,EPF,ESI,WEEKLY OFF,  
 I /D  CARD போன்றவற்றை உறுதி படுத்திட வேண்டும் ,,,,, 
  தகவல் TMTCLU மாவட்டசங்கம்   

 நாடிமுத்து  கலைசெல்வம்   R.K.ராஜேந்திரன்   
    TMTCLU மா.த          TMTCLU மா.செ                       TMTCLU மா.பொ

Tuesday, June 24, 2014

போன் மெக்கானிக் 
இலாக்காத்தேர்வு 

தமிழகத்தில் 2013ம் ஆண்டிற்கான போன்மெக்கானிக் 50 சத காலியிடங்களுக்கான  தேர்வு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014 
  • காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம் 
  • இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு தேர்வுத்தாள் - SECTION -I & SECTION-II 
  • எளிய முறைத்தேர்வு - OBJECTIVE TYPE  
  • 100 மதிப்பெண்கள். 
  • தவறான பதிலுக்கு 25 சத மதிப்பெண் கழிக்கப்படும். NEGATIVE MARKS.
  • பொதுப்பிரிவு தோழர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 37ம் பெற வேண்டும்.
  • SC/ST தோழர்கள் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 30ம் பெற வேண்டும்.
  • கல்வித்தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி 
  • தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள்: 1413
  • பொதுப்பிரிவு: 1101 - SC-208, ST =104
  • சேலத்தில் மட்டும் காலியிடங்கள் இல்லை..
  • உடல் ஊனமுற்றோர் காலியிடங்கள்: 79
  • வயது: 01/07/2013 அன்று பொதுப்பிரிவு=40  OBC=43 SC=45 ST =45
  • தகுதியுள்ளோர்: TMAN/GRD/RM/TSM தோழர்கள்..

Saturday, June 21, 2014

சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு

சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு மனநிறைவான செயற்குழு .
தேசியக்கொடி தோழியர் லைலா ஏற்றி வைத்தார்.சம்மேளனக்கொடி 
தோழர் குன்னூர் ராமசாமி ஏற்றி வைத்தார்.தோழர் பாலகுமாரன் 
மற்றும் மாநிலசங்கத்தின் சார்பாக தோழர் சென்னகேசவன்
 வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.லட்சம்தலைம ஏற்றார்
 .
தோழர் ராஜா அஞ்சலிவுரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சிநிரலை மாநில செயலர் அறிமுகம் செய்து பேசினார்.தோழர்கள் மாநிலப்பொருளாளர் அசோக்ராஜ் வரவு,செலவு கணக்கை சமர்ப்பித்தார்.தோழர்கள் கோவை சுப்பராயன்,சம்மேளன செயலர் கடலூர் ஜெயராமன் ,மதுரை சேது,சேலம் மூத்த தோழர் M.S, தமிழ்மணி,குடந்தை ஜெயபால்,சிவில் ஆறுமுகம்,CGM அலுவலக  முரளி,S.S.கோபாலகிருஷ்ணன் ,தோழர் R.K ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 

சேலம் தோழர்களின் உபசரிப்பு ,நிகழ்ச்சி ஏற்பாடு யாவும் வியக்க வைத்தது. RJCM செயல்பாடு மற்றும் பணிக்குழு பற்றிமுனனணித்தோழர்கள் தங்கள் கருத்துக்களை 

கருத்தாழமுடன் எடுத்துரைத்தனர். 450 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டனர் . மாநில/மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் முழுமையாக விவாதத்தில் கலந்து கொண்டனர் .


BSNL நிறுவனத்தின் மேல் நடத்தப்படும் தாக்குதல் ,INFRASTRUCTURE 
SHARING,HR UTILISATION,ஒலிக்கதிர் நன்கொடை ,மாவட்ட மாநாடுகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டது.    
11 மாவட்டங்கள் வருகிற AUG 2014 இறுதிக்குள் மாநாடுகளை 
நடத்திட உறுதியளித்தது ,, 

ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச்செயலர் தோழர்.செல்வம் அவர்கள் 17/07/2014 அன்று சென்னையில்  நடைபெற இருக்கும் ஒப்பந்த ஊழியர் போராட்டத்திற்கு அனைவரையும் அழைத்தார்

Thursday, June 12, 2014

இரங்கல்


நமது அகில இந்தியத்தலைவர் 
தோழர்.இஸ்லாம் அகமது அவர்களின்
துணைவியார் 
திருமதி. ரஷிதா பேகம் அவர்கள் 
உடல்நலக்குறைவால் 
12-06-2014 அன்று இயற்கை எய்தினார்
என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

துணைவியாரின் பிரிவால் வாடும் தோழருக்கு 
நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.
ஜூன் - 12

தோழர். விச்சாரே நினைவு தினம்


தோழர்.விச்சாரே
வீழ்ந்தது   NFTE என்னும் எக்காளம் மாற்றி 
  எழுந்தது  NFTE என இரும்பூதெய்த வைத்த
வீழாத்தலைவன்விச்சாரே
நினைவு போற்றுவோம்.




Saturday, June 7, 2014


 ஜூன் - 7 
தொழிற்சங்க...பிதாமகன்...   
தோழர்.ஜெகன் நினைவு தினம்...

   

தோழர். ஜெகன் 17-05-1931-ம் ஆண்டு பிறந்து 75 ஆண்டுகள் வாழ்ந்து 
07-06-2006-ம் ஆண்டு மறைந்த மனித நேயப் போராளி... 
தோழர்.ஜெகன் மறைந்து 8 ஆண்டுகள் தொலைந்து விட்டது.
தன் வாழ்நாளில் 50 ஆண்டுகளுக்குமேல் 
தொழிலாளிக்காக வாழ்ந்து மறைந்த வர்க்கப் போராளி...

அடிமட்ட தொழிலாளியாய் வாழ்க்கையை தொடங்கிய 
நம் தோழர்களின் ஒவ்வொருவர் வாழ்க்கை பயணத்திலும் 
நிழலாய் துணை நின்றவர் நம் தோழர். ஜெகன்...

தோழர். ஜெகனின் நினைவுகள்... 
நமக்கு மாறாத உற்சாகத்தையும்... தெம்பையும் அளிக்கிறது...
பொறுமை... சகிப்புத்தன்மை... போர்குணம்... 
சக தோழரிடம் பழகும் பாங்கு... 
நேர்மையான தொழிற்சங்க நடைமுறை...
நாம் இன்னும் கற்றுத் தேற வேண்டி இருக்கிறது என்பதை...
உணர்வோம்... ஒப்புகொள்வோம்... இந்நாளில்...

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR