தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, January 10, 2019


நமது மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் 2018 க்கான
2 மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை
ஏற்கனவே, நாம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை 
மன்னையில் மையப்படுத்தி நடத்தி இருக்கின்றோம்.
இதற்கிடையில் இன்று மாலை 5000 ரூபாய் சம்பளம் போட்டுள்ளதாகவும், அதிலும் 350 ரூபாய் 
பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம்.
இது என்ன அணுகுமுறை என்று நமக்குத் தெரியவில்லை!

வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி,
முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி 

பகுதிகள் கஜாப் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட 
பகுதிகள் மட்டுமல்ல! கேபிள் பழுதுகள் மீட்புப் 
பணியிலும் சிரமப்படும் பகுதிகள்.

இவற்றையெல்லாம் நிர்வாகமும்ஒப்பந்ததாரரும் 
உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இதை உணர்த்திடத்தான் இந்தப் போராட்டம்.

நமது கோரிக்கைகள்:
• 2 மாத சம்பளத்தையும் முழுமை
யாகத் தர வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 7 ம்
தேதிக்குள் சம்பளம் 

போடப்பட வேண்டும்.
காரணமில்லாமல்,
அறிவிப்பில்லாமல் 
முன்னதாக பிடித்தம் ஏதும் செய்யக் கூடாது.
போனஸ் நிலுவைத்
தொகையினை உடனடியாக
அளித்திட வேண்டும்.

தோழர்கள் திரளாகப் பங்கேற்றல் அவசியம்
வாருங்கள் தோழர்களேகளத்தில் சந்திப்போம்!!
வெற்றி காண்போம்!!

தோழமை வாழ்த்துக்களுடன்,

கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், NFTE.


டி. கலைச்செல்வன்,
மாவட்டச் செயலர், TMTCLU.


சி. நாடிமுத்து,
மாவட்டத் தலைவர், TMTCLU.


ஆர்.கே. ராஜேந்திரன்,
மாவட்டப் பொருளர், TMTCLU.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR