தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 30, 2019

மாறாதவைகளைப் பற்றி கவலை எதற்கு தோழா!
மாற்றம் ஒன்றே நமது திறவுகோல்!!
=================================
சரியோ, தவறோ எல்லாம் நமக்குள்ளே! தொண்டர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள்!  ஏனெனில் அவர்களுக்கு கிடைத்த விபரம் அப்படி! நாம்தான் அதை விளக்க வேண்டும் என்று பொறுத்துப் போவார் ஜெகன்.   நாமெல்லாம் ஜெகன் இல்லை. அதனால் நம்மிடம் பொறுமை இல்லை. 
இயக்கம், சித்தாந்தம் இதை தூக்கிப் பிடிப்பவர்கள், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கக் கூடாது.  எது சரி, எது தவறு என்பதை காலம் தீர்மானிக்கும். 

தோழர் மாரி, கடலூர் ஆனந்தன் இவர்களின் வசை பாடும்  சொல்லாடல்கள் அமைப்பிற்கு நல்லதல்ல. ஒன்று சொன்னால் அது பத்தாய் திரும்பும்போது குழாயடிச் சண்டையாக மாறிவிடும். (குழாயடிச் சண்டையில் பேசப்படும் வார்த்தைகள் மிகவும் அசிங்கமானவை என்று மக்களால் 

பேசப்படுகிறது.) எனவே, அதைத் தவிர்த்து விடுங்கள்.

தெரிந்தோ, தெரியாமலோ நம்மைப் பிளக்க நாமே இடம் கொடுத்து விட்டோம்.  இன்று அதில் மாற்றம் வரும்போது, தடுப்பணைக் கட்டும் போது கொஞ்சம் பொங்கத்தான் செய்யும். தானாய் அடங்கப்போகும் அதை தடுப்பது எதற்கு? தேவையில்லை தோழரே! 


எதை, எதையோ கற்பனை பண்ணிக்கொண்டு எங்கள் மாவட்டத்திலும் தான் போட்டிச் சங்கம் துவங்கினார்கள்.  என்ன ஆச்சு!  போட்டிச் சங்கம் துவக்குவதற்கு இங்கு எந்த முகாந்திரமும் இல்லை. RGB பிரச்சினையில் எதிர்பார்த்தது நடக்கவில்லை. பட்டாபி எப்போதும் போல.  இது ஒரு காரணமா!  
பட்டாபியைப் பிடிக்காதவர்களை எல்லாம் பார்த்து கரெக்ட் பண்ணாரு சென்னைத் தலைவர்.  சம்பந்தமில்லாமல் NFTCL துவக்கினார்கள்.  அதற்கு தஞ்சை டவுனையும், திருவாரூர் டவுனையும்          இரையாக்கினார்கள். இதனால் பாதிக்கப்பட்டது அந்தத் தோழர்கள்தான். எங்கள் மாவட்டத்தின் தலைவரும், பொருளருமே  போட்டிச் சங்கத்தில் இருந்ததினால், அவர்களாகவே  செயல்படாமல்  போனார்கள்.  மாவட்டச் செயல்பாடுகளில் எங்களை எதிர்த்து எவரும் நிற்க முடியாது.  ஏனென்றால், நாங்கள் செயல்படும் திறனும், துணிச்சலும், நேர்மையும் மிக்கவர்கள். 

இனி ஒரு பிரச்சினையும் இல்லை. தோழர்களும், தலைவர்களும் தாய்க் கழகத்திற்கு திரும்பத் தொடங்கி விட்டார்கள். நல்லதொரு மாற்றம்தான். 

தோல்வியைக் கண்டு துவளுவதும், வெற்றியைக் கண்டு துள்ளுவதும் 
கூடாது என்பதை உணர்வோம்!. 

இன்றைக்கும் மாவட்டம் முழுமையும் ஒப்பந்தத் தொழிலாளிக்காக போராடுபவர்கள், பெற்றுத் தருபவர்கள் நாங்களாகத்தான்  இருக்கிறோம் என்பதை தஞ்சை TMTCLU பெருமையாகக் கூறிக்கொள்ள முடியும்.  இல்லை, இல்லை நாங்கள்தான் என்று இங்கு போட்டிச் சங்கம் கூட கூறாது. 


வருகின்ற எங்களது மாவட்ட மாநாடு  அனைவரையும்  ஒன்றிணைத்த மாநாடாகத்தான் இருக்கும்.  அதைத் தவிர வேறு வழியில்லை!

அகில இந்திய அளவில் சங்கம் துவங்குவதற்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் சங்கம் துவங்கப்படும்போதுதான் ஒப்பந்தத் தொழிலாளியின் பிரச்சினையை  மேலும் தீவிரமாக கொண்டு செல்ல முடியும். காஷ்மீருக்கும், கன்னியாகுமரிக்கும்  இடையே உள்ள மாநிலங்களில் சங்கம் உருவாக்கப்பட வேண்டும். அது உயிர்துடிப்புடனும் இருக்க வேண்டும். இது நம்மால்தான் முடியும். 

எனவே, அன்பார்ந்த மஸ்தூர் தோழர்களே!  குறிப்பாக திருவாரூர் மற்றும் தஞ்சை டவுனில் பணியாற்றும் தோழர்களே!  இவ்வளவு நாட்களும் என்ன சாதித்தோம்! யார் சாதித்தார்கள் என்பதை நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள்.  எனவே, இனியும் நீங்கள் காத்திருக்க வேண்டாம். உடனே என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இனி உங்களோடும் நான்!


காலம் இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வரும். அதுவரை
காத்திருப்போம்! விழிப்போடு செயல்படுவோம்!

தோழமையுடன், 

கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR