தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, December 26, 2017


தாட்சாயிணி
ஆர். பட்டாபிராமன் 

இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் தலித் உறுப்பினர்.

தாட்சாயிணி வேலாயுதம் இன்றுள்ள இளையதலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டியபெயர். விடுதலை இந்தியாவின் கனவுகள் குறித்து பெருமித பார்வை கொண்ட ஒருவர்.இந்தியாவின் அரசியல் சட்ட நிர்ணயஅசெம்பிளிக்கு சென்ற 15 பெண்களுள் ஒருவர்.அங்கு இடம் பெற்ற ஒரே தலித்(அரிசன)பெண்மணியும் அவர்தான்என்பது வரலாற்றுமுக்கியம் வாய்ந்த அம்சம். தற்காலிகநாடாளுமன்ற அவையில் அவர் 1946 முதல் 1952வரை சிறப்பாக செயல்பட்டார். அவர் அரசியல்நிர்ணய சபைக்கு செல்லும் போது  அவரின் வயது 34  மட்டுமே. சிறு வயதிலேயே பெரும் பொறுப்புகளுக்கு தயாராகும் பயிற்சியும் பக்குவமும்  குடும்ப சூழலில் , சமுக சூழலில் கிடைக்கப்பெற்றது.

கேரளா சமூகத்தில் நிலவிவந்த சாதியஏற்றத்தாழ்வுகளின் சூழலில்தான் புலையர்சமூகத்தில் தாட்சாயிணி முலவக்காடு கிராமம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 1912ல் பிறந்தார்.  தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் பெரும் சமுககேட்டிற்கு ஆளாக்கப்பட்டிருந்த சூழல்மேலாடைகூட போடமுடியாது. தெருவில் செல்லமுடியாது.நிமிர்ந்து  பார்த்துவிட முடியாது. ஆபரணங்கள்அணிந்து செல்லவும் தடையிருந்தது. அப்போது சாதியக் கொடுமைகளை எதிர்த்து நாராயணகுரு, அய்யங்காளி இயக்கங்கள்வலுப்பெற்றசூழல் நிலவியது.
அய்யங்காளி 1904லேயே புலையர்களுக்கானபள்ளியை தொடங்கியிருந்தார். அய்யங்காளியும்கற்பி, ஒன்றுசேர் என்கிற முழக்கத்தை வைத்தார். தாட்சாயிணி தந்தை வேலுத குஞ்சன் ஆசிரியராக இருந்தவர். அவரின் சகோதரர்கிருஷ்ணதி ஆசான் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக இருந்தார்.. குஞ்சன்வீட்டில் புலைய குடும்பத்து சிறுவர்களுக்குபாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. அவர்களுக்குசமஸ்கிருதம் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டது.கிருஷ்ணதி தங்களுக்கு தடையாக வைக்கப்பட்டிருந்த சங்கீதம், சமஸ்கிருதம்ஆகியவற்றை கற்றார். புலையன் மகாசபையில்அனைவரும் கூடுவதற்கு ஏற்பாடு, ஆபரணங்கள்அணிவது, தலைமுடி வெட்டிக்கொள்ள ஏற்பாடு,சாதி எதிர்ப்பு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.  முலவக்காடு பகுதியில் உள்ளபுனித ஜான் தேவாலயம் கட்ட கிருஷ்ணாதி நிலம்கொடுத்து உதவினார்
கிருஷ்ணாதி ஆசான், கே பி வல்லான் ஆகியோர்1913ல் புலையர் மகாசபை அமைத்துஉரிமைகளுக்காக போராடத்துவங்கினர்.தாட்சாயிணி சமுக கட்டுக்களை மீறி மேலாடைஅணிந்தார். பள்ளிப்படிப்பு, கல்லூரி எனசென்றார். பட்டப்படிப்பு முடித்த முதல் தலித்பெண்மணி என்கிற வரலாற்றையும் அவர் தன்சாதனையில் சேர்த்துக்கொண்டார். கொச்சிஅரசாங்கத்தின் கல்வித்தொகை மூலம்இச்சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது.சென்னை பல்கலையில்தான் அவர் பட்டம்பெற்றார்.
கொச்சின் அரசாங்க பள்ளியில் தாட்சாயிணி1935-42வரை  திருச்சூர் பெரிகோதிகராஉயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகபணியாற்றினார். அங்கும் தீண்டாமையின்கேடுகளை உணர்ந்தார். தன் குடும்ப அரசியல்பின்புலம் மீது பெருமிதம் கொண்டு  கொச்சிசட்டமன்றத்திற்குள் நுழைந்தார். சென்னைராஜதானி சார்பிலான அரசியல் சட்ட நிர்ணயசபை உறுப்பினர்களில் ஒருவராக அங்குஇடம் பெற்றார்.
தாட்சாயிணி காந்தி, அம்பேத்கார் என்கிற இருஆளுமைகளின் செல்வாக்கில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். சட்டமுன்வரைவுஎன்பதை தாண்டி அரசியல் சட்ட நிர்ணயசபைசிந்திக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.வாழ்க்கை குறித்த புதிய பார்வையை அரசியல்நிர்ணயசபை நாட்டிற்கு வழங்கவேண்டும்என்றார். தீண்டாமையை சட்டவிரோதமானதுஎன்பதுடன் சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்டஅம்மக்களுக்கு நெறிசார்ந்த பாதுகாப்பைவழங்க உறுதி செய்யப்பட வேண்டியதன்அவசியத்தை அவர் வற்புறுத்தினார். மற்றஅனைவரும் உணரத்தகுந்த சுதந்திர உணர்வைதலித்களும் பெறவைக்க உதவவேண்டும்என்றார்.
நேரு பேசியவுடன் தாட்சாயிணி அரசியல் சட்ட நிர்ணய சபையில் பண்டைய இந்தியாவின்லிச்சாவி குடியரசு குறித்து  டிசம்பர் 19, 1946அன்று விவாதத்தில் எடுத்துரைத்தார்.கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான விமர்சனபார்வையும் அவ்வுரையில் காணப்படுகிறது.அதே நேரத்தில் சோசலிஸ்ட் குடியரசின்மூலம்தான் தலித்களின் நலன்களைகாக்கமுடியும் என்கிற தனது நம்பிக்கையும் அவர்தெரிவிக்க தவறவில்லை.
அதேபோல் சர்தார் வல்லபாய்உரையாற்றியவுடன் சிறுபான்மையினர் குறித்ததனது பார்வையை அவர் ஆகஸ்ட் 28, 1947 அன்றுநடந்த விவாதத்தில் முன்வைத்தார். தனித்தொகுதி, இட ஒதுக்கீடுஎன்பவற்றையெல்லாம் புறந்தள்ளிஉரையாற்றினார். இந்தியாவில் தாழ்த்தப்பட்டமக்கள் பொருளாதார அடிமைகளாகஇருக்கும்வரை தனித்தொகுதி,இணைத்தொகுதி, கூடுதல் சதவீத   ஒதுக்கீடுஇடங்கள் என்ற முறையெல்லாம் பயனளிக்காதுஎன தனது உரையில் அவர் கருத்துக்களைவெளிப்படுத்தினார். அனைவருக்கும் வாய்ப்புகள்நிறைந்த பொதுவான அடையாளம்தான்இந்தியாவின் எதிர்காலத்திற்கு உகந்தது எனஅவர் கருதினார். இல்லையெனில்பிரிட்டிஷ்காரர்கள் விட்டு செல்லும் சமூகமோதல்கள் அதிகரிக்கும் களமாக இந்தியாமாறும் என்கிற எச்சரிக்கை அவர் உரையில்இருந்தது.
அதேபோல்  அவர் நவம்பர் 8 1949ல் அரசியல் சட்டநகல் குறித்து கடுமையான விமர்சனத்தைஎழுப்பினார். கொள்கை கோட்பாடுகளற்றதரிசுநிலமாக நகல் இருக்கிறது என்ற காட்டமானவார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன. .கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசில்குவித்துக்கொள்வதை அவர் ஏற்கவில்லை.பிரிட்டிஷ் 1935 சட்டத்தில் சில மாற்றங்களைமட்டும் செய்து ஏற்பதுபோல் இருக்கிறது என்றார்.கவர்னர் என்கிற பதவி தொடர்வதை சாடினார்.அவசியம் எனில் 1952 பொதுத்தேர்தலில் மக்கள்வாக்கிற்குவிட்டு பின்னர்கூட முடிவெடுக்கலாம்என்றார் குடியரசு ஆவதற்கான ஜனநாயகஏற்பாக கூட அது இருக்கும் என்றார்.
தீண்டாமை குறித்து ஷரத்து இல்லாமல் இந்தியஅரசியல் சட்டம் இருக்க முடியாது என்கிறகருத்தை அழுத்தமாக தன் உரையில்முன்வைத்தவர் தாட்சாயிணி. அவர் கல்லூரிகாலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை அவர் உரையில் எடுத்துரைத்தார். தீண்டாமை எதிர்ப்புஎனக்கோரி நண்பர்கள் சிலர் அவரிடம்நன்கொடை கேட்டபோது, இதற்குகாரணமானவர்களிடம் மட்டும்கேட்டுப்பெறுங்கள். அதனால் பாதிக்கப்பட்டஎன்போன்றவர்களால் தர இயலாது எனகாரணம் சொல்லி அவர் மறுத்தார்.. தனது பள்ளி,கல்லூரி காலங்களில் பொதுவிழாக்களில்பங்கேற்கமுடியாமல் தான் கட்டாயமாக ஒதுங்கிநின்ற அவலத்தை அவர் சுட்டிக்கட்டினார்.
தீண்டாமை என்பது சட்டவிரோதமானது என்கிறதீர்மானத்தை அவையில் நிறைவேற்றவேண்டும்என தாட்சாயிணி கேட்டபோது பண்டிதநேரு இதுகாங்கிரஸ் காரியகமிட்டியல்ல தீர்மானம்போடுவதற்கு என்றார். ஆனால் கண்டிப்பாகஇப்பிரச்சனை மீதான அணுகுமுறையைமேற்கொள்ளலாம் என்ற உறுதியை அவர் தரவேண்டியிருந்தது.  ஆனாலும் மீண்டும் அழுத்தம் கொடுத்து  தனது கோரிக்கையையை அவர் வலியுறுத்தினார்ர். இச்சபையில்நிறைவேற்றப்படும் பிரகடனம் பயன்விளவிப்பதாக அமையும் என மிகத்துணிச்சலாகதன் கருத்துக்களை முன்வைத்தார் தாட்சாயிணி.தீண்டாமைக்கு எதிராக சட்டம் இயற்றினால்மட்டும்போதாது, நடைமுறையில் நாம் எப்படிநடந்துகொள்ளப்போகிறோம் என்பதைபொறுத்துதான் இந்தியா உலக நாடுகளில்தலைநிமிர்ந்து நடக்கமுடியும் என்றார் அவர்.
லிச்சாவி குடியர்சில் குடிமகன் ஒவ்வொருவரும்ராஜா என்றே அழைக்கப்பட்டனர். இன்று இடர்களுக்கு ஆளாகி பரிதவிக்கும் தலித்கள்போன்றவர் நாளை இந்தியாவில் ஆள்வோர்என்கிற நம்பிக்கையை விடுதலை இந்தியாதரவேண்டும். அந்த நம்பிக்கையில் நாம் எந்தபிரிவினையும் கோரவேண்டாம் என  ஹரிஜனஉறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்அவர். கிறிஸ்துவம் , முஸ்லீம், சீக்கியர்,அரிஜனங்கள் என எவ்வகையிலும்பிரிவினைவாதமற்ற தேசியம் உருவாக வேண்டும் என்கிற விழைவை அவர் தனதுஉரையில்  தெரிவித்தார். சர்ச்சில்அரிஜனங்களின் பாதுகாப்பிற்கு பிரிட்டிஷ்காரணம் என பீற்றுகிறார். அவர்கள் என்னசெய்தார்கள் என்கிற கேள்வியை தாட்சாயிணிஅவையில் எழுப்பினார். தீண்டாமை ஒழிக்கசட்டம் கொணர்ந்தார்களா என வினவினார்.ஏழுகோடி தாழ்த்தப்பட்டவர்களை சர்ச்சில்இங்கிலாந்து அழைத்துப்போய் எந்த பாதுகாப்பும்நல்கிவிடமுடியாது. எங்களை மைனாரிட்டி எனபேசுவதை ஏற்கமுடியாது என்றார்.அரிசனர்களும் மற்றவர்களும் இந்தியர்களாகஇங்குதான் வாழ்ந்தாக வேண்டும். அதற்குநெறிசார்ந்த பாதுகாப்புகள் உத்திரவாதமாகவேண்டும். எங்களுக்கு சுதந்திரம்இந்தியர்களிடமிருந்துதான் கிடைக்கவேண்டுமேதவிர பிரிட்டிஷாரிடமிருந்தல்ல என்றார்.
அதேபோல் முஸ்லீம் பிரதேசங்களில்நிறுத்தப்படும் இந்து வேட்பாளர்களில் ஏன் தலித்வேட்பாளர் ஒருவர் கூட இல்லை என்கிறகேள்வியை அவர் காங்கிரசாரிடம் எழுப்பினார்.தங்களை இந்துக்களாக கருதவில்லையாஎன்கிற கேள்வியை அவர் தொடுத்தார்.அரிசனங்கள் மற்றும் பிற இடர்ப்படும்சமூகத்தினரகளை கட்டாய உழைப்பிலிருந்துவிடுபட வைப்பது பாசிச சமுதாயவடிவங்கொண்ட இந்திய நாட்டில் பொருளாதாரபுரட்சியாக அமையும் என்றார் தாட்சாயிணி.மத்திய அரசின் நேரடி நிர்வாக பகுதிகள் என்கிறமுறையையும் அவர் பிரிட்டிஷ் மாடல் எனசாடினார். கவர்னர்பதவி என்பது தேவையற்றது என்கிற கருத்து அவரிடம் இருந்தது.
தலித் தலைவர்களுல் ஒருவரான வேலாயுதத்தைஅவர் காந்தி, கஸ்தூரிபாய் முன்னிலையில்வார்தா ஆசிரமத்தில் மணம்புரிந்துகொண்டார்.வேலாயுதமும் தற்காலிக நாளுமன்றத்திற்குதேர்ந்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் கருத்து மாறுபாடு கொண்டு அவர் காங்கிரசிலிருந்துவிலகினார். 1952 தேர்தலில் வேலாயுதம்கொல்லம்- மாவ்லிகரா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். விடுதலைக்குப்பின்னர் தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றம் என்பதில் கவனம் செலுத்தி செயல்பட்டுவந்தார் தாட்சாயிணி. பாரதிய மகிளாஜாக்ரதி பரிஷத்  என்கிற அமைப்பைத் துவங்கி அதன் தலைவராக செயல்பட்டார்.
( கே ஆர் நாரயணன் திருமண வரவேற்பில்)
1971ல் அடூர் தொகுதியில் பார்கவி சி பி அய்,குஞ்சாச்சன் சி பி எம் எதிர்த்து தாட்சாயிணி சுயேட்சையாக நின்று தோல்வியை அடைந்தார்.அப்போது அத்தேர்தலில் சி பி அய் பார்கவி 65 சதவாக்குகளைப் பெற்று வென்றார். சி பி எம் 30 சதவாக்குகளை பெற்றது. அவரின் உறவினர் கேஆர் நாரயணன் இந்தியாவின்  தலித் பகுதியிலிருந்து வந்த முதல் குடியரசுத்தலைவர்என்ற வரலாற்றை உருவாக்கினார்.  தாட்சாயிணி ஜூலை 20, 1978ல் இயற்கை எய்தினார். இந்திய விடுதலை கொண்டாட்டங்களில் நிற்க வேண்டிய பெயர்களில் தாட்சாயிணியும் ஒன்றாக நிலைபெறட்டும்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR