தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, October 21, 2017

பெருமகளூர் தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளி தோழர் P. பழனிவேல் அவர்கள் நேற்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு NFTE - TMTCLU  மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 
இவரது பணிக்குப் பின்னர்தான்  பெருமகளூர் இணைப்பகம் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது என்ற பாராட்டை பெற்ற தோழர்.  
           மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் அவர்கள் ஒப்பந்தத்தாரிடம் பேசி அவருக்கு ரூபாய் 3000/- கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.  
          அதே போல் அவருக்கு UAN எண் உள்ளதால் இன்சூரன்ஸ் தொகை ( ரூபாய் 2 லட்சம் ) வாங்கித் தர முயற்சி மேற்கொண்டுள்ளார். 
           
        நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்திய பட்டுக்கோட்டை கோட்டப் பொறியாளர் திரு. பிரகலாதன் அவர்கள், மிகவும் பின் தங்கிய நிலையில், 2 கைக்குழந்தையுடன் (இரட்டை) சிரமப்படும் அக் குடும்பத்திற்கு நம்மால் இயன்றதை எல்லா வகையிலும் செய்து  தருவோம்  என்று கூறி வந்துள்ளார். தோழர். கிள்ளி அவர்களும் நிதியினை திரட்டிக் கொடுப்போம் என்று கூறியுள்ளார். 
       அவரது உடல் நல்லடக்கம் இன்று 21-10-17 அன்று காலை 11 மணிக்கு பெருமகளூரில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR